Recent Articles
Home » Archives for 12/22/13
Sunday 22 December 2013
Sunday 22 December 2013
- 0 Comments
சிகாகோவில் ஜாக்கி ஷெராப் சர்க்கஸ் நிகழ்ச்சியை வங்கி மூலம் லோன் வாங்கி நடத்தி வருகிறார். அவருடைய மகன் ஆமிர்கான். ஒரு கட்டத்தில் வாங்கிய லோனை திருப்பி தர முடியாத நிலையில் வங்கியில் இருந்து சர்க்கஸை நடத்துவதை நிறுத்தி விடுகிறார்கள். இதனால் தன் மகன் கண்முன் ஷெராப் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் அந்த வங்கி மீது கோபம் கொள்கிறார் ஆமிர்கான். இந்த கோபத்தால் ஆமிர்கான் பெரியவனாக வளர்ந்த பிறகு, அந்த வங்கியின் கிளைகளில் உள்ள பணத்தை கொள்ளையடிக்கிறார்.
அந்த பணத்தை வைத்து சர்க்கஸை தொடங்கி நடத்தி வருகிறார். அப்படி அவர் கொள்ளை சம்பவங்களை நடத்தும்போது ஒவ்வொரு முறையும் இந்தி மொழியில் ஏதோ எழுதி வைத்து வந்துவிடுகிறார். இந்தி மொழியை வைத்து அவர் இந்தியாவை சேர்ந்தவர் என முடிவெடுக்கும் சிகாகோ காவல்துறையினர் ஆமிர்கானை கண்டுபிடிக்க இந்தியாவில் இருந்து அபிசேக் பச்சான் மற்றும் உதய் சோப்ரா ஆகிய இரண்டு பேரை சிகாகோவுக்கு வரவழைக்கின்றனர். ஆமிர்கானை பிடிக்க பல்வேறு வழிகளில் இவர்கள் முயற்சித்தும் பலன் அளிக்காமல் போய் விடுகிறது. ஆமிர்கான் தப்பித்துக் கொண்டே இருக்கிறார்.
ஆமிர்கானை பற்றி கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டும் அபிசேக் பச்சான் மற்றும் உதய் சோப்ரா, ஜாக்கி ஷெராப்க்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் ஒரே மாதிரியான தோற்றத்தைக் கொண்டவர்கள் என்று கண்டுபிடிக்கின்றனர். அதில் ஒருவர் கேத்ரினா கைப்பை காதலிக்கிறார். இதனை தெரிந்துக் கொண்ட போலீசார் கேத்ரினா மூலம் கொள்ளையடிக்கும் ஆமிர்கானை பிடிக்க திட்டம் தீட்டுகிறார்கள்.
இறுதியில் ஆமிர்கானை பிடித்தார்களா? அல்லது தப்பித்தாரா? என்பதே மீதிக்கதை.
ஆமிர்கான் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நடனக்காட்சிகளிலும், ஸ்டண்ட் காட்சிகளிலும் அசத்தவும் செய்கிறார். போலீசாக வரும் அபிசேக் பச்சான் மற்றும் உதய் சோப்ரா, கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அழகாகவரும் கேத்ரினாவுக்கு காட்சிகள் மிகவும் குறைவு. ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். ப்ரீதம் சக்ரபொர்த்தி இசையில் பாடல்கள் சிறப்பாக இருந்தாலும் பின்னணி இசையில் மிகவும் கலக்கியிருக்கிறார்.
மொத்தத்தில் ‘தூம் 3’ தூள் பரக்கிறது
நிலா
1.சூரியமண்டலத்தில் ஒரே பெரிய துணைக்கோள் நிலவாகும்.
2.மனிதன் நிலவில் இறங்கிய நாள் ஜீலை 21.1969.
(முதன் முதலில் இறங்கியவர் நீல் ஆம்ஸராங். இவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். இறங்குவதற்கு உதவிய ஏனியின் பெயர் "ஈகிள்." முதன் முதல் இவர் இடது காலை நிலாவில் எடுத்து வைத்தார். இரண்டாவாதாக இறங்கினவரின் பெயர் ''எட்வின் ஆல்ட்ரின்.'' நீல் ஆம்ஸ்ராங் இறங்கும்போது எட்வின் ஆல்ட்ரினும், கொலின்ஸ்சும் கூட இருந்தவர்கள்.)
3.நிலவிலிருந்து எடுத்த பாறையின் வயது 425 மில்லியன் ஆண்டுகள்.
4.நிலவை முதலில் தொலைநோக்கி வழியாக பார்த்தவர் கலிலியோ.
5.நிலவின் படத்தை முதலில் வரைந்தவர் வில்லியம் கில்பெர்ட்.
6.நிலவை முதலில் படம் பிடித்தவர் ஜான்-வுட்ரோபர்.
7.நிலவின் விட்டம் 3475 கி.மீ.
8.நிலவின் சராசரி அடர்த்தி 3.342.
9.நிலவு, பூமியிலிருந்து 384,403 கி.மீ தூரத்தில் உள்ளது.
10.நிலவு, பூமியைச் சுற்றும் வேகம் மணிக்கு 3680 கி.மீ.
11.நிலவு தன்னைத் தானே சுற்றிவரும் காலம் 29 1/2 நாட்கள்.
12.நிலவு ஒளி பூமிக்கு வர எடுக்கும் நேரம் 1.3 நொடி.
13.நிலவின் பெரிய பள்ளம் பெய்லீ ஆகும்.
14.நிலவின் கனம் பூமியனுடையதில் 8ல் ஒன்று..
15.நிலவின் ஈர்ப்பு சக்தி பூமியினுடையதில் 6ல் ஒன்று.
16.சூரிய ஒளி சந்திரனில் மேற்பரப்பில் பட்டு நிலா பிரதிபலிக்கின்றது.
17.சந்திரனில் முதன் முதலில் பயிரிடப்பட்ட பயிரினம் ''பட்டானி.''
18.சந்திரனில் முதன் முதல் கொல்ஃவ் விளையாடினவர் ''ஆலன் செப்பர்டு''
19.விண்வெளியில் இருந்து பார்த்தால் வானம் கருப்பாக தெரியும்.
20.அர்மகோலைட் (Arma Colite) என்பது நிலவில் மட்டுமே கிடைக்கும் பொருள் ஆகும்.
21.அமெரிக்க விண்வெளி வீரர்கள் சந்திரனில் இறங்கிய இடத்திற்குப் பெயர் ''ஸீ ஆஃப் ட்ரான்க்யுலிட்டி'' (Sea of Tranquility)
இந்த பொருட்களை பிரிட்ஜில் வைக்க கூடாதாம்!
பொதுவாக நாம் சமைக்க பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம்.
ஆனால் சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது.
அது போன்ற பொருட்களின் பட்டியலை பார்க்கலாம்.
வெங்காயம்
வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும், அப்போது தான் கெட்டுப் போகாமல் இருக்கும்.
பூண்டு
பூண்டை எப்போதுமே பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது கெட்டுப் போக ஆரம்பித்துவிடும்.பூண்டுகளை வாங்கி வந்ததும், அதனை தனித்தனி பல்லாக பிரித்து எடுத்து வைக்கலாம்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்குகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதுபோலவே அதனை கழுவியும் எடுத்து வைக்கக் கூடாது. உருளைக்கிழங்குகளில் பச்சை வேர்கள் மற்றும் பச்சை நிறம் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும், பாலிதீன் பையில் வைக்கக் கூடாது. இதே போன்று கருணைக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கையும் பிரிட்ஜில் வைக்க கூடாது.
தேன்
உலகத்திலேயே கெட்டுப் போகாத உணவு பொருள் என்று ஒன்று உண்டு என்றால் அது தேன்தான்.
ஆனால் தற்போது கடைகளில் வாங்கப்படும் தேனில் சுவை மற்றும் பலவற்றுக்காக பலவித பொருட்கள் கலக்கப்பட்டு வருகிறது. எனினும் தேனை பிரிட்ஜில் வைத்து பராமரிக்கக் கூடாது.
வாழைப்பழம்
வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைத்தால் அது விரைவில் கெட்டுப் போய் தோல் கருத்து விடும்.
இதேபோன்று பூசணிக்காய், பிரட், தக்காளி, அன்னாசி போன்றவற்றையும் பிரிட்ஜில் வைப்பதை தவிர்த்து விடுங்கள்.
உடம்பெல்லாம் ஒரே வலியா இருக்கா?
ஓடியாடி வேலை செய்த காலம் போய் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
குறிப்பாக உடலில் பல வலிகளும் அதிகரித்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம், போதிய ஓய்வு இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது, தூக்கமின்மை என்று சொல்ல ஆரம்பித்தால், சொல்லிக் கொண்டே போகலாம்.
மேலும் இத்தகைய செயலால் உடலில் நாள்பட்ட வலிகள் தங்கி, உடலின் ஆரோக்கியத்தையே கெடுத்து விடுகிறது.
இதற்காக எத்தனையோ மருந்து மாத்திரைகள் கடைகளில் விற்கப்படுகின்றன. இருப்பினும் அவை தற்காலிகமானவையே தவிர, நிரந்தரமானவை அல்ல.
இவ்வாறான மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் வேறு விதமான விளைவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு.
எனவே நிரந்தரமான தீர்வைப்பெற இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம்.
தேன்: தொண்டை வலி
தேன் தொண்டையில் ஏற்படும் வலிக்கு ஒரு சிறந்த நிவாரணியாகும். எனவே தொண்டையில் புண் அல்லது அதனால் ஏற்படும் வலியை போக்குவதற்கு, தேனை தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
காபி: ஒற்றை தலைவலி
காப்ஃபைனை தினமும் அளவுக்கு அதிகமாக பருகினால் தான் உடலுக்கு ஆபத்தே தவிர, அளவாக பருகினால் ஒற்றை தலைவலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
பூண்டு எண்ணெய்: காது வலி
காதுகளில் வலி ஏற்பட்டால், பூண்டுகளை தட்டி கடுகு எண்ணெயில் போட்டு வெதுவெதுப்பாக சூடேற்றி, அதனை காதுகளில் ஊற்றினால் உடனே வலி நீங்கிவிடும்.
கிராம்பு: பல் வலி
சொத்தை காரணமாக பற்களில் வலி ஏற்பட்டால், அப்போது கிராம்புகளை அந்த பற்களின் மேல் வைத்து கடித்துக் கொண்டால் பல் வலி போய்விடும்.
வெதுவெதுப்பான நீர் குளியல்: தசைப் பிடிப்பு
உடலில் ஆங்காங்கு தசைப் பிடிப்புகள் ஏற்பட்டால், அப்போது வெதுவெதுப்பான நீரில் குளியல் எடுத்தால் பிடிப்புக்கள் நீங்குவதோடு உடலுக்கு மசாஜ் செய்தது போன்றும் இருக்கும்.
உப்பு: பாத வலி
நிறைய மக்களுக்கு இரவில் படுக்கும் போது பாத வலியால் அவஸ்தைப்படுவார்கள். முக்கியமாக கர்ப்பிணிகள் பாத வீக்கத்தால் பாதிக்கப்படுவார்கள். அப்போது வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து, அந்த நீரில் கால்களை சிறிது நேரம் ஊற வைத்தால், வலி நீங்குவதோடு வீக்கமும் குறையும்.
