Recent Articles

Sunday 23 February 2014

சாப்பாட்டுக்கே வழியில்லாமல்.. வறுமையுடன் போராடிய.. 'வாட்ஸ் ஆப்' நிறுவனர்.!

Sunday 23 February 2014 - 0 Comments



சான் பிரான்சிஸ்கோ: உக்ரைனிலிருந்து ஒன்றுமே இல்லாமல் வெறும் கையுடன் அமெரிக்காவுக்கு வந்து, தனது நண்பர் பிரையன் ஆக்டனுடன் இணைந்து வாட்ஸ் ஆப்பை உருவாக்கி இன்று பேஸ் புக்கிடம் கிட்டத்தட்ட ரூ. 1 லட்சம் கோடிக்கு விறறு உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ள வாட்ஸ் ஆப் நிறுவனர் ஜான் கோம்-மின் கதை மிக உருக்கமானது.. காரணம், ஒரு காலத்தில் அவர் சாப்பாட்டுக்கு வழியி்ல்லாமல், வறுமையுடன் வாழ்ந்து கொண்டிருந்தவர் ஆவார்.

உக்ரைனிலிருந்து வாழும் வழி தேடி அமெரிக்காவுக்கு வந்தவர்தான் ஜசன் கோம். மிக மிக வறுமையான வாழ்க்கையை சிறு வயதில் வாழ்ந்தவர்.

தனது தாயாருடன் சாப்பாட்டுக்கான டோக்கனை வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தவர் இவர். ஆனால் இன்று இவர் உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இவருடன், பிரையன் ஆக்டனும் சேர்ந்து இன்று உலகத்தின் முகத்தையே திருப்பிப் போட்டவர்கள் என்பது சாதனைக்குரிய செய்தியாகும்.

தனது வாட்ஸ் ஆப் நிறுவனத்தை பிரையனுடன் இணைந்து பேஸ்புக்குக்கு விற்றுள்ள கோம், பேஸ்புக் இயக்குநர்கள் குழுவில் ஒருவராக இணைகிறார்.

பேஸ்புக்குடன் தனது நிறுவனத்தை விற்பது தொடர்பான ஒப்பந்தத்தில் தானும் தனது தாயும் சிறு வயதில் வறுமையுடன் வாழ்ந்து வந்த இடத்தில் வைத்துக் கையெழுத்துப் போட்டுள்ளார் கோம். அந்த இடத்தில்தான் தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனமும் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கோமுக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமைதான் 38 வயதே பிறக்கிறது. இவ்வளவு சிறு வயதில் இவர் உலக மகா கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே தான் இவரது வீடு இருந்தது. கோம், யூத இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். சிறு வயதிலேயே தனது தாயாருடன் கலிபோர்னியாவுக்கு இடம் பெயர்ந்து வந்தார். அப்போது இவருக்கு வயது 16தான். சோவியத் யூனியன் உடைந்த பின்னர் இந்த இடமாற்றம் நடந்தது.

ஆனால் கோமும், அவரது தாயாரும் மட்டுமே அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தவர். கோமின் தந்தை வரவில்லை.

உக்ரைனிலிருந்து வரும்போது கோமின் தாயார், தனது மகன் பயன்படுத்திய சில பேனாக்கள், நோட்டுப் புத்தகங்களையும் கூடவே கொண்டு வந்திருந்தார். கலிபோர்னியாவில் தனது மகனைப் பள்ளிக்குச் சேர்த்தபோது புதிய பேனா, நோட்டுப் புத்தகங்களை வாங்க முடியாததால் இவற்றையேப் பயன்படுத்திக் கொண்டாராம் கோம்.

படிக்கும்போதே, பலசரக்குக் கடை ஒன்றில் தரையைத் துடைக்கும் வேலையில் ஈடுபட்டு சம்பாதித்தார் கோம்.

பழைய புத்தகக் கடை ஒன்றை அணுகி அங்கிருந்த கம்ப்யூட்டர்கள் தொடர்பான புத்தகங்களை வாங்கிப் படிப்பாராம் கோம். படித்து விட்டு திருப்பிக் கொடுத்து விடுவாராம். இப்படித்தான் நெட்வொர்க்கிங் குறித்து படித்துத் தேறியுள்ளார்.

1997ம் ஆண்டு சிலிக்கான் வேலியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிப்புக்காக சேர்ந்தார். மேலும் படிப்புச் செலவுக்காக ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பகுதி நேர வேலையிலும் சேர்ந்தார். அந்த சமயத்தில்தான் யாஹு நிறுவனத்திற்காக ஒரு வேலைக்குப் போயிருந்தபோது பிரையன் ஆக்டனுடன் நட்பு ஏற்பட்டது.

இருவரும் ஒரே வருடத்தில் மிகச் சிறந்த , நெருக்கமான நண்பர்களாகி விட்டனர். யாஹு நிறுவனத்திலேயே என்ஜீனியராக வேலையில் சேர்ந்தார் கோம்.

யாஹு நிறுவன வேலை பிடித்துப் போனதால் படிப்பை விட்டு விட்டார் கோம். இந்த நிலையில் 2000மாவது ஆண்டு கோமின் தாயார் புற்றுநோயால் மரணமடைந்தார். அப்போது கோமுக்கு மிகுந்த உறுதுணையாக இருந்து உதவியர் ஆக்டன்தான்.

இந்த நேரத்தில் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி டாட் காம் பூம் ஆக்டனுக்கு பெரும் பொருள் சேதத்தைக் கொடுத்தது. பலலட்சத்தை அவர் இழந்தார்.

2007ம் ஆண்டு இருவரும் யாஹு நிறுவனத்திலிருந்து விலகினர். ஒரு வருடம் ஜாலியாக ஊர் சுற்றிப் பார்த்தனர். அதன் பின்னர்தான் இருவரும் இணைந்து வாட்ஸ் ஆப் புரட்சிக்கு வித்திட்டனர்.. இன்று உலக இளைய தலைமுறையின் தகவல் தெய்வமாக மாறி நிற்கின்றனர்.

Sunday 16 February 2014

தொப்பையை குறைக்க சில புத்திசாலித்தனமான ஐடியாக்கள்...!

Sunday 16 February 2014 - 0 Comments



தொப்பையால் அவஸ்தைப்படுவோர் அதிகம். அத்தகையவர்கள் அத்தகைய தொப்பையைக் குறைக்க, பல்வேறு டயட், உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வார்கள். அப்படி தொப்பையைக் குறைக்க அப்டமன் பயிற்சி அல்லது அடி வயிற்று பயிற்சிகளை செய்தும் தொப்பை குறையவில்லையா? ஒரு வேளை நீங்கள் எந்த பயிற்சியையாவது செய்ய மறந்துவிட்டீர்களா? அப்படியெனில் மேற்கொண்டு படித்தால் நிச்சயம் தெரிந்துவிடும்...

அடி வயிற்று கொழுப்பை கரைக்க எந்த விதமான தனிப்பட்ட பயிற்சியும் இல்லாத பட்சத்தில், இந்த கட்டுரை எப்படி இத்தகைய கொழுப்பு உருவாகிறது என்பதையும், அதை எப்படி கரைக்கலாம் என்றும் உங்களுக்கு தெளிவாக விளக்கும்.

முக்கியமாக கீழ்வரும் சில குறிப்புகள் நீங்கள் செய்யும் பயிற்சியை நன்கு செய்ய உதவும். சரி, அது என்னவென்று பார்ப்போமா...

தொப்பையை குறைக்க சில புத்திசாலித்தனமான ஐடியாக்கள்...

எளிமையானதாகவும் சுலபமானதாகவும் உங்கள் பயிற்சியை துவங்குங்கள். உதாரணத்திற்கு சைக்கிள் ஓட்டத் தெரியாமல் உங்களால் வெகு தூரம் சைக்கிள் பந்தயத்தில் செல்ல முடியாது. அது போல துவக்கத்தில் எளிதான பயிற்சி முறைகளை மேற்கொள்ளுங்கள் - ஒரு பலகையை 20 நொடிகள் பிடித்துக் கொண்டோ அல்லது 10 முறை க்ரன்ச் (Crunch) பயிற்சியையோ செய்து வாருங்கள்.

பயிற்சி செய்வதற்கு முன் தயார் செய்வது பலர் பயிற்சி செய்வதற்கு முன் முறையாக தங்களை தயார் செய்து கொள்ள தேவையில்லை என்று நினைத்துக் கொண்டு, தங்களை சரியான முறையில் தயார் செய்து கொள்வதில்லை. கடினமான பயிற்சியை மேற்கொள்ளும் போது, தசைகளில் வலியும், காயங்களும் வீக்கங்களும் ஏற்படலாம். ஆகையால் பயிற்சிக்கு முன் 'வார்ம் அப்' செய்வது, உடலின் தசைகளில் காயங்கள் ஏற்படுவதை தடுக்கும். உதாரணமாக, சிறிது தூரம் விரைவாக நடப்பது, குனிந்து உங்கள் பாதங்களை மெதுவாக தொடுவது, மூச்சை இழுத்து விடுவது, இடுப்பை வளைத்து சில பயிற்சிகள் மெதுவாக செய்வது சிறந்ததாகும். இச்செயல்கள் உங்களை வயிற்று பயிற்சிக்கு தயார்படுத்தும்.

சுவாசம் வயிற்று பயிற்சியின் போது முக்கிய தசைகள் நன்றாக செயல்பட ஆக்ஸிஜன் இன்றியமையாததாகும். எனவே மூச்சை அடக்கக் கூடாது. பயிற்சியின் போது எளிமையான நேரங்களில் மூச்சை இழுக்கவும், அதுவே கடினமாக இருக்கும் நேரங்களில் மூச்சை வெளியே விடவும் வேண்டும். உதாரணமாக, க்ரன்ச் பயிற்சியில் மேல் எழும் போது மூச்சை வெளியே விட வேண்டும்.

கவனம் தேவை இக்கனம் 'பயிற்சியின் போது தசைகள் மட்டும் தான் முக்கிய பங்கு வகிக்கிறது என நீங்கள் நினைத்திருந்தால் அது தவறு. உங்கள் மனமும் பயிற்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆதலால் பயிற்சியின் போது டி.வி பார்ப்பதை தவிர்த்து தசைகள் மீது கவனம் செலுத்துங்கள். தசைகள் நகர்ந்து, விரிவடைவதையும் சுருங்குவதையும் உணருங்கள். இது உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.

சகலகலா வல்லவராகுங்கள் தட்டையான வயிற்றைப் பெற எல்லா பக்கங்களிலும் தசைகளை நகர்த்தி பயிற்சி செய்தால் நல்ல பலனை விரைவில் பெறலாம். க்ரன்ச் பயிற்சியில் மட்டும் கவனம் செய்யாதீர்கள். வக்ராசனா போன்று உடம்பை வளைக்கும் மற்றும் திரும்பும் விதமான பயிற்சிகளையும் செய்யலாம்.

சமநிலை வலிமையான வயிற்றைப் பெற உங்கள் வழக்கான பயிற்சியில் சில பாலன்ஸ் செய்யும் பயிற்சிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒற்றை காலில் நின்று மற்றொரு காலை தொடையின் மீது வைத்துக் கொள்வது, கைகளை தலைக்கு மேல் வைத்து உள்ளங்கைகளை தொடும் வண்ணம் வைத்துக் கொள்வது என 'விரிக்காசனா' போன்ற பயிற்சிகளையும் செய்யலாம்.

ஓய்வு எடுத்தல் உங்களின் பயிற்சி முழுமையடைய போதுமான அளவு ஓய்வு எடுக்க வேண்டும். வயிற்று பயிற்சியை அளவுக்கு அதிகமாக செய்வதால் பலன் பெற முடியாது. ஓய்வு எடுப்பதால் தசைகள் மீண்டு மேலும் உறுதியடையும்.

மெதுவாக.. நிதானமாக.. அவசர அவசரமாக பயிற்சி செய்தால் பலன் பெற முடியாது. மெதுவாகவும், நிதானத்துடனும் பயிற்சி செய்தால் சிறந்த முறையில் கொழுப்பை குறைக்கலாம்.

யோகா ஜிம்மிற்கு சென்று களைத்து விட்டதா? பெரும்பாலான யோகாசனங்கள் முக்கிய தசைகளை உறுதிப்படுத்தும். யோகாசனங்கள் உங்கள் உடலோடு, உள்ளத்தை மட்டுமே உறுதிப்படுத்துவதில்லை. மாறாக உங்களுக்கு நல்ல வளைவையும், உங்கள் மன அழுத்தத்தையும் குறைக்கிறது.

உங்களின் வயிற்று தசைகள் அதிக எடைகளை தூக்குவதால் சிறந்த பலனைப் பெறும். ஒவ்வொரு முறை பயிற்சி செய்யும் போதும், எடைகளை ஒரு சில கிலோ ஏற்றி பயிற்சி செய்வதால், இன்னும் நல்ல பலனை அடையலாம்.

சாப்பிடுவதில் கவனம் நல்ல அழகான வயிற்றினை பெற சரியாக சாப்பிட வேண்டும். ஜிம்மிற்கு தினம் சென்று கடினமான பயிற்சி செய்வதால் மட்டுமே போதாது. 'உங்கள் உணவில் புரதம், கொழுப்பு குறைவான கொழுப்புடைய பால் மற்றும் பால் சார்ந்த உணவுகள், பழங்கள் மற்றும் நல்ல காய்கள் ஆகியவை இருக்க வேண்டும்' என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

Sunday 9 February 2014

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு விடைகொடுக்கிறார்: புது கெட்-அப்பில் அஜீத்

Sunday 9 February 2014 - 0 Comments


ஒரு காலத்தில் ரொம்ப யூத்தாக காலேஜ் ஸ்டூடண்ட் மாதிரி இருந்த அஜீத் திடீரென்று வெயிட் போட்டு குண்டானார். ஆக்ஷன் காட்சிகளில் நடித்தபோது ஏற்பட்ட காயங்கள் மற்றும் உடல் சம்பந்தமான பிரச்சினைகள் காரணமாக அவரது உடலில் 24 இடங்களில் ஆபரேஷன் செய்யப்பட்டது. அதற்காக சாப்பிட்ட மாத்திரை மருந்துகளால் உடல் குண்டானது. அதன் பிறகு உடம்மை குறைத்தே தீருவது என்று கருதி ஒரு வருடம் கடுமையான உடற்பயிற்சி, டயட்டில் இருந்து உடம்மை குறைத்தார். திருப்பதி படத்தில் அவர் நடித்தபோது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மெலிந்திருந்தார். அஜீத்தின் இந்த புதிய தோற்றம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே நார்மல் தோற்றத்துக்கு மீண்டும் வந்தார்.

அதன்பிறகு எந்த இமேஜும் பார்க்காமல் தனது நடுத்தர வயது தோற்றத்தை வெளிப்படுத்தினார். ரஜினிக்கு அடுத்து தோற்றத்தின் இமேஜ் பற்றி கவலைப்படடாத நட்சத்திரமாக அஜீத் கருதப்படுகிறார். ஆங்காங்கே நரைத்த முடியுடன் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார். அதுவே ஒரு அழகாக இருந்தது. அதனால் டைரக்டர் வெங்கட்பிரபு அவரை அதே சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் மங்காத்தா படத்தில் நடிக்க வைத்தார். அதுவும் நெகட்டிவ் கேரக்டரில். அடுத்து ஆரம்பம் படத்திலும் அதே சால்ட் அண்ட் பெப்பர் லுக்கை பயன்படுத்திக் கொண்டார் விஷ்ணுவர்த்தன். இரண்டுமே ஹிட் என்பதால் அடுத்து வீரம் படத்திலும் அதே லுக்கில் வில்லேஜ் கெட்-அப்பாக மாற்றினார் சிவா.

அடுத்து அஜீத் நடிக்கப்போவது கௌதம் மேனன் படத்தில். கௌதம் மேனனுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையை தீர்க்க அஜீத்தே வழிய வந்து அவர் படத்தில் நடிக்க இருக்கிறார். "எனக்காக பிரஷ்சா ஒரு கதை ரெடிபண்ணுங்க எல்லா பிரச்சினையையும் தீர்த்துவிடலாம்" என்று கௌதமுக்கு அஜீத் நம்பிக்கையூட்ட பக்காவான ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி அஜீத்திடம் காட்டி அதற்கு ஓகேவும் வாங்கி விட்டார்.

பொதுவாக கௌதம் மேனன் ஹீரோக்களை அழகாகவே காட்டுவார். அவர் அஜீத்தை இதுவரை இல்லாத அளவிற்கு அழகான புதிய தோற்றத்தில் காட்ட இருக்கிறார். முதல் கட்டமாக சால்ட் அண்ட் பெப்பர் லுக் அகற்றப்பட்டு விட்டது. இணையதளத்திலிருந்தும், பிரபல ஓவியர்களை கொண்டும் பல வித தோற்றங்களை பிரதியெடுத்து அதில் இருந்து சிலவற்றை தேர்வு செய்து அஜீத்திடம் கொடுத்துள்ளார். அதில் ஒன்றை தேர்வு செய்திருக்கிறார் அஜீத். இப்போது அந்த தோற்றத்திற்கு மாறி வருகிறார். அதனால் நண்பர்களை சந்திப்பது பொது இடத்தில் தோன்றுதை தவிர்த்து வருகிறார். அனேகமாக கௌதம் மேன்ன படம் முடியும் வரை வெளியில் வரமாட்டார் என்கிறார்கள். படப்பிடிப்பு முழுமையாக முடியும் வரை அஜீத்தின் தோற்றம் பற்றியும், கதை பற்றியும் ரகசியம் காக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

கடல் எலி..! - வினோத கடல் உயிரினம்

கடல் எலி..!

கடற்கரையோரம் கடல் மண்ணுக்குள் இருந்து ஒரு வினோத உயிரினம் அடிக்கடி வெளிப்படும். யாராவது பார்த்துவிட்டால் நொடிப்பொழுதில் குழிதோண்டி மறைந்து கொள்கிறது. அடுத்தடுத்து கடல் அலைகள் கடற்கரை மணலில் மோதி மீண்டும் கடல் நீர் கடலுக்குள் செல்லும் சமயங்களில் கூட்டமாக வெளிப்படும் இந்த உயிரினம், சாதுர்யமாக இரையை பிடித்துக் கொண்டு மீண்டும் மண்ணுக்குள் மறைந்து கொள்கின்றன. நிலத்தில் உள்ள எலி போல் தோற்றமளிக்கும் இந்த வினோத கடல் உயிரினம்.

இந்த உயிரினம் நண்டு வகையை சேர்ந்த மச்ச நண்டு ஆகும். இதன் அறிவியல் பெயர் "எமிரிட்டா ஆசியாடிக்கா'. இது,"ஹிப்பாய்டியே' குடும்பத்தை சேர்ந்தது. உள்நாட்டு மீனவர்கள் இதை "கடல் எலி' என்று அழைக்கின்றனர். இவற்றுக்கு ஐந்து இணை கால்கள் இருந்தாலும், நண்டுகளைப் போல் வெட்டு கொடுக்குகள் இல்லை. இவை பக்கவாட்டில் நகராது. பின்னோக்கி நகரும் தன்மை கொண்டவை.

நேரில் பார்த்தால் அப்படி தெரியாது. கடற்பறவைகள், இவற்றை கண்டால் குஷியாகி பிடித்து தின்று விடும். கடற்பறவைகளிடம் இருந்து தப்பிக்க, அலை அடிக்கும் அரிப்பள்ளம் அருகே மச்ச நண்டுகள் வலை தோண்டி மறைந்து கொண்டு வாழும். இந்த மச்ச நண்டுகளுக்கு இரண்டு நீண்ட உணர்வு தண்டுகள் முகப் பகுதியில் உள்ளன. கடல் நீர் ஏற்றத்தையும் வற்றலையும் தெரிந்து கொள்ள இந்த உணர்வு தண்டுகள் உதவுகின்றன. மற்ற நண்டுகளைப் போல் இதன் ஓடுகள் தோலுரிக்கும் தன்மை உடையது.

இவற்றில் ஆண், பெண் உண்டு. சில ஆண் மச்ச நண்டுகள் ஓட்டின் அளவு 3.5 மி.மீட்டர் வளர்ந்த பிறகு, ஆண் தன்மை மறைந்து, பெண் இனமாக மாறும். அதே நேரத்தில், அது முழு வளர்ச்சி பெற்ற பெண்ணாகவும் இருக்காது. பின்பக்க பகுதியில் சினை முட்டைகள் காணப்படும். கடல் அலை கரையைத் தொட்டு திரும்பும் நேரத்தில், கடல் நீரிலுள்ள மிதவை உயிர் பொருள், மற்றும் சிறு உயிரிகளை உண்டு இவை உயிர் வாழும். மீனவர்கள் தூண்டில்களில் மீன் பிடிக்க இரையாக பயன்படுத்துகின்றனர்.

Thursday 6 February 2014

எம்.காம், எம்பிஏ பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் அதிகாரி பணி வாய்ப்புகள்..!

Thursday 6 February 2014 - 0 Comments



தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பல்வேறு கிளைகளில் காலியாக உள்ள மார்க்கெட்டிங் ஆபீசர்ஸ், அசிஸ்டென்ட் மேனேஜர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியின் விவரம்:

1. மார்க்கெட்டிங் ஆபீசர்ஸ்

தகுதி: மார்க்கெட்டிங்/ நிதி பாடங்களில் முதுநிலை பட்டப்படிப்பை கல்லூரியில் சேர்ந்து படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பில் கலை/ வணிகவியல் பாடங்களை படித்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டுகள் முன் அனுபவம்.

வயது: 31.12.2012 அன்று 40க்குள்.

சம்பளம்: ரூ.19,400 – 700/ 1 – 20,100 – 800/ 15 – 32,400. தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஓராண்டு புரொபேஷன் காலத்திற்கு பின்னர் மேனேஜர் அந்தஸ்தில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

2. அசிஸ்டென்ட் மேனேஜர்

தகுதி: வணிகவியல்/ வணிக மேலாண்மை/ கணிதம் ஆகிய பாடங்களில் முதல் தர தேர்ச்சியில் முதுநிலை பட்டம். கம்ப்யூட்டர் அறிவும் பெற்றிருக்க வேண்டும். வயது: 31.12.2013 அன்று 26க்குள். மிகவும் பிற்பட்டோர் மற்றும் பிற்பட்டோருக்கு 2 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.

சம்பளம்: ரூ.14,500 – 600/ 7 – 18,700 – 700/ 2 – 20,100 – 800/ 8 – 26,500.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.500. இதை தூத்துக்குடியில் செலுத்ததக்க வகையில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க் பெயருக்கு டிடி எடுக்க வேண்டும்.

ஆன்லைன் தேர்வு நடத்தப்பட்டு விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

http://www.tmb.in/ -என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி :

The General Manager,
Human Resources Development Department,
Tamilnad Mercantile Bank Ltd.,
Head Office, 57 V.E.Road,
Thoothukudi-628002.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.2.2014.

பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 17.2.2014.

Saturday 1 February 2014

தொலைந்த பணப்பையை கண்டுபிடிக்கும் கையடக்கத் தொலைபேசி சாதனம்...!

Saturday 1 February 2014 - 0 Comments



நம்மில் பெரும்பாலானவர்களுக்கும் பணப்பை தொலைத்துவிட்டு எரிச்சடைந்த சந்தர்ப்பங்கள் பல ஏற்பட்டிருக்கும். ஆனால் இனி பணப்பை தொலைந்துவிட்டால் தேடிய அலைந்து எரிச்சலடையத் தேவையில்லை.

இதற்காகவே தொலைந்த பணப்பையை இருக்கும் இடத்தை அடையாளம் காட்டும் தொலைபேசி சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

‘ஸ்மார் வொலெட்’ என அழைக்கப்படும் இச்சாதனம் ப்ளுடூத் மூலம் தொலைபேசியிலுள்ள எப்ஸுடன் இணைந்து செயற்படக்கூடியது.