திராட்சை: முதுகு வலி
முதுகு வலியின் போது திராட்சை சாப்பிட்டால், உடலில் இரத்த ஓட்டமானது சீராக இருந்து முதுகு வலி வராமல் தடுக்கும் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே நாள்பட்ட முதுகு வலியைக் கொண்டவர்கள், தினமும் திராட்சை சாப்பிட்டால், முதுகு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
மஞ்சள்: வீக்கத்தை குறைக்கும்
மஞ்சளில் எண்ணற்ற ஆன்டி-செப்டிக் தன்மை உள்ளதால், அது பல்வேறு வலிகள் மற்றும் வீக்கங்களை சரிசெய்யும். அதிலும் வீக்கம் அதிகம் உள்ள இடத்தில், மஞ்சளை தண்ணீரில் கலந்து, அந்த பேஸ்ட்டை தடவினால் வீக்கமானது தணியும்.
செர்ரிப் பழங்கள்: மூட்டு வலி
மூட்டு வலி உள்ளவர்கள் செர்ரிப் பழத்தை அதிகம் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆந்தோசையனின்கள் மூட்டு வலியை குணமாக்கும்.
தக்காளி: கால் பிடிப்பு
இரவில் கடுமையான கால் பிடிப்பு ஏற்படுகிறதா? அப்படியானால், உணவில் தக்காளியை அதிகம் சேர்த்தால், அதில் உள்ள பொட்டாசியம் கிடைத்து நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
மீன்கள்: அடிவயிற்று வலி
மீன்களில் சால்மன் அல்லது டூனா போன்ற மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது.இது வயிற்றில் உள்ள புண்களை சரிசெய்யக்கூடிய சக்தி கொண்டவை. எனவே இத்தகைய மீன்களை அதிகம் சாப்பிட்டால், அடிவயிற்றில் ஏற்படும் வலியைத் தணிக்கலாம்.
ஓட்ஸ்: மாதவிடாய் வயிற்று வலி
மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலியை சரிசெய்ய, ஓட்ஸ் பெரிதும் உதவியாக இருக்கும். எனவே தினமும் 1 கப் ஓட்ஸை காலையில் சாப்பிடுங்கள்.
அன்னாசி: வாயுத் தொல்லை
வாயுவினால் ஏற்படும் வயிற்று வலியை தவிர்ப்பதற்கு, அன்னாசியை சாப்பிட்டு வந்தால் அன்னாசி வயிற்றில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி வயிற்றில் வாயு சேர்வதைத் தடுக்கும்.
புதினா: தசைப்புண்
அதிகப்படியான வேலைப்பளுவால் தசைகள் அளவுக்கு அதிகமாக வலிக்க ஆரம்பித்தால், அப்போது வெதுவெதுப்பான நீரில் சிறிது புதினா எண்ணெய் சேர்த்து குளித்தால் அது வலியைக் குறைத்துவிடும்.
இதுவரையில் சுமார் 8000 பசுக்கள் கோமாரி நோயால் செத்துமடிந்துவிட்டன. கவலைப்பட யாரும் இல்லை தமிழ்நாட்டில். சுலபமான மருந்து ஒன்று உள்ளது...
ஜீரகம், வெந்தயம்,மிளகு மூன்றும் இரண்டிரண்டு ஸ்பூன் எடுத்து ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்து பின் மஞ்சள் 2 ஸ்பூன் , பூண்டு 4 பல்லு, நாட்டு சர்க்கரை 100 கிராம், தேங்காய் பூ 1 மூடி அத்தனையையும் அரைத்து சட்டினியாக்கி ஒரு வேளை க்கு ஊட்டிவிடவும். இப்படி 3 நாள் 3 வேளை செய்யின் பசு தெளியும்.
மேலும் ஒரு லிட்டர் நல்லண்ணையில் பூண்டு, மஞ்சள், வேப்பிலை,துளசி,மருதாணி, குப்பைமேனி இவைகளை சேர் ததுக் காய்ச்சி ஆரவைத்து நான்கு கால்களிலும் தடவவும். நன்றி.
நல்ல பாஸ்வேர்டை உருவாக்க எளிய வழி
பாஸ்வேர்டை மறந்து விடுங்கள். இனி பாஸ்பிரேசை பயன்படுத்துங்கள், இதுவே பாதுகாப்பான பாஸ்வேர்டை உருவாக்குவதற்கான எளிய வழி என்கின்றனர் நிபுணர்கள். அது என்ன பாஸ்பேர்ஸ்? பாஸ்வேர்டு என்றால் கடவுச்சொல்! பாஸ்பிரேஸ் என்றால் கடவுவாக்கியம். அதாவது ஒரு வாக்கியத்தில் இருந்து பாஸ்வேர்டை உருவாக்குவது .
உதாரணத்திற்கு நான் இந்த பள்ளியில் இந்த ஆண்டு படித்தேன், என்ற வாக்கியத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த வாக்கியத்தில் ஒவ்வொரு வார்த்தைகளிலும் உள்ள முதல் எழுத்துக்களை மட்டும் எடுத்து வரிசையாக எழுதுங்கள். அதன் நடுவே மானே தேனே பொன்மானே போடுவது போல சில எழுத்துக்களை பெரிய எழுத்தாக எழுதுங்கள். எண்கள் வருவது போல பார்த்துக்கொள்ளுங்கள்:. இப்போது கிட்டத்தட்ட 15-16 எழுத்துக்களைல் பாஸ்வேர்டு தயாராகிவிடும். இந்த எழுத்து வரிசையை யாராலும் அத்தனை எளிதில் ஊகித்துவிடவும் முடியாது. அதன் காரணமாகவே தாக்காளர்களாலும் நடுவே இதனை கண்டறிந்து உடைக்க முடியாது.
இந்த எழுத்து வரிசையை பார்க்கும் போது முதலில் உங்களுக்கே தலை சுற்றும். இத்தனை கடினமானதை எப்படி நினைவில் கொள்வது என மலைப்பாக இருக்கும். ஆனால் நீங்கள் இதை உருவாக்க பயன்படுத்திய அடிப்படை வாக்கியத்தை நினைவில் வைத்திருந்தால் போதுமானது, அதிலிருந்து பாஸ்வேர்டை உருவாக்க பயன்படுத்திய யுக்தியை கொண்டே அதை மீண்டும் எழுதிவிடலாம்.. இதற்கான குறிப்புகளை மட்டும் நினைவில் கொண்டால் போதுமானது.
பாஸ்வேர்டை உருவாக்க பெரும்பாலலும் எல்லோரும் பொதுவான வழிமுறைகல்ளையே கையால்கின்ற்னர். இவற்றை கொண்டே தாக்காளர்கள் பாஸ்வேர்டை யூகித்து விடுகின்றனர். ஆனால் வாக்கியங்கள் கொண்டு பாஸ்வேர்டை உருவாக்கும் போது மற்றவர்கள் அதை யூகிப்பது கடினம். அடிப்படை வார்த்தை தெரிந்தால் கூட அதில் செய்த மாற்றங்களை அப்படியே செய்வது கடிமானது.
எனவே தான் பாஸ்பேரேசை பயனப்டுத்துங்கள் என்கின்றனர்.
இண்டெர்நெட்டில் அந்த கால டி.வி நிகழ்ச்சிகள்.
கீழே உள்ள இணையதளம் உங்களை வியப்பில் ஆழ்த்தக்கூடும். அப்படியே பிளேஷ்பேக் நினைவுகளில் மூழ்க வைத்துவிடும். இந்த தளம் 1980 களுக்கு பின்னோக்கி அழைத்துச்சென்று அந்த கால தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்க வைக்கிறது. அதுவும் எப்படி அந்த காலத்தில் தொலைக்காட்சி பார்த்த அனுபவத்தை பெரும் வகையில். ‘
இப்போது பிளாட் டிவிகளையும் பிளஸ்மா டிவிகளையும் கொஞ்சம் மறந்து , டயனோரா, சாலிடேர் காலத்துக்கு செல்லுங்கள் பார்க்கலாம். ( இளம் தலைமுறையினர் கூகுலில் தேடிப்பார்க்கவும் ,அல்லது தில்லுமுல்லு கால படங்களில் டிவியை பார்க்கவும்). ஒரு பெரிய மேஜையை அடைத்துக்கொள்ளும் அளவுக்கு அமைந்திருந்த அந்த நாள் தொலைக்காட்சி பெட்டியில் நிகழ்ச்சியை பார்ப்பது போலவே இணைய திறையில் நிகழ்ச்சிகள் இந்த தளத்தில் ஒளிபரப்பாகின்றன. முகப்பு பக்கத்தில் இருக்கும் அந்த கால டிவியில் நிகழ்ச்சிகள் தோன்றுகின்றன. அதன் பக்கத்தில் டிவி பட்டன்கள் இருக்கின்றன. ரிமோட்டை மறந்து விட்டு இந்த பட்டன்களை இயக்குவதன் மூலம் டிவியில் நிகழ்ச்சிகளை பார்க்கலாம்.
அருகிலேயே எந்த வகையான நிகழ்ச்சிகளை பார்க்கலாம் எனும் பட்டியல் இருக்கிறது.
கிழே ஆண்டை தேர்வு செய்து கொள்ளாம்.
பிளேஷ்பேக்கில் முழ்கி மகிழுங்கள்.
இணையதள முகவரி:http://my80stv.com/#RLpc-NSoR6g
ஆனால் இந்த தளத்தில் ஒரே குறை அமெரிக்கா சார்ந்த நிகழ்ச்சிகளையெ பார்க்கலாம். நம்மூருக்கும் இப்படி ஒரு தளம் அமைத்தால் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளை பார்க்கலாம். அடிக்கடி தடங்களுக்கு வருந்துகிறோம் அறிவுப்பு தோன்றுவதையும் பார்க்கலாம். தூர்தர்ஷனை என்ன தான் சிலர் கிண்டல் செய்தாலும் இன்றைய அழுகாச்சி மெகா சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோ அட்டகாசங்களுக்கு டி.டி எவ்வளவோ மேல்.
சாப்ட்வேர் பாதுகாப்பு சேவை அன்செக்கி
எப்போதேனும் உங்கள் இணைய முகப்பு பக்கம் உங்களுக்கு தெரியாமலே மாறியிருப்பதை கவனித்திருக்கிறீர்களா? அதே போல நீங்கள் பயன்படுத்தும் தேடியந்திரம் திடிரென தானாக மாறியிருக்கிறதா ? இவ்வளவு ஏன் உங்கள் பிரவுசரும் மாறியிருக்கலாம், கவனித்திருக்கிறீர்களா?
இந்த மாற்றங்களை நீங்கள் கவனித்து இவற்றுக்கான காரணம் புரியாமல் விழித்திருக்கலாம். அல்லது இந்த மாற்றங்களை கவனிக்கமாலே கூட இருந்திருக்கலாம். அநேகமாக நீங்கள் புதிதாக ஒரு சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்த பிறகு இந்த மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம். ஏனெனில் பல சாப்ட்வேர்கள் , அவற்றை இன்ஸ்டால் செய்யும் போது கூடவே தேவையில்லாத வேறு சில சாப்ட்வேர் துண்டுகள் அல்லது நீட்டிப்புகளையும் சேர்த்தே நிறுவுகின்றன. இந்த அழையா விருந்தாளிகள் தான் உங்கள் கம்ப்யூட்டரில் மாற்றங்களை செய்கின்றன. உங்களை அறியாமலே பின்னணியில் கூட இவை செயல்படலாம்.
பெரும்பாலான நேரங்களில் இன்ஸ்டால் செய்யப்படும் போதே , இவை தேவையா என கேட்கப்பட்டிருக்கலாம். அவற்றை நீங்கள் கவனிக்கமாலும் இருந்திருக்கலாம். எது எப்படியோ, புதிய சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்யும் போது அந்த சாப்ட்வேர் தவிர வேறு எந்த தேவையில்லாத சாப்ட்வேர் பயன்பாடுகளும் உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவப்படாமல் பாதுகாத்து கொள்ள விரும்பினால் அன்செக்கி சேவையை பயன்படுத்தி பார்க்கலாம்.
சாப்டேவேர்டன் நேரடியாக அல்லது மறைமுகமாக நிறுவப்படும் தேவையில்லாத பயன்பாடுகளை கண்டறிந்து அவற்றை தடுத்து நிறுத்துவதாக அன்செக்கி உறுதி அளிக்கிறது. அதே போல ஏதேனும் உபரி சாப்ட்வேர் நிறுவப்படுவதாக் இருந்தால் அது பற்றி எச்சரிக்கையும் செய்வதாக சொல்கிறது. ஆக புதிய சாப்ட்வேரை இன்ஸ்டால் செயவதாக இருந்தால் அதற்கு முன்னர் அன்செக்கியை நிறுவிக்கொள்ளலாம். ( அன்செக்கி வேறு எதையும் நிறுவாது என நம்புவோம்).
இப்படியாக அன்செக்கி சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யும் போது பாதுகாப்பு அளிப்பதோடு , குறிப்பிட்ட சாப்ட்வேர்கள் அப்டேட் செய்யப்படும் போது தானாகவே அந்த மேம்பாடுகளையும் செயலுக்கு கொண்டு வருகிறது.
இணையதள முகவரி: http://unchecky.com/
ஆன்லைனில் படம் காட்டலாம்; புதிய இணையதளம்.
லைவ் ரிலே போல இணையத்தில் லைவாக புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும் ? இந்த அனுபவத்தை சோதித்து பார்க்க லைவ்.பிக்ஸ்.இயோ சேவையை பயன்படுத்தி பார்க்க வேண்டும். அடிப்படையில் புகைப்பட பகிர்வு சேவையான இந்த தளம் இணையம் வழி புகைப்படங்களை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள உதவுகிறது. புகைப்பட பகிர்வு சேவை தான் ஏற்கனவே நிறைய இருக்கின்றனவே என்று அலுத்துக்கொள்ளும் முன் கவனிக்க, இந்த சேவை புகைப்பட பகிர்வில் புதுமையை கொண்டு வந்திருக்கிறது .
எல்லா புகைப்பட பகிர்வு சேவை போலவே ,இதிலும் முதலில் பகிரவேண்டிய புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும். புகைப்படம் என்பதைவிட புகைப்படங்களை பதிவேற்றினால் சிறப்பாக இருக்கும். உடனே உங்கள் புகைப்பட்டத்துக்கான இணைய முகவரி ஒன்று உருவாக்கி தரப்படும். அந்த முகவரியை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த முகவரியை கிளிக் செய்தால் நண்பர்கள் கிளிக் செய்தவுடன் அசந்து போவார்கள். காரணம் நீங்கள் அனுப்பிய புகைப்படங்களை அவர்களால் பார்க்க முடியும் என்பது மட்டும் அல்ல: அந்த படங்களின் பின்னே உள்ள கதைகளை நீங்கள் விவரிப்பதை அவர்கள் கேட்கலாம் என்பதால் தான் இந்த அசரல். ஆம் , புகைப்படங்களை கிளிக் செய்ததுமே இந்த சேவை ஒரு தனி அரட்டை அறையை உருவாக்கி கொடுக்கும். இம்ங்கிருந்து நீங்கள் ஒவ்வொரு புகைப்படம் எடுக்கப்பட இடம் பற்றி வரணனை செய்ய நண்பர்கள் கேட்டு ரசிக்கலாம்.
எங்காவது விடுமுறைக்கு போய்வந்ந்தால் விட்டுக்கு வந்த நண்பர்களிடம் ஆல்பத்தை காட்டி சுற்றுலா அனுபவத்தை விவரிப்பது போல , இந்த சேவை ஆன்லைனில் நண்பர்களிடம் புகைப்படம் பின்னே உள்ள கதைகளை பகிர்ந்து கொள்ள உதவுகிறது.
இப்போது சொல்லுங்கள் , புதுமையான புகைப்பட பகிர்வு சேவை தானே.
இணையதள முகவரி: http://live.pics.io/
FIFA உலக கோப்பை கால்பந்து - வெற்றியாளர்கள் ( ஆண்டு, நடந்த நாடு , வெற்றியாளர் , ஸ்கோர் )
2010 - தென் ஆப்பிரிக்கா - ஸ்பெயின் - ஸ்பெயின் 1-0 என்ற கணக்கில் நெதர்லாந்து
2006 - ஜெர்மனி - இத்தாலி - இத்தாலி 1-1 ( 5-3 ) , பிரான்ஸ்
2002 - ஜப்பான் / எஸ் கொரியா , பிரேசில் , பிரேசில் 2-0 என்ற கணக்கில் ஜெர்மனி
1998 - பிரான்ஸ் பிரான்ஸ் , பிரான்ஸ் 3-0 என்ற கணக்கில் பிரேசில்
1994 - US- பிரேசில் - பிரேசில் 3-2 இத்தாலி
1990 - இத்தாலி - ஜெர்மனி - ஜெர்மனி 1-0 அர்ஜென்டீனா
1986 - மெக்ஸிக்கோ , அர்ஜென்டீனா , அர்ஜென்டீனா 3-2 ஜெர்மனி
1982 - ஸ்பெயின் - இத்தாலி - இத்தாலி 3-1 ஜெர்மனி
1978 - அர்ஜென்டீனா , அர்ஜென்டீனா , அர்ஜென்டீனா 3-1 ஹாலந்து
1974 - ஜெர்மனி - ஜெர்மனி - ஜெர்மனி 2-1 என்ற கணக்கில் ஹாலந்து
1970 - மெக்ஸிக்கோ , பிரேசில் , பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில் இத்தாலி
1966 இங்கிலாந்து , இங்கிலாந்து , இங்கிலாந்து 4-2 ஜெர்மனி
1962 - சிலி - பிரேசில் - பிரேசில் 3-1 செக்கோஸ்லோவாக்கியா
1958 - ஸ்வீடன் - பிரேசில் - பிரேசில் 5-2 ஸ்வீடன்
1954 - சுவிச்சர்லாந்து , ஜெர்மனி , ஜெர்மனி 3-2 ஹங்கேரி
1950 - பிரேசில் - உருகுவே - உருகுவே 2-1 என்ற கணக்கில் பிரேசில்
1946 - நடைபெற்றது
1942 - நடைபெற்றது இல்லை
1938 - பிரான்ஸ் இத்தாலி , இத்தாலி 4-2 ஹங்கேரி
1934 - இத்தாலி - இத்தாலி - இத்தாலி 2-1 செக்கோஸ்லோவாக்கியா
1930 - உருகுவே - உருகுவே - உருகுவே 4-2 அர்ஜென்டீனா
2010 - தென் ஆப்பிரிக்கா - ஸ்பெயின் - ஸ்பெயின் 1-0 என்ற கணக்கில் நெதர்லாந்து
2006 - ஜெர்மனி - இத்தாலி - இத்தாலி 1-1 ( 5-3 ) , பிரான்ஸ்
2002 - ஜப்பான் / எஸ் கொரியா , பிரேசில் , பிரேசில் 2-0 என்ற கணக்கில் ஜெர்மனி
1998 - பிரான்ஸ் பிரான்ஸ் , பிரான்ஸ் 3-0 என்ற கணக்கில் பிரேசில்
1994 - US- பிரேசில் - பிரேசில் 3-2 இத்தாலி
1990 - இத்தாலி - ஜெர்மனி - ஜெர்மனி 1-0 அர்ஜென்டீனா
1986 - மெக்ஸிக்கோ , அர்ஜென்டீனா , அர்ஜென்டீனா 3-2 ஜெர்மனி
1982 - ஸ்பெயின் - இத்தாலி - இத்தாலி 3-1 ஜெர்மனி
1978 - அர்ஜென்டீனா , அர்ஜென்டீனா , அர்ஜென்டீனா 3-1 ஹாலந்து
1974 - ஜெர்மனி - ஜெர்மனி - ஜெர்மனி 2-1 என்ற கணக்கில் ஹாலந்து
1970 - மெக்ஸிக்கோ , பிரேசில் , பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில் இத்தாலி
1966 இங்கிலாந்து , இங்கிலாந்து , இங்கிலாந்து 4-2 ஜெர்மனி
1962 - சிலி - பிரேசில் - பிரேசில் 3-1 செக்கோஸ்லோவாக்கியா
1958 - ஸ்வீடன் - பிரேசில் - பிரேசில் 5-2 ஸ்வீடன்
1954 - சுவிச்சர்லாந்து , ஜெர்மனி , ஜெர்மனி 3-2 ஹங்கேரி
1950 - பிரேசில் - உருகுவே - உருகுவே 2-1 என்ற கணக்கில் பிரேசில்
1946 - நடைபெற்றது
1942 - நடைபெற்றது இல்லை
1938 - பிரான்ஸ் இத்தாலி , இத்தாலி 4-2 ஹங்கேரி
1934 - இத்தாலி - இத்தாலி - இத்தாலி 2-1 செக்கோஸ்லோவாக்கியா
1930 - உருகுவே - உருகுவே - உருகுவே 4-2 அர்ஜென்டீனா
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இந்திய கணக்கு மற்றும் தணிக்கையாளரின் ஜெனரல் (CAG)
1. வி Narahari ராவ் -1948-1954
2. ஏ கே சாந்தா 1954 - 1960
3. ஏ கே ராய் 1960 - 1966
4. எஸ் ரங்கநாதன் 1966 - 1972
5. ஏ பக்ஷி 1972 - 1978
6. கியான் பிரகாஷ் 1978 - 1984