இந்த ஸ்மார்ட் வொலிட்டினை உங்கள் பணப்பைக்குள் வைத்துவிட்டு உங்கள் தொலைபேசியில் அதற்கான எப்ஸினை நிறுவிக்கொள்ள வேண்டும். இதன் மூலம் உங்கள் பணப்பை எங்கே உள்ளது என ஸ்மார்ட் வொலெட் காட்டித்தரும்.

ஸ்மாட் வொலிட் சாதனமுள்ள பணப்பைக்கும் தொலைபேசிக்கும் இடையிலான தூரம் 30 அடி தூரத்தினைத் தாண்டினால் உடனடியாக தொலைபேசிக்கு சத்தத்துடன் தகவல் வழங்கும். இதில் கடைசியாக பணப்பை எங்கே பயன்படுத்தப்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

பணப்பை மட்டுமன்றி, திறப்பு, பெட்டி என தேவையான இடங்களிலும் ஸ்மார்ட் வொலிட்டினைப் பயன்படுத்தி பொருட்கள் தொலைவதையும் களவு போவதனையும் பாதுகாத்துக்கொள்ளலாம்.

பயன்பாட்டுக்கு இலகுவாக ஸ்மார்ட் வொலிட் 4.2 மி.மீ. தடிப்பில் மீளவும் சார்ஜ் செய்யக்கூடிய லித்தியம் மின்கலத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தேவைமிகு இச்சாதனத்தை சீனாவின் ஷங்காயைச் சோந்த ஜக் ஹு என்பவர் கண்டுபிடித்துள்ளார். தற்போது ஸ்மார்ட் வொலெட்டின் எப்ஸ் ஐ போன், ஐபொட் மற்றும் 4.3 அன்ரொய்ட் பதிப்புகளுக்கும் ஒத்திசைகின்றது. 

ஜெய்-யா ஆள விடுங்கடா சாமி..! அலறும் நடிகைகள்..!

ஜெய்-யின் செண்டிமென்டை நினைத்து அலறும் நடிகைகள்..!



சினிமா உலகைப்பொறுத்தவரை ஹிட் படங்களில் நடித்த ஜோடிகளை இணைத்து காதல் கிசுகிசுக்கள் கசிவது சகஜமாகி விட்டது. ஆனால், அதற்கு சிலர் மறுப்பு சொன்னாலும், பலர் அதை கண்டும் காணாததும் போலவே இருந்து விடுகிறார்கள். காரணம், இன்றைய நிலையில் கிசுகிசுக்கள்கூட சிறந்த பப்ளிசிட்டியாக கருதப்பட்டு வருகிறது.

அப்படித்தான் சுப்ரமணியபுரம் படத்தில் ஜெய்-ஸ்வாதி இருவரும் நடித்தபோதும் அவர்களைப்பற்றி கலர் கலராக காதல் கிசுகிசுக்கள் புகைந்தன. அதற்கு அவர்கள் எந்தவொரு மறுப்பும் சொல்லாமல், இப்படியெல்லாம்கூட இலவச விளம்பரம் கிடைக்கிறதே என்று ரசித்துக்கொண்டிருந்தார்கள்.

அதையடுத்து, எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தபோதும் ஜெய்யுடன், அஞ்சலியை இணைத்து காதல் செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து திருமணம் என்னும் நிக்கா படத்தில் ஜெய்யுடன் ஜோடி சேர்ந்த மலையாள நடிகை நஸ்ரியாவையும் அவருடன் இணைத்து வழக்கம்போல் காதல் செய்திகள் பரபரப்பாக வெளியாகிக்கொண்டிருந்தன. இதற்கு நஸ்ரியா மறுப்பு சொன்னபோதும், ஜெய் மட்டும் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தார்.

இந்த சூழ்நிலையில், ஜெய்யுடன் காதல் கிசுகிசுவில் முதலில் சிக்கிய ஸ்வாதி, சுப்ரமணியபுரம் மெகா ஹிட்டானபோதும் அதன்பிறகு படமில்லாமல் ஆந்திராவுக்கு திரும்பி விட்டார். அதையடுத்து, படுவேகமாக வளர்ந்து கொண்டிருந்த அஞ்சலியோ, எங்கேயும் எப்போதும் படத்தையடுத்து சித்தியுடன் ஏற்பட்ட பிரச்சினையால் கோடம்பாக்கத்தையே காலி பண்ணி விட்டு ஓட்டம் பிடித்து விட்டார்.

அவர்களைத் தொடர்ந்து நஸ்ரியாவோ, வேகமாக படங்களில் புக்காகி வந்தவர், இப்போது பகத்பாசிலை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறிக்கொண்டு நடிப்புக்கே குட்பை சொல்லி விட்டார். ஆக, ஜெய்யுடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய அத்தனை நடிககளுமே காணாமல் போய் விட்டார்கள்.

இந்த சேதி, தற்போது ஜெய்யுடன் நடித்து வரும் புதுமுக நடிகைகளுக்கு தெரியவர, கலவரமான மனநிலையுடனேயே இருக்கிறார்களாம்.

ஜெய்யுடன் சிரித்து பேசினால்கூட அது காதல் செய்தியாகி இந்த ஒரு படத்தோடு தாங்கள் சினிமாவை விட்டே வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், அவர் தங்களைப்பார்த்து சிரித்து பேசினால்கூட முகத்தை வெறப்பாக வைத்துக்கொண்டே நிறகிறார்களாம் நடிகைகள்.

மேலும் அடுத்தடுத்து ஜெய்யுடன் நடிப்பதற்கு கால்சீட் கேட்டு எந்த நடிகையிடம் சென்றாலும், ஆளை விடுங்க சாமி என்று அலறிக்கொண்டு ஓடுகிறார்களாம்.

உதயநிதி தயாரிப்பில் சிவகார்த்திகேயன்..!



இந்த வருடத்தின் அதிர்ஷ்ட இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன். அவரின் அதிர்ஷ்டம் 2013 லேயே ஆரம்பித்துவிட்டது.

ஒரு கல் ஒரு கண்ணாடி வெற்றிக்குப் பிறகு ஒரு வருடம் இடைவெளிவிட்ட உதயநிதி தேர்வு செய்தது சுந்தரபாண்டியனை இயக்கி பிரபாகரனை. முதல் படம் வெளிவந்த உடனேயே ரெட் ஜெயண்ட் மாதிரியான நிறுனத்தில் இரண்டாவது படத்துக்கு அட்வான்ஸ் வாங்கிக் கொள்வது அபூர்வ நிகழ்வு.

பிப்ரவரி 14 இது கதிர்வேலன் காதல் ரிலீஸ். படம் எப்படி… தேறுமா இல்லையா என்பதெல்லாம் தெரியும் முன் அடுத்தப் படத்துக்கும் பிரபாகரனையே கமிட் செய்திருக்கிறார் உதயநிதி. இந்தமுறை அவர் நடிக்கவில்லை. பதிலாக தயாரிப்பு மட்டும். நடிப்பது சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயனை வைத்து படம் தயாரிக்க உதயநிதி விரும்பியதும், சிவகார்த்திகேயன் கண்டமேனிக்கு சம்பளம் கேட்டதால் அந்த திட்டம் கைவிடப்பட்டதாகவும் சில மாதங்கள் முன் பரபரப்பாகப் பேசப்பட்டதை இப்போது நினைவுகூரவும். கருத்து வேறுபாடு தீர்ந்ததால் ரெட் ஜெயண்டில் சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இது கதிர்வேலனின் காதலுக்குப் பிறகு இந்த புதிய படம் குறித்து முறைப்படி அறிவிக்க இருக்கிறார்கள்.

ரம்மி – திரை விமர்சனம்



காதல் செய்தால் ஆளையே வெட்டும் ஒரு கட்டுக்கோப்பான கிராமத்தில் இருக்கும் கல்லூரி ஒன்றில் முளைக்கும் காதலை மையமாக வைத்துதான் ரம்மி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரியில் படிக்க இனிகோ பிரபாகரும், விஜய் சேதுபதியும் வருகின்றனர். பின்னர் அதே ஊரில் இருக்கும் ஐஸ்வர்யாவை விஜய் சேதுபதியும், காயத்ரியை இனிகோவும் காதலிக்கிறார்கள். அங்கு படிக்கும் சூரியும் இவர்களுக்கு நண்பர்களாகிறார்.

ஒருநாள், காதலித்தாகக் கூறி ஒருவனை நடுரோட்டில் அந்த ஊர்க்காரர்கள் வெட்டிச் சாய்ப்பதை பார்க்கும் இனிகோவும், விஜய் சேதுபதியும் பதறிப்போகிறார்கள். இனிகோ காதலிக்கும் காயத்ரி அந்த ஊர் தலைவரின் தம்பி மகள் என்பதால் வயிற்றில் மேலும் புளியை கரைக்கிறது. இருந்தாலும் அவர்கள் ஊர்க்காரர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் காதலித்து வருகிறார்கள்.

ஒருநாள் இனிகோ தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றுவிட்டு கல்லூரிக்கு திரும்பி வருகிறார். வந்ததும் விஜய் சேதுபதியை காணவில்லை. அப்போது அங்கு ஒரு லெட்டர் இவரது கண்ணில் படுகிறது. அதில் விஜய்சேதுபதி தான் காதலித்த பெண்ணை கூட்டிக் கொண்டு ஊரை விட்டு ஓடிவிட்டதாகவும், ‘நீயும் தப்பித்துக்கொள்’ எனவும் எழுதி வைத்திருக்கிறார்.

விஜய் சேதுபதி அழைத்துக் கொண்டு சென்றவர் ஊர் தலைவரின் மகள் என்பது அப்போதுதான் இனிகோவிற்கு தெரிய வருகிறது. இந்நிலையில், அந்த ஊர்க்காரர்கள் விஜய் சேதுபதியை கொலை செய்துவிட்டு ஐஸ்வர்யாவை இழுத்து வருகிறார்கள். இதைப் பார்க்கும் இனிகோ பதற்றத்தில் இருக்கிறார்.

இறுதியில் தனது காதலனை கொலை செய்த ஊர்க்காரர்களை ஐஸ்வர்யா பழிவாங்கினாரா? இனிகோ தனது காதலியுடன் கைகோர்த்தாரா? என்பதே மீதிக்கதை.

நிறைய படங்களில் இரண்டாவது நாயகனாக நடித்து வந்த இனிகோ பிரபாகருக்கு இந்த படத்தில் ஹீரோ அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது. தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்தியிருக்கிறார். ஆனால், இந்த படத்தின் விளம்பரங்களில் விஜய் சேதுபதியை மையப்படுத்தியே போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதனால், தியேட்டருக்கு விஜய் சேதுபதியை எதிர்பார்த்து சென்றதால் இவரை ரசிக்க முடியவில்லை. மற்றபடி, காதல், காமெடி, ஆக்க்ஷன் என எல்லாவற்றிலும் தூள் கிளப்புகிறார். தமிழ் சினிமாவில் ஹீரோவாக ஒரு ரவுண்டு வர சான்ஸ் இருக்கிறது.

விஜய் சேதுபதி இப்படத்தில் நட்பின் அடிப்படையிலேயே நடிக்க ஒத்துக்கொண்டதாக சொல்லியிருந்தார். ஆனால், இப்படத்தில் இவருடைய நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரம் இவருக்கு இல்லை என்பது வருத்தமே. ஹீரோயின் எதைச் சொன்னாலும் அப்படியே செய்யும் ஒரு மொக்கையான கதாபாத்திரம். இதை இவர் ஏற்று நடிக்காமலேயே இருந்திருக்கலாம். ரசிகர்களை ரொம்பவும் ஏமாற்றிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

நாயகி காயத்ரி முன்பிருந்ததைவிட இந்த படத்தில் ரொம்பவும் ஒல்லியாக இருக்கிறார். பார்க்கவே பாவம்போல் இருக்கிறார். இவரை வைத்து டூயட் எல்லாம் ஆடவைச்சு நம்மை பயமுறுத்துகிறார்கள். துணை நடிகையாக நடித்துவந்த ஐஸ்வர்யா இந்த படத்தில் இரண்டாவது நாயகியாக வருகிறார். கதையை தாங்கி நிற்கிற வலுவான கதாபாத்திரம் இவருடையது. ஆனால், இவருக்கு ஆரம்பத்தில் முக்கியத்துவம் கொடுக்காமல், கடைசியில் விஸ்வரூபம் எடுப்பதுபோன்ற காட்சியை வைத்திருப்பதால் ரசிக்க முடியவில்லை.

சூரிக்கு ஓரளவு நல்ல கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார் இயக்குனர். கல்லூரி காட்சிகளில் நன்றாக காமெடி பண்ணுகிறார். இடைவேளைக்கு பிறகு நல்ல குணசித்திர நடிகராகவும் மாறிவிடுகிறார். ‘கும்கி’யில் லட்சுமிமேனனின் அப்பாவாக நடித்திருப்பவர் இந்த படத்தில் ஊர் பெரியவராக வருகிறார். இவரைவிட இவருக்கு அடியாளாக வருபவர் மிரட்டுகிறார். அவருடைய வில்லத்தனமான கண்கள் பயமுறுத்துகின்றன.

இயக்குனர் ஒரு காதல் கதையை ஏன் திரில்லாக கொடுக்க நினைத்தார்? என்று அனைவர் மத்தியிலும் கேள்வி எழுகிறது. முக்கிய கதாபாத்திரங்களின் தன்மையை ரசிகர்களுக்கு சொல்லாமல் மறைத்து சஸ்பென்ஸ் வைப்பதாக கூறி, அதை காட்சிப்படுத்துவதில் கோட்டை விட்டுவிட்டார். ஆனால், விஜய் சேதுபதி படம் என நம்ப வைத்து ரசிகர்களை வரவழைப்பதில் வெற்றியடைந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். பருத்திவீரனில் ‘முத்தழகு’ கதாபாத்திரம்போல் காட்டவேண்டிய ஐஸ்வர்யாவின் கதாபாத்திரத்தை சொதப்பியிருக்கிறார். படத்தின் தலைப்புக்கும், கதைக்கும் ஏதும் சம்பந்தம் இல்லாததுபோல் இருக்கிறது.

டி.இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ‘கூட மேல கூட வச்சு’ பாடல் கேட்க இனிமையாக இருக்கிறது. பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார். ஒளிப்பதிவு படத்தில் சஸ்பென்ஸை கூட்ட உதவியிருக்கிறது.

மொத்தத்தில் ‘ரம்மி’ ஆட்டம் டம்மி.

சம்பளமா..! தனுஷா..! - சிவகார்த்திகேயன்..!

சம்பளம் பெறாமல் தனுசுக்காக நடனம் ஆடிய சிவகார்த்திகேயன்..!


தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து சூப்பர் ஹிட்டான படம் எதிர் நீச்சல்.இதில் ஒரு பாடல் காட்சியில் தனுஷ் மற்றும் நயன்தாராவும் குத்தாட்டம் போட்டு கலக்கியிருப்பார்க்ள்.தற்போது அதற்கு நன்றிக்கடனாக தனுஷ் நடிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறாராம்.

தனுஷ், அமலாபால் நடிக்கும் இந்த படத்தை தனுஷ் தனது சொந்த நிறுவனமான Wunderbar Films என்ற நிறுவனத்திற்காக தயாரிக்கின்றார். இந்த படத்தில் அனிருத் இசையமைத்த ஒரு பாடலுக்கு சிவகார்த்திகேயன் நடனம் ஆடியுள்ளாராம். இந்த பாடலுக்கு தனுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் ஆகிய மூவருமே நடனம் ஆடி கலக்கியுள்ளனராம். இந்த பாடல் காட்சியின் படப்பிடிப்பு பத்து நாட்கள் நடந்தது.


மூவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு நடனம் ஆடியுள்ளதால் இந்த பாடல் சிறப்பாக வந்துள்ளதாக நடன இயக்குனர் கூறியுள்ளார். இந்த பாடலுக்கு நடனம் ஆட அனிருத், சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் சம்பளமே பெற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பாடல்கள் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகிறது.

அடிக்கடி சிஸ்டம் கிராஷ் ஆகிறதா...? இதோ தீர்வு



இன்று என்னதான் விண்டோஸ் 8 வந்தாலும் இன்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்கள் அதையே பயன்படுத்திக் கொண்டு தான் உள்ளனர்.

இதில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து நாம் சந்திக்கும் பொதுவான குற்றச்சாட்டு, அது அடிக்கடி கிராஷ் ஆகிறது என்பதுதான். விண்டோஸ் 7 சிஸ்டம் தொடர்பாக இந்தக் குற்றச்சாட்டு அதிகம் இல்லை என்றாலும், சிலர் கிராஷ் ஆவதாகச் சொல்லி வருகின்றனர்.

கம்ப்யூட்டரில் பணியாற்றிக் கொண்டிருக்கையில், அது திடீரென கிராஷ் ஆனால், நமக்குப் பல வகைகளில் இழப்பு ஏற்படும். முக்கியமாக நாம் அமைத்த டேட்டா, டெக்ஸ்ட் மீண்டும் நமக்குக் கிடைக்காமல் போய்விடும்.

இதனை உணர்ந்தே, மைக்ரோசாப்ட் நிறுவனம், image creation tool என்ற ஒரு டூலினைத் தற்போது விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் வழங்கி உள்ளது. இதன் மூலம் நாம் விண்டோஸ் 7 சிஸ்டம் கிராஷ் ஆன பின்னர், ஓரளவிற்கு நம் இழப்பினைத் தவிர்க்கலாம்

விண்டோஸ் 7 நன்றாகவும் சிறப்பாகவும் இயங்கிக் கொண்டிருக்கையில், அதன் இமேஜ் ஒன்றை உருவாக்கி அமைப்பது நல்லது. விண்டோஸ் 7 சிஸ்டம் நன்றாக இன்ஸ்டால் செய்யப்பட்டு, தேவைப்படும் ட்ரைவர் புரோகிராம்களும், அப்ளிகேஷன் சாப்ட்வேர்களும் அமைக்கப்பட்டவுடன், அதன் இமேஜ் ஒன்றை உருவாக்க வேண்டும்.

இமேஜ் உருவாக்கக் கீழ்க்காணும் வழிகளைக் கடைப்பிடிக்கவும். Start பட்டன் கிளிக் செய்து, சிறிய கட்டத்தில் backup and restore என டைப் செய்து என்டர் தட்டவும். இது கண்ட்ரோல் பேனல் உள்ளாக Back and Restore என்ற வசதியைக் கொண்டு வரும்.

இதனைப் பயன்படுத்தி, நாம் சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் ஒன்றினை உருவாக்கலாம்; பைல்களுக்கான பேக் அப் காப்பி அமைக்கலாம்;

சிஸ்டம் செட்டிங்ஸ் முழுவதுமான சிஸ்டம் இமேஜ் ஒன்றை உருவாக்கலாம். நம் தேவைக்கேற்ப, விண்டோவின் இடது புறம் Create a system image என்ற இடத்தில் கிளிக் செய்திட வேண்டும்.

இதில் கிளிக் செய்தவுடன், சிஸ்டமானது, தான் உருவாக்க இருக்கும் சிஸ்டம் இமேஜினை சேவ் செய்திட, கம்ப்யூட்டரில் நல்ல ஒரு இடத்தினைத் தேடும் பணியினை மேற்கொள்ளும்.

இது ஹார்ட் ட்ரைவ், ஆப்டிகல் டிரைவ் அல்லது நெட்வொர்க்கில் உள்ள கம்ப்யூட்டர்களில் ஒரு இடமாக இருக்கலாம். இடம் கண்டறிந்த பின்னர், நீங்கள் இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவ்தான் சிறந்த இடமாகும். ஏனென்றால், சிடிக்களில் இதனைப் பதிய இடம் போதாது.

நெட்வொர்க் இணைப்பில் உள்ள கம்ப்யூட்டர்களின் ட்ரைவில் பதிய எண்ணினால், இணைப்பில் டேட்டா செல்லும் வேகம் அதிகமாக இருக்க வேண்டும். எங்கு பதிந்தாலும், பதியும் இடத்தில், இமேஜ் பைலைப் பதிய இடம் இருந்தால் தான், இமேஜ் உருவாக்கும் பணி தொடங்கப்படும். இல்லை எனில், இடப் பற்றாக்குறை என செய்தி கிடைக்கும்.

பேக் அப் செயல்பாட்டைத் தொடங்க, Start Backup பட்டனில் கிளிக் செய்திட வேண்டும். இமேஜ் உருவாக்கும் பணி முடிய அதிக நேரம் எடுக்கும். பேக் அப் இமேஜ் தயாரிக்கும் பணி முடிந்தவுடன், முடிந்ததாக செய்தி கிடைக்கும். பேக் அப் சைஸ் என்ன என்றும் காட்டப்படும்.

எனவே முதலில் விண்டோஸ் 7, ட்ரைவர்கள் மற்றும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் பதிந்த வுடனேயே இமேஜ் பேக் அப் ஒன்று எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. இந்த இமேஜ் பைலை எங்கும் எடுத்துச் செல்லும் வகையிலான போர்ட்டபிள் ட்ரைவில் சேவ் செய்வதும் நல்லது.

இமேஜ் உருவாக்கம் முடிந்ததாக அறிவிப்பு வந்தாலும், இன்னும் ஒரு முக்கிய வேலை மீதமிருக்கும். ரெகவரி எனச் சொல்லப்படும் மீட்சிப் பணியில் அது மிக மிக முக்கியமானது. System Repair டிஸ்க் ஒன்றினை உருவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

இதற்கு Start பட்டனில் கிளிக் செய்து, நீள் கட்டத்தில் system repair என டைப் செய்து, என்டர் தட்டவும். இதனை ஒரு சிடி அல்லது டிவிடியில் சேவ் செய்திட வேண்டும்.

எனவே காலியாக உள்ள சிடி அல்லது டிவிடியை, அதன் ட்ரைவில் செருகிப் பின்னர் Create Disc என்பதில் கிளிக் செய்திடவும். இது ஒரு சிறிய இமேஜாகத்தான் இருக்கும் என்பதால், இதற்கு ஒரு சிடியே போதும். இவ்வாறு உருவாக்கப்பட்ட சிடியை, பத்திரமான ஓர் இடத்தில், தேடினால் உடனே எடுத்துப் பயன்படுத்தும் வகையில் வைத்திட வேண்டும்.

மேலும், விண்டோஸ் 7 சிஸ்டம் எப்போது கிராஷ் ஆகிறதோ, அப்போது இவற்றைப் பயன்படுத்தலாம். முதலில் System Repair டிஸ்க்கைப் பயன்படுத்தி, சிஸ்டத்தினை இயக்கவும்.

இயங்கி, பின்னர் நமக்குக் கிடைக்கும் டயலாக் பாக்ஸில், Restore Your Computer Using a System Image என்பதில் கிளிக் செய்திடவும். இது உங்கள் கம்ப்யூட்டரில் எங்கு உள்ளது என பிரவுஸ் செய்து என்டர் தட்டினால், மீட்சிப் பணி தொடங்கும்.

இந்த வேலையும் சிறிது நேரம் கூடுதலாக எடுத்துக் கொள்ளும். ஆனால் இமேஜ் உருவாக எடுத்துக் கொள்ளும் அளவிற்கு நேரம் எடுக்காது. சிஸ்டம் இமேஜ் உருவாக்கிய போது கம்ப்யூட்ட்டர் எந்த நிலையில் இருந்ததோ, அந்நிலைக்குக் கம்ப்யூட்டர் மீண்டும் கொண்டு வரப்படும்.

பொதுவாக, விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பல வகையிலும் ஒரு மேம்படுத்தப்பட்ட சிஸ்டமாகும். எனவே அது கிராஷ் ஆவது என்பது அரிதாக நடக்கும் ஒரு செயலாகும். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாம் மேலே சொன்ன இரண்டையும் மேற்கொள்வது நல்லதுதானே.

Thursday 30 January 2014

சூர்யா அளித்த சர்ப்பிரைஸ் பார்ட்டி..!