7. டி என் சதுர்வேதி 1984 - 1990
8. சி ஜி Somiah 1990 - 1996
9. வி கே Shunglu 1996 - 2002
10. வி என் கவுல் 2002 - 2008
11. வினோத் ராய் 2008 - 2013
12. சசி காந்த் சர்மா 2013 - பதவியில்
(காலம் 6 ஆண்டுகள் பதவி அல்லது 65 வயதுக்கு, எந்த முந்தைய உள்ளது)
1. வி Narahari ராவ் -1948-1954
2. ஏ கே சாந்தா 1954 - 1960
3. ஏ கே ராய் 1960 - 1966
4. எஸ் ரங்கநாதன் 1966 - 1972
5. ஏ பக்ஷி 1972 - 1978
6. கியான் பிரகாஷ் 1978 - 1984
7. டி என் சதுர்வேதி 1984 - 1990
8. சி ஜி Somiah 1990 - 1996
9. வி கே Shunglu 1996 - 2002
10. வி என் கவுல் 2002 - 2008
11. வினோத் ராய் 2008 - 2013
12. சசி காந்த் சர்மா 2013 - பதவியில்
(காலம் 6 ஆண்டுகள் பதவி அல்லது 65 வயதுக்கு, எந்த முந்தைய உள்ளது)
இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதிகள்
பகுதி I - ஒன்றியம் மற்றும் அதன் மண்டலம்
பகுதி II - குடியுரிமை
பகுதி III - அடிப்படை உரிமைகள்
பகுதி IV - மாநில கொள்கை வழிகாட்டி கோட்பாடுகள்
பகுதி IVA - அடிப்படை கடமைகள்
பகுதி V - ஒன்றியம்
பாகம் VI - மாநிலம்
பகுதி VII - முதல் அட்டவணை படி பகுதி B யில் குறிபிட்டுள்ளார் மாநிலங்கள்
பகுதி VIII - யூனியன் பிரதேசங்களில்
பகுதி IX - பஞ்சாயத்து
பகுதி IXA - நகராட்ச்சி
பகுதி X - ஆதி மற்றும் பழங்குடி பகுதிகள்
பகுதி XI - ஒன்றியம் மற்றும் அமெரிக்கா இடையே உறவுகள்
பகுதி XII - நிதி, சொத்து, ஒப்பந்தங்கள் மற்றும் வழக்குகள்
பகுதி XIII - வர்த்தக, இந்திய எல்லையில் உள்ள வர்த்தக மற்றும் உடலுறவு
பகுதி XIV - ஒன்றியம் கீழ் சேவைகள் மற்றும் அமெரிக்காவில்
பகுதி XIVA - தீர்ப்பாயங்களை
பகுதி XV-தேர்தல்
பகுதி XVI - சில வகுப்புகள் தொடர்பான சிறப்பு ஏற்பாடுகள்
பகுதி XVII - அதிகாரப்பூர்வ மொழி
பகுதி XVIII - அவசர ஏற்பாடுகள்
பகுதி XIX - இதர
பகுதி XX - அரசியலமைப்பு திருத்தம்
பகுதி XXI - தற்காலிக, இடைக்கால மற்றும் சிறப்பு ஏற்பாடுகள்
பகுதி XXII - குறுகிய தலைப்பு, ஆரம்பம், அதிகாரப்பூர்வ ஹிந்தி எழுத்துகள் மற்றும் Repeals
பகுதி I - ஒன்றியம் மற்றும் அதன் மண்டலம்
பகுதி II - குடியுரிமை
பகுதி III - அடிப்படை உரிமைகள்
பகுதி IV - மாநில கொள்கை வழிகாட்டி கோட்பாடுகள்
பகுதி IVA - அடிப்படை கடமைகள்
பகுதி V - ஒன்றியம்
பாகம் VI - மாநிலம்
பகுதி VII - முதல் அட்டவணை படி பகுதி B யில் குறிபிட்டுள்ளார் மாநிலங்கள்
பகுதி VIII - யூனியன் பிரதேசங்களில்
பகுதி IX - பஞ்சாயத்து
பகுதி IXA - நகராட்ச்சி
பகுதி X - ஆதி மற்றும் பழங்குடி பகுதிகள்
பகுதி XI - ஒன்றியம் மற்றும் அமெரிக்கா இடையே உறவுகள்
பகுதி XII - நிதி, சொத்து, ஒப்பந்தங்கள் மற்றும் வழக்குகள்
பகுதி XIII - வர்த்தக, இந்திய எல்லையில் உள்ள வர்த்தக மற்றும் உடலுறவு
பகுதி XIV - ஒன்றியம் கீழ் சேவைகள் மற்றும் அமெரிக்காவில்
பகுதி XIVA - தீர்ப்பாயங்களை
பகுதி XV-தேர்தல்
பகுதி XVI - சில வகுப்புகள் தொடர்பான சிறப்பு ஏற்பாடுகள்
பகுதி XVII - அதிகாரப்பூர்வ மொழி
பகுதி XVIII - அவசர ஏற்பாடுகள்
பகுதி XIX - இதர
பகுதி XX - அரசியலமைப்பு திருத்தம்
பகுதி XXI - தற்காலிக, இடைக்கால மற்றும் சிறப்பு ஏற்பாடுகள்
பகுதி XXII - குறுகிய தலைப்பு, ஆரம்பம், அதிகாரப்பூர்வ ஹிந்தி எழுத்துகள் மற்றும் Repeals
உலகம்:
★ மொத்த மேற்பரப்பு பகுதி: 510.064.472 சதுர கி.மீ.
★ மொத்த நில பரப்பளவு : 148.940.000 சதுர கிமீ ( பிளானட் பூமியின் மேற்பரப்பில் 29.2 % )
★ மொத்த நீர் பகுதி : 361.132.000 சதுர கிமீ ( பிளானட் பூமியின் மேற்பரப்பில் 70,8 % )
★ மொத்த மக்கள் தொகை : 7,04 பில்லியன்
★ மொத்த எடை : 5,9722 × 1024 கிலோ
★ மொத்த தொகுதி : 1,08321 × 1012 கிமீ 3
★ மொத்த வயது : 4.54 பில்லியன் ஆண்டுகள்
★ மேற்பரப்பு ஈர்ப்பு : 32,041 ft/s2
★ சந்திரன் இருந்து தொலைவு : 384.403 கிமீ
★ சூரியனில் இருந்து தொலைவு : 150 மில்லியன் கிமீ
★ எக்குவடோரியல் ஆரம் : 6,378.1 கிமீ
★ சராசரி ஆரம் : 6,371.0 கிமீ
★ துருவ ஆரம் : 6,356.8 கிமீ
★ சுற்றும் வேகம் : 29,78 கி.மீ. / கள்
★ சுற்றும் நேரம் : 365,256363004 நாட்கள்
★ மேற்பரப்பு வெப்பநிலை : -88 / 5 ( நிமிடம் / அதிகபட்சம் ) ° C
★ சூரியனை சுற்றி சுற்றுப்பாதை அளவு : 92.956.050 மைல்கள் ( அரை பிரதான அச்சு )
★ சுழற்சி காலம் : 23,934 மணி நேரம்
★ சுழற்சி வேகம் : 1670 கிமீ / மணி
★ அருகில் உள்ள கிரகம் இருந்து தொலைவு : வீனஸ் இருந்து 38 மில்லியன் கிமீ
★ மொத்த கண்டம் : 7 ( ஆசியா , ஆப்பிரிக்கா , ஐரோப்பா , வட அமெரிக்கா , தென் அமெரிக்கா , ஆஸ்திரேலியா , அண்டார்டிகா )
★ மொத்த பெருங்கடல் : 5 ( பசிபிக் , அட்லாண்டிக் , இந்திய , தெற்கு , ஆர்க்டிக் )
★ ஐ.நா. அறியப்பட்டதா நாடுகள் : 193
★ முதன்மை டெக்டோனிக் பலகைகள் : 8 ( ஆப்பிரிக்க , அண்டார்டிக் , ஆஸ்திரேலிய , யூரேசிய , இந்திய , வட அமெரிக்க , பசிபிக் , தென் அமெரிக்க )
★ பெரிய கண்டம் : ஆசியா , 43.820.000 சதுர கிமீ ( மொத்த உலக நிலப்பகுதியில் 29.5 % )
★ மிகச்சிறிய கண்டம் : ஆஸ்திரேலியா , 9.008.500 சதுர கி.மீ.
★ மிகப்பெரிய நாடு : ரஷ்யா , 17.098.242 சதுர கி.மீ.
★ மிகச்சிறிய நாடு : வாடிகன் சிட்டி - 0.44 சதுர கி.மீ.
★ பெரிய பெருங்கடல் : பசிபிக் பெருங்கடல் - 155.557.000 சதுர கி.மீ.
★ மிகச்சிறிய பெருங்கடல் : ஆர்க்டிக் , 14.056.000 சதுர கி.மீ.
★ உயர்ந்த மலை : எவரெஸ்ட் , 29.029 அடி - நேபால்
★ நீளமான நதி : நைல் - 6.650 கிமீ
★ பெரிய ஏரி : காஸ்பியன் கடல் - 371.000 சதுர கி.மீ.
★ மொத்த மேற்பரப்பு பகுதி: 510.064.472 சதுர கி.மீ.
★ மொத்த நில பரப்பளவு : 148.940.000 சதுர கிமீ ( பிளானட் பூமியின் மேற்பரப்பில் 29.2 % )
★ மொத்த நீர் பகுதி : 361.132.000 சதுர கிமீ ( பிளானட் பூமியின் மேற்பரப்பில் 70,8 % )
★ மொத்த மக்கள் தொகை : 7,04 பில்லியன்
★ மொத்த எடை : 5,9722 × 1024 கிலோ
★ மொத்த தொகுதி : 1,08321 × 1012 கிமீ 3
★ மொத்த வயது : 4.54 பில்லியன் ஆண்டுகள்
★ மேற்பரப்பு ஈர்ப்பு : 32,041 ft/s2
★ சந்திரன் இருந்து தொலைவு : 384.403 கிமீ
★ சூரியனில் இருந்து தொலைவு : 150 மில்லியன் கிமீ
★ எக்குவடோரியல் ஆரம் : 6,378.1 கிமீ
★ சராசரி ஆரம் : 6,371.0 கிமீ
★ துருவ ஆரம் : 6,356.8 கிமீ
★ சுற்றும் வேகம் : 29,78 கி.மீ. / கள்
★ சுற்றும் நேரம் : 365,256363004 நாட்கள்
★ மேற்பரப்பு வெப்பநிலை : -88 / 5 ( நிமிடம் / அதிகபட்சம் ) ° C
★ சூரியனை சுற்றி சுற்றுப்பாதை அளவு : 92.956.050 மைல்கள் ( அரை பிரதான அச்சு )
★ சுழற்சி காலம் : 23,934 மணி நேரம்
★ சுழற்சி வேகம் : 1670 கிமீ / மணி
★ அருகில் உள்ள கிரகம் இருந்து தொலைவு : வீனஸ் இருந்து 38 மில்லியன் கிமீ
★ மொத்த கண்டம் : 7 ( ஆசியா , ஆப்பிரிக்கா , ஐரோப்பா , வட அமெரிக்கா , தென் அமெரிக்கா , ஆஸ்திரேலியா , அண்டார்டிகா )
★ மொத்த பெருங்கடல் : 5 ( பசிபிக் , அட்லாண்டிக் , இந்திய , தெற்கு , ஆர்க்டிக் )
★ ஐ.நா. அறியப்பட்டதா நாடுகள் : 193
★ முதன்மை டெக்டோனிக் பலகைகள் : 8 ( ஆப்பிரிக்க , அண்டார்டிக் , ஆஸ்திரேலிய , யூரேசிய , இந்திய , வட அமெரிக்க , பசிபிக் , தென் அமெரிக்க )
★ பெரிய கண்டம் : ஆசியா , 43.820.000 சதுர கிமீ ( மொத்த உலக நிலப்பகுதியில் 29.5 % )
★ மிகச்சிறிய கண்டம் : ஆஸ்திரேலியா , 9.008.500 சதுர கி.மீ.
★ மிகப்பெரிய நாடு : ரஷ்யா , 17.098.242 சதுர கி.மீ.
★ மிகச்சிறிய நாடு : வாடிகன் சிட்டி - 0.44 சதுர கி.மீ.
★ பெரிய பெருங்கடல் : பசிபிக் பெருங்கடல் - 155.557.000 சதுர கி.மீ.
★ மிகச்சிறிய பெருங்கடல் : ஆர்க்டிக் , 14.056.000 சதுர கி.மீ.
★ உயர்ந்த மலை : எவரெஸ்ட் , 29.029 அடி - நேபால்
★ நீளமான நதி : நைல் - 6.650 கிமீ
★ பெரிய ஏரி : காஸ்பியன் கடல் - 371.000 சதுர கி.மீ.
இந்தியாவில் ஏற்ப்பட்ட மிகபெரிய பூகம்பங்களில் பட்டியல்
ஜூன் 16, 1819 ----------கச், குஜராத் 8
ஜனவரி 10, 1869 -----------அசாம் 7.5
மே 30, 1885 -------------Sopore, ஜம்மு மற்றும் காஷ்மீர் 7
ஜூன் 12, 1897 -----------ஷில்லாங் பீடபூமி, மேகாலயா 8.7
ஏப்ரல் 4, 1905 --------------காங்க்ரா, இமாச்/சல பிரதேசம் 8
ஜூலை 8, 1918 --------------Srimangal, அசாம் 7.6
ஜூலை 2, 1930 -------------Dhubri, அசாம் 7.1
ஜனவரி 15, 1934 ---------- நேபால் பார்டர் , பீகார் 8.3
ஜூன் 26, 1941-------- அந்தமான் தீவுகள் 8.1
அக் 23, 1943 -------அஸ்ஸாம் 7.2
ஆகஸ்ட் 15, 1950 -----------அருணாச்சல பிரதேசம் சீனாவின் எல்லை 8.5
ஜூலை 21, 1956 ------------Anjar, குஜராத் 7
டிசம்பர் 10, 1967 -------கோய்னா, மகாராஷ்டிரா 6.5
ஜனவரி 19, 1975 --------பட்ஜெட், இமாச்சல பிரதேசம் 6.2
ஆகஸ்ட் 06, 1988 -----------மணிப்பூர், மியான்மர் எல்லை 6.6
ஆக 21, 1988 நேபால் பார்டர் , பீகார் 6.4
அக் 20, 1991---------உட்டர்கஷி மலைகள் 6.6
செப்டம்பர் 30, 1993------ லாத்தூர்-உஸ்மனாபாத், மகாராஷ்டிரா 6.3
மே 20, 1997--------- ஜபல்பூர், மத்திய பிரதேசம் 6
மார்ச் 29, 1999------------ Chamoli மாவட்டம், உத்தர பிரதேசம் 6.8
ஜனவரி 26, 2001------- Bhuj, குஜராத் 7.7
1. இந்தியமொழிக் குடும்பங்கள்:
a. இந்தோ-ஆசிய மொழிகள்
b. ஆஸ்திரோ-ஆசிய மொழிகள்
c. சீன-திபெத்திய மொழிகள்
d. திராவிட மொழிகள்
2. இந்திய நாட்டை மொழிகளின் காட்சிசாலை என மொழியியல் பேராசரியர் ச.அகத்தியலிங்கம் குறிபிட்டுள்ளார்.
3. திராவிட மொழிக் குடும்பங்கள்:
a. தென்திராவிட மொழிகள்
b. நடுத்திராவிட மொழிகள்
c. வடதிராவிட மொழிகள்
4. இந்தியாவில் மொத்தம் 12 மொழிக்குடும்பங்கள் உள்ளன. அவற்றுள் 325 மொழிகள் பேசப்படுவதாக இந்திய மானிடவியல் கணக்கெடுப்புத் தெரிவிக்கின்றது,
5. தென்திராவிட மொழிகள்:
தமிழ், மலையாளம்,கன்னடம்,குடகு, துளு, தோடா, கோத்தா, கொரகா, இருளா
6. நடுத்திராவிட மொழிகள்:
தெலுங்கு, கோண்டி, கோயா, கூயி, கூவி, கோலாமி, பர்ஜி, கதபா, கோண்டா, நாயக்கி, பெங்கோ,ஜதபு
7. வடதிராவிட மொழிகள்:
குரூக், மல்தோ, பராகுய்
8. கால்டுவெல் “திராவிட மொழிகளின் ஒப்பிலகணம்” என்ற நூல் எழுதி உள்ளார்.
9. தமிழையும் அதன் கிளைமொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்இந்திய மொழிகளை ஒருகாலத்தில் தமிளியன் அல்லது தமுலிக் என்று அழைத்தனர்.
10. தமிழ்> தரமிள> திரவிட> திராவிட என உருவாகியது என்று ஈராஸ் பாரதியார் கூறுகிறார்.
11. தமிழ்மொழிகளில் இன்று நமக்கு கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழமையான நூல் தொல்காப்பியம்.
1. பிறந்த ஊர்: தேரழுந்தூர், மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது (சோழநாட்டுத் திருவெழுந்தூர்)
2. இறந்த ஊர்: பாண்டி நாட்டு நாட்டரசன்கோட்டை
3. தந்தை: ஆதித்தன்
4. போற்றிவர்: திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளல்
5. காலம்: 12 ஆம் நூற்றாண்டு
6. சயங்கொண்டார், ஒட்ட்க்கூத்தர், புகழேந்தி புலவர் ஆகியோர் கம்பர் காலத்துப் புலவர்கள்.
7. கம்பர் 1௦௦௦ பாடலுக்கு ஒருமுறை சடையப்ப வள்ளலைப் பாடியுள்ளார்.
8. நூல்கள்: ஏர் எழுபது, திருக்கை வழக்கம்(இரண்டும் உழவு பற்றியது), கம்பராமாயணம், சடகோபர் அந்தாதி, சரசுவதி அந்தாதி
9. கம்பர் மகன் அம்பிகாபதி
10. அம்பிகாபதி எழுதியது அம்பிகபதிக்கோவை
11. சிறப்பு: கம்பன்வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும், கல்வியில் பெரியர் கம்பர், வெண்பா பாடுவதில் வல்லவர், விருதப்பா பாடுவதில் வல்லவர்.
12. புகழுரைகள்:
“கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்”
“கம்பனைப் போல் வள்ளுவனைப் போல்
இலங்கோவடிகள் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை”
“யாமறிந்த புலவரிலே”
-பாரதி
உழவின் சிறப்பு
மேழி- கலப்பை, ஏர்; வேந்தர்- மன்னர்; ஆழி- மோதிரம்; சூழ்வினை-உண்டாகும் வறுமைத் துன்பம்; காராளர்- மேகத்தை ஆளுகின்றவர்களாகிய உழவர்.
கம்பராமாயணம்
"தாதுகு சோலை தோறும் சன்பகக் காடு தோறும்
போதவிழ் பொய்கை தோறும் புதுமணல் தடங்கள் தோறும்
மாதவி வேலிப் பூக வனந்தோறும் வயல்கள் தோறும்
ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே"
தாதுகு- மகரந்தம், போது- மலர், பொய்கை- குளம், பூகம்- கமுகம்(பாக்கு மரம்)
"உலகம் யாவையும் தாமுளவாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே"
உலவாக்கல்- உண்டாகுதல்( படைத்தல்); நிலைபெருத்தல்- காத்தல்; நீக்கல்-அழித்தல்; நீங்கலா- இடைவிடாது; அகிலா- அளவற்ற; அன்னவர்- அத்தகைய இறைவன்; தலைவன்- இறைவன்; சரண்- அடைக்கலம்
1. கம்பர் தான் இயற்றிய நூலுக்கு இட்ட பெயர் “இராமாவதாரம்”
2. வழிநூல் என்றும் கூறுவர்.
3. காண்டங்கள்:
4. பாலகாண்டம்
5. அயோத்தியா காண்டம்
6. ஆரணிய காண்டம்
7. கிட்கிந்தா காண்டம்
8. சுந்தர காண்டம்
9. யுத்த கண்டாம்
காண்டம்- பெரும் பிரிவு, படலம்- உட்பிரிவு
முகம் காட்ட மறுத்த நிலா
பூமிக்கு அருகேயுள்ள நட்சத்திரம் ஒன்றிலிருந்து நம்மை வந்தடையும் ஒளி, கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன் அங்கிருந்து வீச ஆரம்பித்ததாக இருக்கும். அது நம்மை வந்து சேர்வதற்குள் இத்தனை ஆண்டுகள் ஆகிவிடுகின்றன. இப்போது நம்மிடம் உள்ள ராக்கெட்களின் வேகத்தை வைத்துப் பார்த்தால், நமக்கு மிகவும் அருகிலுள்ள ஒரு நட்சத்திரத்தைச் சென்று தொட்டுவிட்டுத் திரும்புவதற்கு மட்டும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும்.
2.விண்ணிலிருந்து பூமியை நோக்கி வரும் விண்கற்கள், வளிமண்டலத்திலேயே உரசித் தீப்பிடித்துச் சாம்பலாகி, பின்னர் வடிகட்டப்பட்டுப் பூமியை வந்தடைகின்றன. இந்தத் தூசுத் துகள்கள் மூலம் ஒவ்வொரு நாளும் பூமியின் எடை 25 டன்னும் (1 டன் = ஆயிரம் கிலோ), ஆண்டுக்கு 9,125 டன்னும் அதிகரிக்கிறது.
3.சூரியக் குடும்பத்தில் உள்ள இரண்டாவது மிகப் பெரிய கோள் சனி. இது பூமியைவிட 95 மடங்கு எடை மிகுந்தது. சனிக் கிரகத்தை ஒரு பாத்திரம் என்று வைத்துக் கொண்டால், அதற்குள் 744 பூமிகளை உள்ளே வைக்க முடியும்.
4.விண்வெளிக்குப் போன முதல் உயிரினம் மனிதனல்ல, ஒரு நாய். அதன் பெயர் லைகா. 1957இல் ரஷ்யா அனுப்பிய விண்கலத்தில் சோதனை உயிரினமாக அது அனுப்பி வைக்கப்பட்டது. துரதிருஷ்டவசமாக விண்கலத்துக்குள் இருந்த ஆக்சிஜன் தீர்ந்துபோன நிலையில், அது இறந்து போனது.