Thursday 30 January 2014 - 0 Comments



இயக்குனர் லிங்குசாமி தயாரித்து இயக்கிவரும் அஞ்சான் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மும்பையில் நடைபெற்றுவருகின்றன. சூர்யா - சமந்தா முதல் முறையாக இணைந்து இப்படத்தில் நடித்துவருகின்றனர். இப்படம் வருகிற ஆகஸ்டு 15 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சான் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரான, பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவனுக்கு இந்த ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக நேற்று சூர்யா, சந்தோஷ் சிவனுக்கு சர்ப்பிரைஸ் பார்ட்டி அளித்துள்ளார்.

அஞ்சான் திரைப்படக்குழுவினர் பெரும்பாலானோர் கலந்து கொண்ட இந்தப் பார்ட்டியில் மேலும் பல நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். அஞ்சான்
திரைப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துவரும் யு.டி.வி.மோசன் பிக்சர்ஸ் நிறுவனத்தைச் சார்ந்த தனஞ்செயன் கோவிந்த், தனுஷ், ஸ்ருதிஹாசன், பிரபுதேவா, ரித்தேஷ் தேஷ்முக், அனிருத், ராகினி ஆகியோரும் இந்தப் பார்ட்டியில் கலந்துகொண்டனர்.

சன்னிலியோன் என்னா பொண்ணுடா..! - மனம் திறக்கிறார் ஜெய்..!



சன்னிலியோன் ஒரு அதிசயமான நடிகை என்று கூறியுள்ளார் ஜெய்.

உலக அளவிலான கவர்ச்சிப்பிரியர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் சன்னி லியோன்.

வட இந்தியாவில் இருந்து ஆந்திராவுக்கு இடம்பெயர்ந்தவர், அதே வேகத்தில் கொலிவுட்டிலும் வடகறி மூலம் என்ட்ரி கொடுத்து தமிழ்நாட்டு கவர்ச்சிப் பிரியர்களை கலக்கி எடுக்க வந்துள்ளார்.

ஆனால், இந்த படத்தில் அவரது பேவரிட் காஸ்டியூமான டூ-பீஸ் உடையணியாமல் தாவணி கட்டி ஆடியதாக செய்தி பரவியிருக்கிறது.

இந்த நிலையில், அப்படத்தின் நாயகனான ஜெய், அந்த பாடலில் தான் முழுக்க முழுக்க சன்னியுடன் நனைந்தபடி ஆடியதாக தனது அபிமானிகளிடம் சில தகவல்களை லீக்அவுட் செய்து வருகிறார்.

அதோடு, நான்கூட முதலில் சன்னி லியோனை நெருங்கிப்பழக தயக்கத்துடன்தான் நின்றேன். ஆனால், அவர் என்னுடன் சகஜமாக பழகினார்.

உலக அளவில் ரசிகர்களை கட்டுக்குள் வைத்திருக்கும் மிகப்பெரிய நடிகை, என்னுடன் அப்படி பழகியது ஆச்சர்யமாக இருந்தது என்று கூறியுள்ளார்.

‘ஐ’ படத்தை தவறவிட்ட ஜீவா - வடை போச்சே...!



‘ஐ’ படத்தில் வில்லன் வாய்ப்பை தவறவிட்டுவிட்டாராம் ஜீவா.
சமீபத்தில் வெளியான ‘என்னென்றும் புன்னகை’ படம் வெற்றியடைந்த மகிழ்ச்சியில் உள்ளார் ஜீவா.

இவர் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படம் ‘யான்’. இப்படத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். இப்படத்தில் நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன.
இந்நிலையில் சமீபத்தில் ஜீவா அளித்த பேட்டி ஒன்றில் ங்கரின் ‘ஐ’ படத்தில் வில்லன் கதாபாத்திரம் தனக்கு வந்ததாகவும் அதை தான் தவர விட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும் கூறுகையில், ‘நண்பன்’ படம் முடிவந்தவுடன் ஷங்கர் சார் ‘ஐ’ படம் எடுப்பதில் பிசியாக இருந்தார். அவர் ஏற்கனவே ஹீரோ கதாபாத்திரத்திரத்திற்கு விக்ரம் என்பதை தீர்மானித்துவிட்டார்.

பின்னர் முக்கிய கதாபாத்திரமான வில்லன் கதாபாத்திரத்திற்கு ஆள் தேவைப்பட்டது. ஷங்கர் சார் உடனே என்னை தொடர்பு கொண்டு வில்லன் கதாபாத்திரத்தில் நீ நடிக்க வேண்டும் என்று கேட்டார். ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தினால் என்னால் நடிக்க இயலாமல் போய் விட்டது.

பின் அந்த வில்லன் வாய்ப்பு பாலிவுட் நடிகர் உபேன் படேல்-க்கு சென்றது என கூறியுள்ளார்.

இயக்குனர் அவதாரம் எடுக்கிறார் டேனியல் பாலாஜி..!



இயக்குனர் எல்லாம் ஹீரோ ஆகும் காலம் போய் நடிகர்கள் எல்லாம் இயக்குனர்களாக மாறும் காலம் வந்து விட்டது.

ஏற்கனவே தனுஷ், ஜீவா போன்றவர்கள் வரிசையில் நிற்க புதிதாக களமிறங்கியுள்ளார் டேனியல் பாலாஜி.

“காக்க காக்க”, “காதல் கொண்டேன்”, “பொல்லாதவன்”, “வேட்டையாடு விளையாடு” போன்ற படங்களில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களின் நடித்திருக்கும் அவர் தற்போது ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் “வை ராஜா வை” என்ற படத்திலும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

முதன்முறையாக நடிகர் டேனியல் பாலாஜி அவர்கள் “குறோணி” என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தை மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் M.R.கணேஷ் தயாரிக்கிறார்.

30 வகை அடுப்பில்லாத சமையல்..!

''வேக வைத்தல், வறுத்தல், பொரித்தல் போன்ற சமையல் முறைகளுக்கு உட்படுத்தப்படும்போது... சமையலில் உபயோகிக்கப்படும் பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றில் உள்ள சத்துக்களில் பெரும்பாலானவை அழிந்துவிடுகின்றன'' என்று உணவியலாளர்கள் நெடுங்காலமாக எச்சரிக்கை மணி ஒலித்து வருகிறார்கள்.

அதேசமயம், ''சமைக்காமலே சாப்பிடுவது என்பதெல்லாம் சரிப்பட்டு வருமா?'' என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. இந்தக் கேள்விக்கு ''சரிப்பட்டு வரும்'' என்று பதில் அளிக்கும் சமையல் கலை நிபுணர் , அடுப்பை பற்ற வைக்காமலே செய்யக்கூடிய 30 வகை உணவுகளுக்கான ரெசிபிகளை இங்கே வழங்குகிறார்.

''இந்த உணவுகளை அடிக்கடி செய்து கொடுத்தால்... உங்கள் குடும்பத்தினர் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்'' என்று அக்கறையுடன் கூறுகிறார்...


வேர்க்கடலை - பேபிகார்ன் புரட்டல்

தேவையானவை:

பேபிகார்ன் - அரை கப் (பொடியாக நறுக்கவும்), பச்சை வேர்க்கடலை - கால் கப், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, தனியா - ஒரு டீஸ்பூன், பூண்டு - 3 பல் உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

காய்ந்த மிளகாய், பூண்டு, தனியா மூன்றையும் நீர் சேர்க்காமல் அரைக்கவும். வேர்க்கடலையை நீரில் ஊற வைத்து, தோல் உரித்து, நறுக்கிய பேபிகார்ன், உப்பு, சீரகத்தூள் ஆகியவற்றுடன் சேர்த்துக் கலக்கவும். அரைத்து வைத்த பொடியை மேலே தூவி, சாப்பிடக் கொடுக்கவும்.

திடீர் பஞ்சாமிர்தம்

தேவையானவை:

வாழைப்பழம் - ஒன்று (வட்டமாக நறுக்கவும்), பேரீச்சம்பழம் - 10 (கொட்டை நீக்கவும்), நறுக்கிய ஆப்பிள் - கால் கப், கமலா ஆரஞ்சு சுளை - 4 (தோல், கொட்டை நீக்கவும்), மாதுளை முத்துகள் - சிறிதளவு, டயமண்ட் கற்கண்டு - 2 டேபிள்ஸ்பூன், நாட்டுச்சர்க்கரை - கால் கப், தேன் - சிறிய பாட்டில் ஒன்று.

செய்முறை:

அனைத்து பழங்களையும் பெரிய பேஸினில் போட்டுக் கலக்கி, கற்கண்டு, நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கிளறி, தேவையான அளவு தேன் ஊற்றிப் பிசைந்து சாப்பிடக் கொடுக்கவும்.

மசாலா மோர்

தேவையானவை:

கெட்டித் தயிர் - ஒரு கப், மிகப் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு, தண்ணீர் - 5 கப், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - சிறிதளவு.

செய்முறை:

கெட்டித் தயிரை நன்றாகக் கடைந்து உப்பு, தண்ணீர் சேர்த்து மோராக்கவும். இதில் பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்க்கவும். சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி மூன்றையும் மிக்ஸியில் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து, மோரில் சேர்த்து நன்றாக ஆற்றி வைக்கவும்.

நெல்லிக்காய் அரிஷ்டம்

தேவையானவை:

நெல்லிக்காய் - அரை கிலோ, பனைவெல்லம் - அரை கிலோ, மண்பானை - ஒன்று (சுத்தமானது).

செய்முறை:

பனைவெல்லத்தைப் பொடி செய்யவும். ஈரம் இல்லாத மண்பானையில் ஒரு கை வெல்லம், ஒரு கை நெல்லிக்காய் என மாற்றி மாற்றிப் போட்டு, கடைசியாக மேல் பூச்சாக வெல்லம் போட்டு, சுத்தமான வெள்ளைத் துணியால் பானையை மூடி, வெயில் படாத இடத்தில் வைக்க வேண்டும். 40-45 நாட்களுக்குப் பிறகு துணியில் கொட்டி நெல்லிக்காயின் கொட்டைகளை நீக்கி உபயோகப்படுத்தலாம். கண்ணாடி பாட்டில் அல்லது காற்றுப்புகாத டப்பாவில் வைத்து தினமும் சாப்பிடலாம்.


வாழைத்தண்டு சாறு

தேவையானவை:

சிறிய வாழைத்தண்டு - ஒன்று, பூண்டு - 2 பல், ஓமவல்லி இலை, வெற்றிலை - தலா ஒன்று, துளசி - சிறிதளவு, மிளகு - 3.

செய்முறை:

வாழைத்தண்டை பட்டை, நார் நீக்கி, வட்ட வட்டமாக நறுக்கி... பூண்டு, ஓமவல்லி இலை, வெற்றிலை, துளசி, மிளகு சேர்த்து, நீர் விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து வடிகட்டவும்.

வாரம் ஒரு முறை இந்த சாற்றை அரை டம்ளர் அளவு பருகினால்... சளி, இருமல் தொந்தரவில் இருந்து பாதுகாக்கும்.


பருப்பு - காய்கறி கோசுமல்லி

தேவையானவை:

பாசிப்பருப்பு - ஒரு கப், வெள்ளரி துருவல், கேரட் துருவல், தேங்காய் துருவல், கோஸ் துருவல், பீட்ரூட் துருவல் - தலா கால் கப், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித் தழை - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும். பிறகு, நீரை வடித்து பாசிப்பருப்புடன் அனைத்துத் துருவல்களையும் சேர்த்து... உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறி, எலுமிச்சைச் சாறு சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.


பிஸ்கட் பேடா

தேவையானவை:

மேரி பிஸ்கட் - 6, ரஸ்க் - 2, பால் பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன், தேன் - தேவையான அளவு, பனங்கற்கண்டு (பொடித்தது) - ஒரு டீஸ்பூன், செர்ரி பழம் - சிறிதளவு.

செய்முறை:

மேரி பிஸ்கட்டையும், ரஸ்க்கையும் உடைத்து, மிக்ஸியில் சேர்த்து மாவாக அரைக்கவும். இதனுடன் பால் பவுடர், பனங்கற்கண்டு சேர்த்து தேன் விட்டு பிசைந்து உருண்டையாக பிடித்து, தட்டையாக்கினால்... பிஸ்கட் பேடா தயார். நறுக்கிய செர்ரி பழத்தை, இதன் மேல் வைத்து அலங்கரிக்கவும்.


அன்னாசி அச்சு இனிப்பு

தேவையானவை:

அன்னாசிபழச் சாறு - 50 மில்லி, பால் பவுடர் - 5 டேபிள்ஸ்பூன், பைனாப்பிள் ஆயில் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - கால் டீஸ்பூன், ஐசிங் சுகர் - 4 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

பால் பவுடர், ஐசிங் சுகரை சலித்துக் கொண்டு... அவற்றுடன் பைனாப்பிள் ஆயில், அன்னாசி பழச்சாறு சேர்த்துப் பிசைந்து வைக்கவும். சாக்லேட் அச்சு அல்லது பிஸ்கட் கட்டர் உதவியுடன் விருப்பமான வடிவம் கொடுத்து, ஃப்ரிட்ஜில் முக்கால் மணி நேரம் வைத்து எடுத்தால்... அசத்தலான சுவையில் அன்னாசி அச்சு இனிப்பு ரெடி.


தேங்காய் - மாங்காய் - சோள சுண்டல்

தேவையானவை:

முற்றிய தேங்காய் - முக்கால் மூடி, அதிக புளிப்பிலாத மாங்காய் (சிறியது) - ஒன்று, அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் - முக்கால் கப், வெள்ளை மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு சிட்டிகை, நறுக்கிய வெள்ளரிக்காய் - கால் கப், எலுமிச்சை பழம் - அரை மூடி, நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:

தேங்காய், வெள்ளரி, மாங்காய் மூன்றையும் சிறுசிறு சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும். இவற்றுடன் அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் சேர்த்துக் கலந்து... உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், தனியாத்தூள் சேர்த்துக் கிளறவும். கடைசியாக, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். மேலே பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவவும்.

மாலை நேர டிபனுக்கு சரியான சாய்ஸ் இந்த சுண்டல்.


இனிப்பு அவல் பொங்கல்

தேவையானவை:

தட்டை அவல் - ஒரு கப், தேங்காய் துருவல் - அரை கப், நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லத் துருவல் - கால் கப், பொடியாக நறுக்கிய பேரீச்சை - கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, காய்ந்த திராட்சை - 10, செர்ரி பழம் - 5 (ஒவ்வொன்றையும் 4 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்).

செய்முறை:

அவலை தண்ணீரில் நன்றாக அலசி எடுத்து, நீர் தெளித்து 5 - 10 நிமிடம் ஊற வைக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லத் துருவல், பொடியாக நறுக்கிய பேரீச்சை, செர்ரி பழம், காய்ந்த திராட்சை சேர்த்து... பிறகு ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கினால், இனிப்பு அவல் பொங்கல் ரெடி.

இது ரத்த சோகையில் இருந்து நிவாரணம் அளிக்கும். குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் எளிதில் ஜீரணமாகும். காலை, இரவு நேர டிபனாக சாப்பிடலாம்.


மஞ்சள்பூசணி - தேங்காய்ப் பால் பாயசம்

தேவையானவை:

துருவிய மஞ்சள்பூசணி - அரை கப், தேங்காய்ப் பால் - ஒரு கப், பச்சைக் கற்பூரம் - மிளகளவு, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், துருவிய வெல்லம் - 2 டேபிள்ஸ்பூன், பால் பவுடர் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

தேங்காய்ப் பாலில், பால் பவுடர் சேர்த்துக் கலக்கி, துருவிய மஞ்சள்பூசணி சேர்க்கவும். பிறகு, ஏலக்காய்த்தூள் தூவி, பொடித்த பச்சைக் கற்பூரம், துருவிய வெல்லம் சேர்த்துக் கலக்கவும். விருப்பப்பட்டால், பொடியாக நறுக்கிய முந்திரியைத் தூவலாம்.



பொட்டுக்கடலை மாவு உருண்டை

தேவையானவை:

பொட்டுக் கடலை மாவு - ஒரு கப், ஏலக் காய்த்தூள் - ஒரு சிட்டிகை, பனங் கற்கண்டு - கால் கப், முந்திரி துருவல் - 2 டேபிள்ஸ்பூன், தேங் காய்ப் பால் - தேவையான அளவு.

செய்முறை:

பொட்டுக்கடலை மாவுடன் ஏலக்காய்த்தூள், பனங் கற்கண்டு, முந்திரி துருவல் சேர்த்து... தேங்காய்ப் பால் விட்டுப் பிசைந்து, உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

இந்த மாவு உருண்டை, குழந்தை களின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் கொண்டது.


பழம் - பனீர் யோகர்ட்

தேவையானவை:

தோல் சீவி நறுக்கிய அன்னாசிப்பழம் - 3 டேபிள்ஸ்பூன், கொழுப்பு நீக்கப்பட்ட தயிர் (ஸ்கிம்ட் யோகர்ட் - ரெடிமேடாக சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும்) - ஒரு கப், துருவிய பனீர் - சிறிதளவு, மாதுளை முத்துகள் - 3 டேபிள்ஸ்பூன், அன்னாசி எசன்ஸ் - ஒரு துளி.

செய்முறை:

நறுக்கிய அன்னாசிப்பழம், மாதுளை முத்துகளை தயிருடன் சேர்த்து, பனீர் துருவல் போட்டுக் கலக்கவும். ஒரு துளி அன்னாசி எசன்ஸை கடைசியாகச் சேர்க்கவும்.



கொத்தமல்லி - புதினா மசாலா பொரி

தேவையானவை:

பொரி - ஒரு கப், நறுக்கிய கொத்தமல்லி - அரை கப், நறுக்கிய புதினா - கால் கப், கறிவேப்பிலை - சிறிதளவு (நறுக்கவும்), பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), சிறிய சதுரமாக நறுக்கிய மாங்காய் - 2 டேபிள்ஸ்பூன், சாட் மசாலாத்தூள்- ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு சிட்டிகை, எலுமிச்சை பழம் - அரை மூடி, உப்பு - சிறிதளவு.

செய்முறை:

நறுக்கிய புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலையைபொரியில் சேர்த்து, நறுக்கிய வெங்காயம், மாங்காய் சேர்த்து... உப்பு, சாட் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் தூவிக் கிளறவும். கடைசியாக, எலுமிச்சைச் சாறு கலந்து பரிமாறவும்.

விருப்பப்பட்டால்... ஓமப்பொடி (கார வகை), தட்டை, பொரித்த கார்ன் ஃப்ளேக்ஸை ரெடிமேடாக வாங்கி கலந்தும் சாப்பிடத் தரலாம்.


முளைகட்டிய பயறு சாலட்

தேவையானவை:

முளைகட்டிய பச்சைப் பயறு, முளைகட்டிய கறுப்பு கொண்டைக்கடலை, முளைகட்டிய காராமணி (சேர்த்து) - ஒரு கப், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் - ஒரு சிட்டிகை, இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சை பழம் - அரை மூடி, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

முளைகட்டிய பயறு வகைகளுடன்... உப்பு, மிளகாய்த்தூள், நறுக்கிய வெங்காயம், இஞ்சித் துருவல், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து வைத்தால்... சத்தான சாலட் தயார்.


சுக்கு பானகம்

தேவையானவை:

வெல்லத் துருவல் - 2 டேபிள் ஸ்பூன், தண்ணீர் - ஒரு கப், ஜாதிக்காய் பொடி, ஏலக்காய்ப் பொடி, சுக்குப் பொடி - தலா ஒரு சிட்டிகை, பச்சைக் கற் பூரம் - கடுகளவு.

செய்முறை:

வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடி கட்டவும். கொடுக்கப்பட்டுள்ள பொடி வகைகளை வெல்லக் கரைசலில் சேர்த்து, பொடித்த பச்சைக் கற்பூரத்தை போட்டு, நன்கு ஆற்றி பருகவும்.

சுவையான, மணமான, இந்த பானகம் உடனடி எனர்ஜி தரும்.


பழப் பச்சடி

தேவையானவை:

ஆப்பிள் - பாதி, துருவிய தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன், வாழைப்பழம் - ஒன்று, கெட்டித் தயிர் - ஒரு கப், உலர்திராட்சை - ஒரு டீஸ்பூன், பாதாம் - முந்திரி துருவல் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய செர்ரி பழம் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய பேரீச்சை - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

ஆப்பிளை தோல் சீவி துருவிக் கொள்ளவும். வாழைப் பழத்தை வட்டமாக நறுக்கவும். கடைந்த கெட்டித் தயிரில் சர்க்கரை சேர்த்து, கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த் துக் கலக்கினால்... மிகச் சுவையான பழப் பச்சடி ரெடி.

சர்க்கரைக்குப் பதில் துருவிய வெல்லம் சேர்த்தும் செய்யலாம்



தினை உருண்டை

தேவையானவை:

தினை மாவு - ஒரு கப், வெல்லத் துருவல் - கால் கப், காய்ந்த திராட்சை, பாதாம் துருவல் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், தேன் - தேவையான அளவு.

செய்முறை:

தினை மாவுடன் வெல்லம், திராட்சை, பாதாம், தேங்காய் அனைத்தையும் சேர்த்துக் கலந்து, தேன் ஊற்றிப் பிசையவும். மாவை சிலிண்டர் வடிவில் சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

நார்ச்சத்து மிகுந்த உணவு இது.


காய்கறி பர்கர்

தேவையானவை:

பர்கர் பன் - 2 (பேக்கரியில் கேட்டு வாங்கிக் கொள்ள வும்), குடமிளகாய், தக்காளி - தலா ஒன்று, பெரிய வெங்காயம் - 2, கறுப்பு, வெள்ளை எள் (சேர்த்து) - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - இஞ்சி - பச்சை மிளகாய் - உப்பு சேர்த்து அரைத்த சட்னி - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

பன்னை இரண்டாக நறுக்கவும். ஒருபுறம் வெண்ணெய், மறுபுறம் அரை டேபிள்ஸ்பூன் கொத்த மல்லி சட்னி தடவவும் (உட்புறத்தில்). அதன் நடுவே பொடியாக நறுக்கிய குடமிளகாய், பெரிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றை 2 டேபிள்ஸ்பூன் எடுத்து வைக்கவும். பன்னை மூடவும். அதன் மேல் சிறிது வெண்ணெய் தடவி, கறுப்பு, வெள்ளை எள் தூவி பரிமாறவும். மற்றொரு பன்னையும் இதேபோல் செய்யவும்.



உலர்பழம் - கோதுமை ரொட்டி அடுக்கு

தேவையானவை:

கோதுமை பிரெட் - 3 ஸ்லைஸ், மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம் - தேவையான அளவு, நறுக்கிய செர்ரி பழம், காய்ந்த திராட்சை, பதப்படுத்திய அத்திப்பழம் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - தலா ஒரு டீஸ்பூன், உடைத்த பாதாம், பிஸ்தா, முந்திரிப் பருப்பு, அக்ரூட் (சேர்த்து) - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

ஒரு பிரெட் ஸ்லை ஸில்... செர்ரி, அத்திபழம், காய்ந்த திராட்சையை வைக்கவும். மற்றொரு ஸ்லைஸில் உடைத்த பாதாம், பிஸ்தா, அக்ரூட், முந்திரிப் பருப்பு ஆகியவற்றை வைக்கவும். மற்றொரு ஸ்லைஸில் மிக்ஸ்டு புரூட் ஜாம் தடவவும். 3 ஸ்லைஸ்களையும் ஒன்றன்கீழ் ஒன் றாக அடுக்கி, நடுவே வெட்டி பரிமாறவும்.


பப்பாளிப்பழக் கூழ்

தேவையானவை:

பப்பாளிப்பழம் - ஒன்று (நன்றாக பழுத்தது), மாதுளை முத்துகள் - கால் கப், உலர் திராட்சை - 50 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை:

பப்பாளிப்பழத்தை தோல் சீவி நறுக்கி, மிக்ஸியில் அரைக்கவும். இந்தக் கூழில் மாதுளை முத்துகள், காய்ந்த திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.

சத்தான இந்தக் கூழ், மலச்சிக்கலை குணப்படுத்தும்.