5.நிலவு 27 நாட்களுக்கு ஒரு முறை பூமியைச் சுற்றி வருகிறது. அதேநேரம் இப்படிச் சுற்றி வரும்போது, அது தன் ஒரு பக்கத்தை மட்டும்தான் பூமிக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது. நிலவின் மறுபக்கத்தை முதன்முறையாக 1959இல்தான் பார்க்க முடிந்தது. அப்போது ரஷ்யாவின் லூனா 3 என்ற விண்கலம் முதன்முறையாக நிலவின் மறுபக்கத்தை போட்டோ எடுத்து அனுப்பியதால், அது சாத்தியமானது.
சிவப்பு கிரகமான செவ்வாயில் நிரந்தரமாக குடியேற உலகம் முழுவதும் இருந்து 2 லட்சம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதில் 20,000 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நெதர்லாந்தைச் சேர்ந்த, ‘மார்ஸ் ஒன்’ என்ற அமைப்பு செவ்வாய் கிரகத்துக்கு 2023ம் ஆண்டில் மனிதர்களை குடியேற்றப்போவதாக கூறி வருகிறது. இதற்காக 2018ம் ஆண்டில், ரோபோவை அனுப்பி வைக்கப்போவதாகவும் அது தெரிவித்துள்ளது.
குரூப் -2 (CCSE-I) முதன்மை தேர்வுக்கான (Main) விரிவான கேள்விகளுக்கு (Describe type) விடையளிக்க உறுப்பினர்கள் தயாராகும் வகையில் உறுப்பினர்களுக்கிடையே கட்டுரை போட்டிகளை (Essay Competition) நடத்த டார்கெட் டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது. கட்டுரை போட்டிக்கான வரையறைகள்:
1. கட்டுரையின் உள்ளடக்கம் தமிழ் வடிவில் 500 வார்த்தைகள் என்ற அளவில் இருக்க வேண்டும்.
2. டைப் செய்யப்பட்டோ அல்லது தொகுக்கப்பட்ட வடிவிலோ அல்லது கையால் எழுதி ஸ்கேன் பண்ணி அதை பிடிஎப்-கோப்பாக targettnpsc@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
3.தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரை டார்கெட் டிஎன்பிஎஸ்சி முகநூலில் வெளியிடப்படும்.
4.தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைக்கான முதல் பரிசு ரூ.150-க்கான (Mobile E.C Recharge) ஆகும்
திட்டக் குழு சவால்கள்-1
.............................................
எல்லாக் கூட்டாட்சி நாடுகளிலும் மத்திய அரசுகள் தன்னிச்சையாகச் செயல்படக்கூடியவையாக இருக்கின்றன. மாநில அரசுகள் அரசியல் சட்டப்படி தன்னிச்சை அதிகாரங்கள் பெற்றிருந்தாலும், பல்வேறு அம்சங்களில் மத்திய அரசைச் சார்ந்திருக்கக் கூடியவையாக உள்ளன. நிதிபெறுவதில் மாநிலங்கள், மத்திய அரசைச் சார்ந்திருப்பது வெளிப்படையாக உள்ளது.
மாநிலங்கள் நிதிபெறக் காரணம்
பொதுவாக, மத்திய அரசிடம் அதிக வருவாய் தரக்கூடிய வரி இனங்களான - கம்பெனிகள் (மீதான) வரி, வருமான வரி, கலால் வரி, சுங்க வரி, சேவை வரி போன்றவையும் பல சிறிய வரி இனங்களும், லாபம் ஈட்டக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களும் உள்ளன. ஆனால், மத்திய அரசுக்கு இருக்கும் பொது செலவுப் பொறுப்புக்கள் குறைவாகவே உள்ளன.
மக்களின் அருகில் உள்ள மாநில அரசுகள் குறைவான வரி ஆதாரங்களைப் பெற்றுள்ளன. ‘வாட்' என்ற மதிப்புக் கூட்டப்பட்ட விற்பனை வரி, சாராயத்தின் மீதான கலால் வரி, சொத்து மாற்றத்தின் மீதான முத்திரைத் தாள் வரி, வாகன வரி என்ற சில வரி வருவாய்களே உள்ளன. மாநில அரசுகளுக்கு இருக்கும் பொதுச் செலவுப் பொறுப்புக்கள் அதிகம். இந்தச் செலவுகளுக்கு ஈடான வருவாய் இல்லாததினால், மத்திய அரசு தரும் மானிய வருவாயைப் பெறவேண்டியுள்ளது.
நிதி பெறும் வழிகள்
மத்திய அரசிடமிருந்து மூன்று வழிகளில் மாநில அரசுகளுக்கு நிதி வழங்கப்படுகிறது. நிதிக் குழுவின் பரிந்துரைப்படி, திட்டக்குழுவின் பரிந்துரைப்படி, ஒவ்வொரு மத்திய அமைச்சகமும் தன்னிச்சையாகச் சில நிதிகளை வழங்குவது அந்த மூன்று வழிகளாகும். இதில் மிக முக்கியமானது நிதிக் குழுவின் பரிந்துரைகள்.
நிதிக் குழு
நடுநிலையோடு நிதிப்பகிர்வு இருக்க வேண்டும் என்பதற்காக, அரசியல் சட்டம் 280-வது பிரிவின்படி ஐந்து வருடத்துக்கு ஒரு முறை நிதிக் குழு மத்திய அரசால் அமைக்கப்படும். வருமான வரி வருவாயும் கலால் வரி வருவாயும் மட்டுமே மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டன. அரசியல் சட்டத்தில் ‘எஞ்சிய அதிகாரங்கள்' எல்லாம் மத்திய அரசிடம் இருக்கும் என்ற பிரிவைப் பயன்படுத்தி, மத்திய அரசு சேவை வரியை விதித்து அதிக வரி வருவாய் வசூலித்தது.
ஆனால், இவ்வருவாய் மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டியதில்லை என்ற நிலையை மாற்றி, 2000-ல் மத்திய அரசின் எல்லா வரிகளின் (செஸ், சர்-சார்ஜ் நீங்கலாக) நிகர வருவாயை மாநிலங்களுக்கும் பிரித்துக் கொடுக்கும் சட்டத் திருத்தம் நிறை வேற்றப்பட்டது. இதே போன்று 1993-ல் நிறைவேற்றப்பட்ட 73-வது மற்றும் 74-வது சட்டத் திருத்தங்கள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிரந்தர அங்கீகாரம் அளிக்கப்பட்டது. இதனால், மத்திய அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நிதி வழங்க வேண்டும் என்று 270-வது பிரிவில் திருத்தம் செய்யப்பட்டது.
செயல்பாடு
1951-ல் முதல் நிதிக் குழு அமைக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் இக்குழுவுக்கு நீதிபதிகள் தலைவர்களாக நியமிக்கப்பட்டார்கள். பின்பு, அரசியல் தலைவர்கள் நியமிக்கப் பட்டனர். அண்மைக்காலமாக பொருளாதார வல்லுனர்கள் தலைவர்களாக நியமிக்கப்படுகின்றனர். இந்தக் குழுவில் தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்களும் ஒரு உறுப்பினர் செயலரும் இடம்பெறுவர். பொருளாதாரம், பொது நிர்வாகத் துறைகளில் உள்ள வல்லுனர்களை இதன் உறுப்பினர்களாக நியமிப்பது வழக்கம்.
14-வது நிதிக்குழு 2013, ஜனவரி 2, அன்று நியமிக்கப்பட்டது. இதற்கு முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் டாக்டர். ஒய்.வி. ரெட்டி தலைவராகவும், அபிஜித் சென் (பகுதி நேர உறுப்பினர்), சுஷ்மா நாத், எம்.ஜி. ராவ். மற்றும் சுதிப்தோ மண்டல் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.
இக்குழு மத்திய, மாநில அரசுகளோடு ஆலோசனை நடத்தி, தன் சுய ஆராய்ச்சியின் அடிப்படையிலும் மேலே கூறிய அம்சங்கள் தொடர்பான பரிந்துரைகளை அக்டோபர் 31, 2014-ல் மத்திய அரசுக்குச் சமர்ப்பிக்கும். இப்போது அமைக்கப்பட்டுள்ள 14-வது நிதிக் குழுவின் பரிந்துரைகள் 2015-16 முதல் 2019-20 வரை அமல்படுத்தப்படும்.
எதையெல்லாம் பரிந்துரைக்கலாம்?
நிதிக் குழு பரிந்துரைகள் செய்யும் பொதுவான அம்சங்கள்பற்றி அரசியல் சட்டத்தில் உள்ள குறிப்புகள் இவை:
1. மத்திய அரசின் நிகர வரி வருவாயை (வரி வசூலிக்கும் செலவு நீங்கலாக) மத்திய, மாநில அரசுகளுக்குப் பிரித்துக்கொடுப்பது. உதாரணமாக: 70% மத்திய அரசுக்கும், 30% மாநில அரசுக்கும்.
2. எல்லா மாநிலங்களும் ஒரே அளவு பொது செலவுத் தேவையும், வரி வருவாய் பெறக்கூடிய திறனும் இல்லாததினால், நிதிக் குழு எந்த மாநிலங்களுக்கு அதிக நிதியும், எந்த மாநிலங்களுக்குக் குறைவான நிதியும் கொடுக்க வேண்டும் என்று கூற வேண்டும். இதுதான் மாநிலங்களுக்கு உள்ள தொகையை (30%) மாநிலங்களுக்கிடையே பிரித்துக் கொடுப்பதற்கான சூத்திரம்.
3. இதே போன்று ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மத்திய அரசு நிதித் தொகுப்பிலிருந்து தர வேண்டிய நிதிக்கான பரிந்துரையையும் தர வேண்டும்.
4. மாநிலங்களுக்கு மேலும் தேவையான நிதியை, அரசியல் சட்டம் 275-வது பிரிவுப்படி கருணைத் தொகையாகத் தருவதற்கான பரிந்துரைகளும் கொடுக்க வேண்டும்.
5. இவை இல்லாமல், மத்திய அரசு கூறும் வேறு அம்சங்கள் தொடர்பான பரிந்துரைகளையும் கொடுக்க வேண்டும்.
நிதிக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்கவேண்டிய கட்டாயம் இல்லை. எனினும், இதுவரை நிதிக் குழுக்களின் பெரும்பாலான பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுச் செயல்படுத்திவருகிறது. முதல் இரண்டு நிதிக் குழுவில் மாநிலங்களின் திட்டச் செலவுகளுக்கும் சேர்த்தே நிதி பகிர்வு செய்யப்பட்டது. மூன்றாம் நிதிக் குழுவிலிருந்து இவ்வழக்கம் கைவிடப்பட்டு, மத்திய அரசின் வரிவருவாயில் பங்கும், மாநில அரசின் திட்டம் சாராத செலவுகளுக்கான கொடையும் பரிந்துரை செய்யப்படுகிறது.