ஊட்டச்சத்து பழ பானம்

தேவையானவை:

தர்பூசணி - அரை பழம், புதினா - சிறிதளவு, டைமண்ட் கற்கண்டு - ஒரு டீஸ்பூன், நெல்லிக்காய் துருவல் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

தோல் சீவி நறுக்கிய தர்பூசணியுடன் சிறிதளவு புதினா இலை, கற்கண்டு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் நெல்லிக்காய் துருவல் கலந்து பருகவும்.

வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த பானம், ரத்த விருத்திக்கு நல்லது.


சிவப்பு அவல் - காய்கறி பிரியாணி

தேவையானவை:

சிவப்பு அவல் - ஒரு கப், முள்ளங்கி துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், முட்டைகோஸ் துருவல், கேரட் துருவல் - தலா கால் கப், தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்), நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி - கால் கப், மிளகு - சீரகப் பொடி - ஒரு டீஸ்பூன், தேங்காய்ப் பால் - தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

தேங்காய்ப் பாலில் சிவப்பு அவலை 10 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு, காய்கறிகளை சேர்த்து... உப்பு, மிளகு - சீரகப் பொடி சேர்த்துக் கிளறி பரிமாறவும்.


கோதுமைப் பால்

தேவையானவை:

முழு கோதுமை - 100 கிராம், தேங்காய் - அரை மூடி, அச்சு வெல்லம் - 2.

செய்முறை:

முதல்நாள் இரவே கோதுமையை ஊற வைத்துவிட வேண்டும். அடுத்த நாள் இதை மிக்ஸியில் அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும். தேங் காயை துருவி மிக்ஸியில் அடித்து தேங்காய்ப் பால் எடுத் துக் கொள்ளவும். இரண்டு பாலையும் வடிகட்டி, ஒன்றாக கலந்து கொள்ளவும். அச்சு வெல்லத்தை பொடித்து நீர் விட்டு வடிகட்டி, அதை பாலுடன் சேர்த்து நன்கு ஆற்றி அருந்தவும்.


ஓட்ஸ் அவியல்

தேவையானவை:

ஓட்ஸ் - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், முந்திரி - 6 பச்சை திராட்சை - 15, மாதுளை முத்துகள் - கால் கப், தயிர் - ஒரு கப், மிகவும் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

ஓட்ஸை மிக்ஸியில் ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும். இதை பாதி தயிரில் 15 நிமிடம் ஊற வைக்கவும். பச்சை மிளகாய், தேங்காய் துருவல், முந்திரியுடன் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். இதை ஊற வைத்த ஓட்ஸில் சேர்த்து, மீதி தயிரையும் சேர்த்துக் கலந்து வைக்கவும். நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லியை அதனுடன் சேர்க்கவும். கடைசியாக, பச்சை திராட்சை, மாதுளை முத்துகள் சேர்த்து, கிண்ணத்தில் போட்டு ஸ்பூன் போட்டு, சாப்பிடக் கொடுக்கவும்



கலர்ஃபுல் அவல் உப்புமா

தேவையானவை:

அவல் - ஒன்றரை கப், கேரட் துருவல், பொடி யாக நறுக்கிய தக்காளி, நறுக்கிய கொத்தமல்லி, தேங்காய் துருவல் - தலா அரை கப், வெள்ளை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), பனீர் துருவல் - கால் கப், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

அவலை நீரில் 10 நிமிடம் ஊற வைத்து எடுத்து, மூன்று பாகமாக பிரித்துக் கொள்ளவும். கேரட் துருவல், பொடியாக நறுக்கிய தக்காளியை ஒன்று சேர்த்து, இதை ஒரு பாகம் அவலுடன் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் மிளகுத்தூள், சிறிதளவு உப்பு சேர்க்கவும்.

தேங்காய் துருவல், பனீர் துருவல், உப்பு, வெள்ளை மிளகுத்தூளை ஒன்றாக சேர்த்து, இதனை இரண்டா வது பாக அவலில் கலக்கவும். மூன்றா வது பாக அவலில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி உப்பு, நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்துக் கிளறவும்.

விருப்பமான சுவையுள்ள அவலை தனித்தனியாக சாப்பிடலாம். அல்லது, கப் அல்லது பவுலில் கீழே கொத்த மல்லி அவல், அடுத்து தேங்காய் - பனீர் அவல், அதன்மேல் கேரட், தக்காளி அவலை வைத்து அழுத்தி... கீழே கவிழ்த்தால், கலர்ஃபுல் அவல் உப்புமா ரெடி.


சௌசௌ தயிர் பச்சடி

தேவையானவை:

தோல் சீவி துருவிய சௌசௌ - 2 டேபிள்ஸ்பூன், துருவிய வெள்ளரி - 2 டேபிள்ஸ்பூன், வெங்காயம் - ஒன்று (நீளமாக நறுக்கவும்), கொத்தமல்லித் தழை - சிறிதளவு, கெட்டித் தயிர் - ஒரு கப், முந்திரிப் பருப்பு - 4 (நீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும்), தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

முந்திரி, தேங்காய் துருவலை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கெட்டித் தயிரை கடைந்து, அரைத்த விழுதைச் சேர்க்கவும். சௌசௌ, வெள்ளரி, வெங்காயத்தைப் பிழிந்து இதனுடன் சேர்த்து, உப்புப் போட்டு கலக்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை மேலே தூவி பரிமாறவும்.


காய்கறி ஊறுகாய்

தேவையானவை:

மாங்காய், கேரட்- தலா ஒன்று, சின்ன வெங்காயம் - 8 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சை பழம் - அரை மூடி, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

மாங்காய், கேரட்டை சிறிய சதுரங்களாக நறுக்கவும். இவற்றுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து, வெங்காயத்தையும் சேர்க்கவும். மேலே எலுமிச்சை பழத்தை பிழிந்து கலக்கவும்.

இந்த ஊறுகாயை சப்பாத்தி, தயிர் சாதத்துக்கு சைட் டிஷ்ஷாக பயன்படுத்தலாம்.



பழ லஸ்ஸி

தேவையானவை:

தயிர் - ஒரு கப், சர்க்கரை - 2 டீஸ்பூன், நன்றாகப் பழுத்த கொய்யாப்பழம் - ஒன்று (சீஸனுக்கு தகுந்த பழங் களைப் பயன்படுத்தலாம்), கறுப்பு திராட்சை - 10.

செய்முறை:

கெட்டித் தயி ருடன் சிறிதளவு தண்ணீர், சர்க்கரை சேர்த்து, நறுக்கிய கொய்யாவை சேர்த்து மிக்ஸி யில் அடிக்கவும். இதில், விதை நீக்கிய கறுப்பு திராட் சையை இரண்டாக நறுக்கிப் போட்டு பருகவும்.



பச்சை வேர்க்கடலை துவையல்

தேவையானவை:

பச்சை வேர்க்கடலை - அரை கப், பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு - 2 பல், பச்சை மிளகாய் - ஒன்று, முந்திரிப் பருப்பு - 4 (நீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும்), உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து அரைக்கவும்.

எல்லா வகை டிபனுக்கும் சிறந்த சைட் டிஷ் இது.


'ஐ' வெளியீடு: ஷங்கரின் திட்டம்..!



 'ஐ' படத்தினை விளம்பரப்படுத்த இயக்குநர் ஷங்கர் படம் உருவான விதத்தின் வீடியோவே போதுமானது என்று திட்டமிட்டு இருக்கிறார்.

விக்ரம், ஏமிஜாக்சன், ராம்குமார், சுரேஷ் கோபி, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில், தமிழ் சினிமாவில் உருவாகி வரும் மெகா பட்ஜெட் படம் 'ஐ'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய ஷங்கர் இயக்கியிருக்கிறார்.

படத்தில் விக்ரம் என்ன லுக்கில் வருகிறார் என்பதை கூட ஷங்கர் வெளியிடவில்லை. இப்படத்தினைப் பற்றிய செய்திகள் எல்லாமே மர்மமாகவே இருக்கிறது. இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கவிருக்கிறது. பிரம்மாண்ட அரங்கில் பாடல் காட்சி ஒன்றை காட்சிப்படுத்த இருக்கிறார்கள்.

இந்நிலையில், படத்தினை விளம்பரப்படுத்த படம் உருவான வீடியோ பதிவே போதும் என்று திட்டமிட்டு இருக்கிறாராம் ஷங்கர். பேட்டிகள் எல்லாம் கொடுத்துவிட்டு, படம் உருவான விதத்தினை டிவி சேனல்களில் கொடுத்தாலே போதும், மக்கள் ஆச்சர்யப்பட்டு விடுவார்கள் என்று திட்டமிட்டு இருக்கிறாராம்.

ஏனென்றால், விக்ரமின் உழைப்பு, பாடல்களுக்காக செட்கள் போடப்பட்ட விதம், பாடல்களுக்கு விக்ரமிற்கு போடப்பட்ட மேக்கப், சண்டைக் காட்சிகள் உருவான விதம் என எல்லாவற்றையுமே வீடியோவாக எடுத்திருக்கிறார்கள்.

இந்த வீடியோ பதிவை பார்த்தாலே வியப்படைந்து விடுவார்கள். ஆகையால் பேட்டி கொடுத்துவிட்டு, இந்த வீடியோவை கொடுத்து விடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறாராம். 

தேசிய புற்றுநோய் திசு வங்கி – சென்னை ஐஐடி-யில் அமைகிறது..!




சென்னை ஐஐடியில் முதல் முறையாக ‘தேசிய புற்றுநோய் திசு உயிரி வங்கி’யை நிறுவ முடிவு செய்துள்ளது.அதாவது, சென்னையைச் சுற்றியுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் புற்று நோயாளிகளின் திசுக்கள் அவர்களுடைய சம்மதத்துடன் சேகரிக்கப்பட்டு இந்த வங்கியில் பாதுகாக்கப்பட உள்ளன.அவ்வாறு பாதுகாக்கப்படும் திசுக்கள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு, நோயை குணப்படுத்துவதற்கான மருந்துகள் மற்றும் வழிமுறைகள் குறித்த முயற்சிகள் எடுக்கப்படும்

சென்னை ஐஐடியில் உள்ள உயிரி தொழில் நுட்பத்துறையில் ‘தேசிய புற்றுநோய் திசு உயிரி வங்கி’ (நேஷனல் கேன்சர் திசு பயோபாங்க்) அமைக்கப்படுகிறது. இந்த பயோபாங்க்கை, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையும், சென்னை ஐஐடியும் இணைந்து அமைக்கின்றன.இதை நிறுவுவதற்காக மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை ரூ.27 கோடியே 81 லட்சம் நிதி வழங்கியுள்ளது. புற்றுநோய் சிகிச்சை அளிக்கும் நிறுவனங்கள் மற்றும் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறும் புற்றுநோயாளிகள் தாமாகவே முன்வந்து புற்று நோய் திசுக்களை வழங்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் புற்றுநோய் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். சமூகம் சார்ந்த இந்த முயற்சி புற்றுநோய் அறிகுறிகள், புற்றுநோயை கண்டறிதல், பின்னர் சிகிச்சை அளித்தல் போன்றவற்றுக்கு உறுதுணையாக இருக்கும்.

சென்னை புற்றுநோய் ஆய்வு மற்றும் நிவாரண அறக்கட்டளையுடன் இணைந்து சென்னை ஐஐடி இந்த பணியை தொடங்கியுள்ளது. அத்துடன் பல்வேறு புற்றுநோய் சிகிச்சை மையங்கள், அமைப்புகளுடன் ஒன்றிணைந்தும் செயல்படும். மேலும், புற்றுநோயாளிகள் தன்னார்வத்துடன் முன்வந்து புற்றுநோய் திசுக்களை நன்கொடையாக வழங்குவதையும் ஊக்கப்படுத்தும். திசுக்கள் எவ்வளவு பெறப்படுகிறதோ, அவற்றின் அளவைப் பொறுத்தும், குறிப்பிட்ட திசுக்களை பாதுகாக்கவும் ஒரு மத்திய திசு வங்கியாக ஐஐடி வளாகத்தில் அமைக்கப்படவுள்ள, இந்த வங்கி செயல்பட உள்ளது.

குறைந்த பக்கவிளைவுகள் கொண்டதாகவும், முன்னதாகவே புற்றுநோயை கண்டறிந்து தடுக்கின்ற வகையில் தனிப்பட்ட முறையில் சிகிச்சை பெறும் வகையில் புற்றுநோயை கண்டறியவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புற்று நோய் திசு வங்கிக்காக சென்னை ஐஐடியின் பங்காக ரூ.3 கோடியே 9 லட்சம் நிதியும் வழங்கியுள்ளது. மேலும் இந்த வங்கி செயல்படுவதற்காக ஐஐடி வளாகத்தில் 10 ஆயிரம் சதுர அடியில் பாதுகாப்புடன் கூடிய வைப்பறையை கட்ட இடம் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக 5 ஆண்டுகள் வரை 25 ஆயிரம் புற்றுநோய் திசு மாதிரிகளை இங்கு சேமித்து வைக்க முடியும்.

அத்துடன் திசுக்களின் வடிவங்களை காட்சிப்படுத்தும் சக்தி வாய்ந்த கருவிகள், செல் சேமிப்பு வசதிகள் இந்த பயோ வங்கியில் அமையும். இந்த வங்கி தொடர்பாக சென்னை ஐஐடியில் பயிற்சி மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்நிலையில் 30ம் தேதி முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை 3 ‘கேன்சர்கான் 2014’ என்ற 3 நாள் கருத்தரங்கு சென்னை ஐஐடியில் நடக்கிறது. ஐஐடியின் உயிரி தொழில் நுட்பத்துறையும், புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் நிவாரண அறக்கட்டளை ஆகியவை இணைந்து இந்த கருத்தரங்கை நடத்த ஏற்பாடு செய்துள்ளன.

கோலிசோடா பார்ட் 2 ..?



கோலிசோடா படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் தொடங்கயிருப்பதாக அப்படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் தெ‌ரிவித்தார்.

முதல் படம் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது தோல்விக்குப் பின் பல ஆண்டுகள் ஒளிப்பதிவை மட்டும் கவனித்து வந்தவர் இரண்டாவதாக எடுத்து வைத்த அடிதான் கோலிசோடா.

சிறுவர்களை வைத்து எடுக்கும் படங்கள் வெற்றி பெறும் சதவீதம் மிகக்குறைவு. அதனால் ஒருவித பயத்துடனே இந்தப் படத்தை தொடங்கியதாக விஜய் மில்டன் குறிப்பிட்டுள்ளார்.

படத்தில் நடித்த சிறுவர்கள் அவரவர் போர்ஷனை நன்றாக உணர்ந்து கஷ்டப்பட்டு நடித்தார்கள். அவர்கள்தான் இந்த வெற்றியை சாத்தியமாக்கினார்கள் எனவும் தெ‌ரிவித்துள்ளார்.

பசங்க படத்தில் நடித்த சின்னப் பசங்கதான் இதில் வளர்ந்து நிற்கிறார்கள். படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிகளே படத்துக்கு வேறொரு நிறத்தை தந்திருக்கிறது. ரசிகர்களும், விமர்சகர்களும் ஒருங்கே சண்டைக் காட்சிகளை பாராட்டியது மகிழ்ச்சியளிக்கிறது எனவும் விஜய் மில்டன் கூறினார் (வன்முறை அதிகம் என சில விமர்சகர்கள் குறைபட்டிருக்கிறார்கள்).

40 திரையரங்குகளில் கூடுதலாக படத்தை திரையிட இருப்பதாக கூறியவர் இன்னும் சில மாதங்களில் இந்தப் படத்தின் சீக்வெலை தொடங்கயிருப்பதாகவும், இந்தப் படத்தைப் போலவே சீக்வெலும் சிறப்பாக ரசிக்கிற மாதி‌ரி இருக்கும் எனவும் தெ‌ரிவித்தார்.

Wednesday 29 January 2014

ஸ்ருதி ஹாசன் பாலியல் தொழிலாளியாக நடித்த இந்திப் படம் தமிழிலும் ரிலீஸ்..!

Wednesday 29 January 2014 - 0 Comments


கோலிவுட்டில் 7ம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன்.இதன் பின்பு தனுஷுடன் 3 படத்தில் நடித்தார். இந்தப் படம் தோல்வியடைந்ததால் ஸ்ருதிஹாசன் தன்னுடைய முழு கவனத்தையும் தெலுங்கு திரையுலகம் பக்கம் திருப்பினார்.அங்கு எதிர்பார்த்த படியே வெற்றி கிட்டியது.

அங்கு ஸ்ருதி நடித்த கப்பர் சிங் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதால், அவரை தேடி வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தன.இந் நிலையில் இப்போதும் தெலுங்கில் முன்னணி நடிகை போட்டியில் இருக்கும் ஸ்ருதிஹாசன் ‘டி டே’ என்ற பாலிவுட் படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்த படத்தை தமிழில் தாவூத் என்ற பெயரில் ரிலீஸ் செய்யப் போகிறார்கள்.

கடந்த ஆண்டு ஹிந்தியில் வெளியான இந்த படமான டி டே–யில் ஸ்ருதிஹாசன் பாலியல் தொழிலாளியாக நடித்த காட்சிகளும், போட்டோக்களும் அப்போதே டாபிக்க்லாக இருந்தது.அப்படத்தில் ஸ்ருதியுடன் அர்ஜுன் ரம்பால், இர்பான் கான், ரிஷி கபூர், சந்தீப் குல்கர்னி, ஹியூமா குரேசி ஆகியோர் நடித்திருந்தனர். சங்கர் இஷான் லாய் இசை அமைத்திருந்தார். நிகில் அத்வானி டைரக்ட் செய்திருந்தார்.

இந்நிலையில் இப்போது இந்தப் படத்தை தமிழில் தாவூத் என்ற பெயரில் டப் செய்து வெளியிட இருக்கிறார்கள். பிரண்ட்ஸ் பிலிம்ஸ் என்ற நிறுவனம் வெளியிடுகிறது. தமிழ்நாடு முழுவதும் வருகிற பிப்ரவரி 7ந் தேதி 150 தியேட்டர்களில் ரிலீசாகிறது. சர்வதேச பயங்கரவாதி ஒருவனை இந்தியாவின் முக்கியமான ரா அதிகாரி தனது டீமுடன் சென்று கைது செய்யும் ஆக்ஷன் கதை. அந்த தேடலிலும், ஆக்ஷனிலும் முக்கிய பங்கு வகிப்பது ஒரு பாலியல் தொழிலாளி. அந்த கேரக்டரில் ஸ்ருதி ஹாசன் நடித்திருக்கிறார்.

அழகு அந்தமானின் மரண பக்கம்..! உயிர்கள் பலியாகும் தொடர் அபாயம்..!

அழகு அந்தமானின் மரண பக்கம்.. முறைகேடான படகு பிசினஸால் பல உயிர்கள் பலியாகும் தொடர் அபாயம்..! 


25 பேர் வரை மட்டுமே ஏற்றக் கூடிய படகில் கூட்டம் அதிகம் இருக்கிறதே என்பதற்காக 45 பேரை படகோட்டி ஏற்றியதால்தான் அந்தமான் கடலில் படகு மூழ்கி பலர் உயிரிழக்கக் காரணமாக அமைந்து விட்டது என்று தெரிய வந்துள்ளது.

இப்படிப்பட்ட படகு விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றபோதிலும், படகுக்காரர்களும் திருந்துவதாக தெரியவில்லை. மக்களும் இன்னும் விழிப்புணர்ச்சி பெற்றதாக தெரியவில்லை. அரசு இயந்திரமும் இதைக் கண்டுகொள்வது போலத் தெரியவில்லை. இதேபோல அதிக அளவில் பயணிகளை ஏற்றிச் சென்று கடலில் மூழ்கிய சம்பவங்கள் சென்னை அருகே மாமல்லபுரத்தில் பலமுறை நடந்துள்ளது.

சென்னை அருகே பழவேற்காடு ஏரியிலும் இப்படி ஒரு துயரச் சம்பவம் சில முறை நடந்துள்ளது. கடந்த ஆண்டு பொங்கல் சமயத்தில் பெரும் துயர விபத்து நடந்தது. இதையடுத்து இந்த ஆண்டு அங்கு படகு பயணத்திற்கு அரசு தடை விதித்திருந்தது. அழகு அந்தமானின் மரண பக்கம்.. முறைகேடான படகு பிசினஸால் பல உயிர்கள் பலியாகும் தொடர் அபாயம்! இந்த நிலையில்தான் நேற்று அந்தமானில் ஒரு துயரச் சம்பவம் நடந்து விட்டது.

 காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பலர் சுற்றுலாக் குழுவாக கடந்த வாரம் அந்தமான் வந்தனர். அங்கு சிறை உள்ளிட்ட பல இடங்களையும் சுற்றிப் பார்த்த அவர்கள் கடைசியாக படகு மூலம் ராஸ் தீவு அல்லது ரோஸ் தீவுக்கு வந்தனர். படகு மூலம் இந்தத் தீவுக்கு வந்தனர் பயணிகள். அந்தப் படகில் 25 பேர்தான் பாதுகாப்புடன் பயணிக்க முடியுமாம். ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் படகுக்காரர் கூடுதலாக ஏற்றியுள்ளார். அதாவது 45 பேரை ஏற்றியுள்ளார்.

படகு ராஸ் தீவுக்கு பத்திரமாக வந்து விட்டது. ஆனல் நார்த் பே எனப்படும் வடக்கு வளைகுடாவுக்குத் திரும்பும்போது படகு கவிழ்ந்து விட்டது. கடலில் அலைகள் அதிகம் அடித்ததாலும், பாரம் தாங்க முடியாமலும் படகு கவிழ்ந்துள்ளது. கடலில் விழுந்த சில நிமிடங்களிலேயே 27 பேர் பிணமாக மிதந்தனர். தத்தளித்த 16 பேர் மீட்கப்பட்டனர்.

இதுபோன்ற படகுப் பயணம் அபாயகரமானது, உயிரைப் பறிக்கக் கூடியது என்று தெரிந்தும் அது தொடர்வது வியப்பாக உள்ளது. படகுக்காரர்கள்தான் இப்படி இருக்கிறார்கள் என்றால், மக்களும் விழிப்புணர்வு வராத நிலையில் இருப்பது வேதனை தருகிறது. அந்தமானில் எல்லாமே அழகுதான்..

கடல், கடற்கரை, எழில் கொஞ்சும் இயற்கைச் சூழல்.. சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த சிறைச்சாலை.. என எங்கு பார்த்தாலும் அழகு மிளிர எழில் கொஞ்ச காணப்படும் அந்தமானில் இந்த படகு சவாரியால் பேராபத்து பின் தொடர்ந்து காத்திருக்கிறது. இங்குள்ள படகோட்டிகள், காசை மட்டுமே குறியாக வைத்து அளவுக்கு அதிகமாக சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்று, ராஸ் தீவு, நார்த் பே என பல தீவுகளுக்கும் அழைத்துச் செல்வதைக் காணலாம்.

ஆடு மாடுகளைப் போல சுற்றுலாப் பயணிகளை இவர்கள் கொண்டு செல்கின்றனர். நிச்சயம், சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த உயிர் அபாயம் குறித்துத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏன், படகில் கால் வைக்கும் பயணிகள் யாருக்குமே நீச்சல் தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை. படகோட்டிகளுக்குத்தான் இதில் அதிக பொறுப்பு உள்ளது. ரிஸ்க் என்று தெரிந்தும் கூட இப்படி அவர்கள் செயல்படுவதற்கு பணமே காரணம்.

பழைய படகுகளை வைத்துக் கொண்டு அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி காசு பார்ப்பதிலேயே அவர்கள் குறியாக உள்ளன. இங்குதான் என்றில்லை, படகு சவாரி உள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்திலுமே இந்த அபாயம் நீடித்த கதையாகவே தொடர்கிறது. இன்று 21 அப்பாவி உயிர்கள் பரிதாபமாக கடலில் கரைந்து போயுள்ளன. இனிமேலாவது இந்த நிலைமையை மாற்ற அரசு உறுதியான நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Subscribe

புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

© 2013 கல்லாப்பெட்டி. All rights reserved.