அணிவகுக்கும் சவால்கள்
இந்த நிதி ஆண்டு (2013-14) தமிழ்நாட்டின் மொத்த அரசு செலவான ரூ 1.42 லட்சம் கோடியில் ரூ. 8463 கோடியே மத்திய அரசிடமிருந்து நிதியாகப் பெறப்படும் என்று மாநில நிதி அறிக்கை கூறுகிறது. அதாவது, மொத்த செலவில் 5.9%. மத்திய அரசு நிதியில் மூன்றில் இரண்டு பங்கு நிதிக் குழுவின் பரிந்துரைப்படி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நிதிக் குழுவும் தமிழகத்துக்கான நிதி அளிப்பைக் குறைத்துவந்திருக்கின்றன. 13-வது நிதிக் குழு (2010-15) மற்ற மூன்று தென் மாநிலங்களுக்கும் இரண்டு மடங்குக்கு மேல் நிதி உயர்த்தி கொடுத்தபோது, தமிழகத்துக்கு மட்டும் இரண்டு மடங்கைவிடக் குறைவாக உயர்த்தியது. இந்தச் சூழ்நிலையில்தான், 14-வது நிதிக் குழு தமிழகம் வந்து நிதி மாற்றம் தொடர்பாக விவாதித்தது.
மத்திய - மாநில அரசுகளுக்கிடையே நிதியை நடுநிலையோடு பிரித்துக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட 14-வது நிதிக் குழு, இந்த வருடம் ஜனவரி மாதம் அமைக்கப்பட்டது (பார்க்க பெட்டிச் செய்தி).
இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து மந்த நிலையில் இருப்பதும், அதனால் மத்திய அரசின் வரி வருவாய் குறைவாக உள்ள சூழலில், மாநிலங்கள் அதிக நிதிக் கேட்டு மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் இந்நேரத்தில், 14-வது நிதிக் குழு முன் பல சவால்கள் ஒன்றாகத் தோன்றி உள்ளன.
1. சிறுபான்மையினர் உரிமைகள் தினம் டிசம்பர் 18 அன்று அனுசரிக்கப்பட்டது.
2. 2013 ஆம் ஆண்டு சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு இந்திய அணியில் முன்னால் அணித்தலைவர் கபில் தேவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
3. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தாலஸ்லேமியா சோதனை கருவியை இம்முனோ புற்றுநோய் தேசிய நிறுவனத்துடன், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இனைந்து வெளியிட்டது.
4. பாராளுமன்றத்தில் ஊழல் பற்றி விசாரிக்க ஒரு வலுவான லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தவை சட்டம் நிறைவேற்றப்பட்டது.
5. ராண் உற்சவம், குஜராத் மாநிலத்தில் ஒரு கலாச்சார திருவிழா- கட்ச்யில்(Kutch) தொடங்கியது.
6. தென் இந்தியாவின் 1st உயரமான கிரிக்கெட் ஸ்டேடியம் வயநாடு, கேரளாவில் தொடங்கப்பட்டது.
7. ஜப்பான் அரசாங்கம் அடுத்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு துறை செலவை 5% அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
8. மார்த்தாண்ட வர்மா, திருவாங்கூர் அரச குடும்பத்தின் தலைவர் 92 வயதில் காலமானார்.
9. மொத்த பணவீக்க நவம்பர் 2013 ல் 7.52 சதவீதமாக அதிகரித்துள்ளது.
10. அங்கேலா மேர்க்கெல்(Angela Merkel) மூன்றாவது முறையாக ஜெர்மனின் வேந்தர்ராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
1. இந்தியா மற்றும் ஜப்பான் இடையே ஆன பண பரிமாற்று ஒப்பந்தம் 15 பில்லியன் டாலர்களில் இருந்து 50 பில்லியன் டாலர் என்று அதிகரித்துள்ளது.
2. பிரெஞ்சு நாட்டை சார்ந்த அல்ஸ்ட்ரோம்(Alstom) நிறுவனம், பிஹெச்இஎல் நிறுவனத்துடன் 125 மில்லியன் யூரோ மதிப்புக்குரிய பாகங்கள் மற்றும் சேவைகளை 1000 மெகாவாட் திறன் கொண்ட நெய்வேலி புதிய அனல் மின்சார திட்டத்துக்கு வழங்க ஒப்பந்தம் பெற்றுள்ளது.
3. தேவயாணி கோப்ரகாடே, ஐக்கிய நாடுகளுடைய இந்தியாவின் நிரந்தர உறுப்பினராக மாற்றப்பட்டார்.
4. இந்தியா, ஆசிய பசிபிக் ஜூனியர் கோல்ப் சாம்பியன்ஷிப் முதல்முறையாக வென்றுள்ளது.
பாகிஸ்தானுடனான போரில் முக்கியப் பங்கு வகித்த மிக்-21 எப்.எல். ரக போர் விமானம் கடந்த 11-ஆம் தேதியன்று இறுதியாக விண்ணில் பறந்து சேவையில் இருந்து விடை பெற்றது.
இதனையடுத்து மிக் விமானங்களுக்குப் பதிலாக முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக தேஜஸ் விமானங்கள் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கான சோதனை ஓட்டம் இன்று நிறைவு பெற்றதை அடுத்து விமானத்தை இந்திய விமானப்படை சேவையில் இணைப்பதற்கான 2-அம் நிலை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி பத்திரத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி விமானப்படை தளபதி பிரவுனிடம் வழங்கினார்.
இதனையடுத்து மிக் விமானங்களுக்குப் பதிலாக முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக தேஜஸ் விமானங்கள் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கான சோதனை ஓட்டம் இன்று நிறைவு பெற்றதை அடுத்து விமானத்தை இந்திய விமானப்படை சேவையில் இணைப்பதற்கான 2-அம் நிலை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி பத்திரத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி விமானப்படை தளபதி பிரவுனிடம் வழங்கினார்.
சென்னைக்கு வடக்கே ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி கேந்திரத்திலிருந்து இந்தியாவின் செயற்கைக்கோள்களும் ஆளில்லா விண்கலங்களும் செலுத்தப்பட்டு வருகின்றன. இங்கு இரண்டு ராக்கெட் செலுத்து மேடைகள் உள்ளன. மூன்றாவது மேடை அமைக்கப்பட உள்ளது. இதற்கிடையே வேறு ஓர் இடத்தில் புதிதாக ஒரு விண்வெளி கேந்திரம் அமைக்கத் திட்டம் உள்ளது.
இப்புதிய விண்வெளி கேந்திரத்தைத் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் அமைக்க வேண்டும் என்று தமிழகத்திலுள்ள பல தரப்பினர் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றனர்.
ராக்கெட்டுகளைச் செலுத்துவதற்கான விண்வெளி கேந்திரத்தை அமைக்க இரு முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். முதலாவதாக அது கிழக்குக் கடற்கரை ஓரமாக இருக்க வேண்டும். இரண்டாவதாக அது கூடியவரை பூமியின் நடுக்கோட்டுக்கு அருகே இருக்க வேண்டும். குலசேகரப்பட்டினம் இந்த இரு தகுதிகளையும் பூர்த்தி செய்கிறது. அது கடலோரமாக அமைந்துள்ளது. அது 8 டிகிரி வடக்கு அட்சரேகையில் அதாவது பூமியின் நடுக்கோட்டுக்கு அருகே அமைந்துள்ளது.
ஏன் கிழக்குக் கடற்கரை ஓரமாக இருக்க வேண்டும்? பொதுவில் பெரும்பாலான செயற்கைக்கோள்கள் கிழக்கு திசை நோக்கித்தான் செலுத்தப்படுகின்றன. உயரே கிளம்பும் ராக்கெட்டில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு அதன் காரணமாக அது வெடிக்கக்கூடும். ராக்கெட்டின் பகுதிகள் கடலில் விழுவதுதான் நல்லது.
வேறு சில சமயங்களில் ஏதோ கோளாறு காரணமாக ராக்கெட் திசை திரும்பி கரையை நோக்கி அதாவது விண்வெளி கேந்திரத்தை நோக்கிப் பாயலாம். விண்வெளி கேந்திர அதிகாரிகள் ராக்கெட் கடல் பகுதிக்கு மேலாக இருக்கும் போதே அதை நடுவானில் அழிப்பர். இதற்கான பொத்தானை அமுக்குவதற்கென்றே தனி அதிகாரி இருப்பார். உதாரணமாக 2010 ஆம் ஆண்டு டிசமபர் 25 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து உயரே செலுத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் திசை மாறியபோது இவ்விதமாக நடுவானில் அழிக்கப்பட்டது.
விண்வெளி கேந்திரத்தை கூடியவரை பூமியின் நடுக்கோட்டுக்கு அருகே அமைப்பது வழக்கம். இப்படி அமைப்பதால் ஆதாயம் உண்டு. அதாவது பூமி தனது அச்சில் சுழல்வதன் பலனாக ராக்கெட்டுக்கு கூடுதல் வேகம் கிடைக்கும் இது இலவசமாகக் கிடைப்பதாகும்.
பூமியானது பம்பரம் போல மேற்கிலிருந்து கிழக்கு திசை நோக்கி சுழல்கிறது. எனவே பூமிக்கு சுழற்சி வேகம் உண்டு. பூமியின் நடுக்கோட்டுப் பகுதியில் பூமியின் சுற்றளவு 40,075 கிலோ மீட்டர். பூமி தனது அச்சில் ஒரு முறை சுற்றி முடிப்பதற்கு 23.93 மணி நேரம் பிடிக்கிறது. பூமியின் சுற்றளவை 23.93 ஆல் வகுத்தால் பூமியின் நடுக்கோட்டுப் பகுதியில் பூமியின் சுழற்சி வேகம் மணிக்கு 1674 கிலோ மீட்டர்.
ஆனால் பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே செல்லச் செல்ல, இந்த வேகம் குறையும். உதாரணமாக 20 டிகிரி வடக்கு அட்சரேகையில், சுழற்சி வேகம் மணிக்கு 1569 கிலோ மீட்டராகத்தான் இருக்கும். ஆகவே 20 டிகிரி அட்சரேகையில் ஒரு விண்வெளி கேந்திரம் இருந்தால் அங்கிருந்து செலுத்தப்படுகிற ராக்கெட்டுக்கு பூமியின் சுழற்சியால் கிடைக்கிற இலவச வேகம் மேலே சொன்ன அளவுக்குக் குறைவாகத்தான் இருக்கும்.
உலகில் செயற்கைக்கோள்கள்விண்கலங்கள் ஆகியவற்றை செலுத்தும் அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, இந்தியா, சீனா முதலான நாடுகளை எடுத்துக் கொண்டால் ரஷியாவின் விண்வெளி கேந்திரங்கள் தவிர்க்க முடியாத வகையில் உள் நாட்டில்தான் உள்ளன. சீனாவின் சில விண்வெளி கேந்திரங்கள் உள் நாட்டில் உள்ளன. தவிர அவை பூமியின் நடுக் கோட்டிலிருந்து வடக்கே மிகவும் தள்ளி அமைந்துள்ளன.
ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் விண்வெளி கேந்திரம் பிரெஞ்சு குயானாவில் அட்லாண்டிக் கடலின் கிழக்குக் கரை ஓரமாக பூமியின் நடுக்கோட்டுக்கு மிக அருகில் 5 டிகிரி வடக்கு அட்சரேகையில் அமைந்துள்ளது. அங்கிருந்து ராக்கெட்டை ஏவினால் 1662 கிலோ மீட்டர் வேகம் கூடுதலாகக் கிடைக்கும். அமெரிக்காவின் கேப் கெனவரல் விண்வெளி கேந்திரம் மிகவும் தள்ளி 28 டிகிரி வடக்கு அட்சரேகையில் உள்ளது. அங்கிருந்து செலுத்தப்படும் ராக்கெட்டுகளுக்கு கிடைக்கும் இலவச வேகம் குறைவுதான்.
ஆகவே பூமியின் நடுக்கோட்டுப் பகுதியிலிருந்து ராக்கெட்டைச் செலுத்தினால் கூடுதல் எடை கொண்ட செயற்கைக்கோள்களைச் செலுத்த முடியும் என்பதால் ரஷிய, அமெரிக்க தனியார் நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து பசிபிக் கடலில் மிதக்கும் மேடையிலிருந்து ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை செலுத்தி வருகின்றன.
இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி கேந்திரம் 13 டிகிரி வடக்கு அட்சரேகையில் உள்ளது. அங்கிருந்து செலுத்தப்படும் ராக்கெட்டுக்கு பூமியின் சுழற்சியால் கிடைக்கிற கூடுதல் வேகம் 1625 கிலோ மீட்டர். ஆனால் குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி கேந்திரம் அமைத்து அங்கிருந்து ராக்கெட் செலுத்தினால் கிடைக்கிற கூடுதல் வேகம் மணிக்கு 1651 கிலோ மீட்டர்.
ஆகவே குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி கேந்திரம் அமைத்தால் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து வழக்கமாகச் செலுத்தப்படுகிற அதே ராக்கெட்டில் குறைவான எரிபொருளை நிரப்பினால் போதும். அந்த அளவில் ராக்கெட்டின் முகப்பில் அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை வைத்துச் செலுத்த முடியும்.
குலசேகரப்பட்டினத்தில் மேலும் ஒரு ஆதாயம் உள்ளது. அதாவது ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் மூலம் வடக்கு-தெற்காக செலுத்தப்படுகின்ற துருவ செயற்கைக்கோள்களை நேர் தெற்காக செலுத்த முடிவதில்லை. அப்படிச் செலுத்தினால் அது இலங்கை மீது செல்வதாக இருக்கும். இந்திய விண்வெளித் துறையினர் இதைத் தவிர்க்க விரும்புகின்றனர். ஆகவே ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ராக்கெட் கிளம்பியதும் சிறிது தூரம் கிழக்கு நோக்கிச் சென்று விட்டுப் பிறகு தெற்கு நோக்கிச் செல்கின்றது. இதனால் கூடுதல் எரிபொருள் செலவாகிறது.
குலசேகரப்பட்டினத்திலிருந்து இந்த துருவ செயற்கைக்கோள்களைச் செலுத்தினால் இலங்கை மீது பறக்க வேண்டிய பிரச்சினையே இருக்காது. செயற்கைக்கோள்களை நேர் தெற்காகச் செலுத்த முடியும். இதனால் எரிபொருள் செலவு மிச்சமாகும். இந்தியாவோ பல்வேறு பணிகளுக்காக அடிக்கடி துருவ செயற்கைக்கோள்களைச் செலுத்தி வருகிறது. இந்த வகை செயற்கைக்கோள்களை நிரந்தரமாக குலசேகரப்பட்டினத்திலிருந்து செலுத்தலாம்.
டிவி ஒளிபரப்பு, வானிலை தகவல், ரேடியோ ஒலிபரப்பு என பல்வேறு பணிகளுக்காக பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே சுமார் 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் இந்தியா 13 செயற்கைக்கோள்களைப் பெற்றுள்ளது. இவை அனைத்தும் இந்தியாவைப் பார்த்தபடி உள்ளன. பங்கு மார்க்கெட் வர்த்தகம், தனியார் நிறுவனங்களின் தகவல் தொடர்பு, மணியார்டர் அனுப்புதல் என வேறு பல பணிகளையும் இவை செய்து வருகின்றன. இவை இல்லையேல் நாடே ஸ்தம்பித்து விடும். எடை மிக்க இந்த செயற்கைக்கோள்களை இந்தியா தயாரித்தாலும் அனேகமாக இவை அனைத்தும் ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் கூரூ விண்வெளிக் கேந்திரத்திலிருந்து பிரெஞ்சு ஏரியான் ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்பட்டவை.
இந்த வகை செயற்கைக்கோள்களையும் இந்திய மண்ணிலிருந்தே செலுத்த ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் உருவாக்கப்பட்டு அவை ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்பட்டன. இந்த வகை ராக்கெட் முழு வெற்றி பெற்றதாகச் சொல்ல முடியாது. அடுத்து ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 என்ற அதிக சக்தி மிக்க ராக்கெட் உருவாக்கப்படுகிறது. இதற்கென ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் தளம் உள்ளது.
இந்த வகை ராக்கெட்டுகளையும் குலசேகரப்பட்டினத்திலிருந்தே செலுத்த இயலும். தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் கிழக்கு நோக்கிச் செலுத்தப்படும். இவை பூமியின் நடுக்கோட்டுக்கு நேர் மேலே இருக்க வேண்டியவை. ஸ்ரீஹரிகோட்டா 13 டிகிரி வடக்கு அட்சரேகையில் இருப்பதால் இவை குறிப்பிட்ட கோணத்தில் திரும்பி அதன் பிறகே பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே வந்து சேரும்.
ஆகவே இங்கு புதிய விண்வெளிக் கேந்திரத்தை அமைத்து மேற்படி ராக்கெட்டுகளைச் செலுத்தினால் அவை திரும்ப வேண்டிய கோணம் குறையும். இதன் மூலம் எரிபொருள் செலவு குறையும். ஆகவே அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களைச் செலுத்த முடியும்.
ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகளை செலுத்துவதற்கென்றே ஸ்ரீஹரிகோட்டாவில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டு, குலசேகரப்பட்டினத்திலும் மறுபடி அதே வசதிகளைச் செய்வது வீண் செலவாக இருக்குமே என்று இஸ்ரோ கருதலாம். ஆனால் ஒன்று.
இந்தியா இந்த வகை ராக்கெட்டுகள் மூலம் எடைமிக்க செயற்கைக்கோள்களை செலுத்த ஆரம்பித்தால் பல நாடுகளும் தங்களது தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை உயரே செலுத்த இந்தியா பக்கம் திரும்பலாம்.
ஆகவே குலசேகரப்பட்டினத்தில் எல்லா வகையான ராக்கெட்டுகளையும் செயற்கைக்கோள்களையும் செலுத்தும் வசதிகளை செய்வதற்கு ஆகும் செலவு வீண் போகாது என்பது உறுதி.
*** முக்கிய நடப்பு விவகாரங்கள் (21 டிசம்பர்) ***
.................................................. ......................
1. இந்திய விஞ்ஞானிகள் நீரிழிவு நோய்க்கான இன்சுலின் “பில்” (Pill) யை உருவாக்கியுள்ளனர்.
2. பைலின் புயல்(Cyclone Phailin) தாக்கத்தை திறம்பட கையண்டடற்காக ஒடிசா அரசை ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியுள்ளது.
3. பொலிவியா நாட்டின் முதல் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் Tupak Katari விண்ணில் செலுத்தப்பட்டது.
4. தேர்தல் ஆணையம் “ஆம் ஆத்மி கட்சியை” மாநில கட்சியாக அங்கீகாரம் வழங்கியது.
5. உஷா சங்வான்(Usha Sangwan), எல்ஐசியின் முதல் பெண் நிர்வாக இயக்குனரக நியமிக்கப்பட்டார்.
6. அமைச்சரவை குழு ஆசியான் நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது.
7. நான்காம் தலைமுறை போர் விமானம் LCA தேஜாஸ் இரண்டாம் செயல்பாடு சோதனையில் தேர்ச்சி பெற்றுள்ளது.
8. P.H. பரேக் (P.H. Parekh) உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இஞ்சிப் பால்..!
கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க.
ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?
ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.
அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.
அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?
1. நுரையீரல் சுத்தமாகும்.
2. சளியை ஒழுச்சு கட்டிடும்.
3. வாயுத் தொல்லை என்பதே வராது.
4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.
5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.
6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.
7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.
8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.
9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.
10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.
அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?
3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.
ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்.
மீதிப்பேர் சாப்பிடலாம்.
என்ன நாளையில இருந்து உங்க வீட்டில காப்பிக்கு பதில் இஞ்சிப்பால்தானே?
ஆஸ்துமா இருமலுக்கு இஞ்சி
இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் நேரிடும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர். இஞ்சியைப் பற்றிய ஆராய்ச்சியை இன்னும் 10 ஆண்டுகள் நடத்தலாம் என்று நம்பிக்கை தோன்றும்?தமிழகத்தில் தனிப்பெரும் தெய்வமாம் முருகப்பெருமான் திருப்பெயர் கொண்ட மூலிகையும் நம் நாட்டில் உண்டு. சுற்றி வளைக்காமலே கூறிவிடுகிறேன். நமது தென்னக சோலை வனப் பயிர்களில் ஒன்றாகிய உயர்ந்த இஞ்சிக்கு தான் சுக்கு என்று பெயர். இஞ்சி, கொத்துமல்லி, கறிவேப்பிலை இவை மூன்றும் சமையல் அறையின் இணைபிரியாத நண்பர்கள்.இஞ்சி பொதுக் குணம் இஞ்சிக்கு எரிப்புக் கொண்டாட்டம், எலுமிச்சம்பழத்துக்குப் புளிப்புக் கொண்டாட்டம் என்பது காவடி சிந்து பாடல். சிறப்பாக இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிப்பிக்கும். பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும். மற்றும் உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது.உபயோக முறைகள்இஞ்சியை சாதாரணமாக தமிழ்நாட்டு சமையலில் சேர்த்துக் கொள்வது மிகப் பழங்கால வழக்கத்தில் ஒன்று. இதனால் பித்தம், பித்த வாய்வு, பித்தம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் ஆகார குற்றங்களை உண்டாவதைத் தடுத்து உணவுகளை எளிதில் ஜ”ரணிக்க செய்து விடுகிறது.இஞ்சியின் குணமேதென்றால்இயல்புடன் உரைக்க கேளீர்அஞ்சிடும் கன்னியாவும் அகன்றிடும்பித்ததோடம்நெஞ்சினில் இருமல் கோழைநெகிழ்ந்திடும்கபங்கள் தன்னைமிஞ்சினி வருமேவென்றும் விளம்பிடும்வேதநூலே (ஓலைச் சுவடி)சித்த மருத்துவர்களிடம் ஓர் ரகசியமுண்டு.
எந்த நோய் ஆனாலும் சரி, முதலில் இந்த இஞ்சி ரசம் என்ற குடிநீரை கோரோசனை மாத்திரை, கஸ்தூரி மாத்திரை, பால சஞ்வி மாத்திரை, அன்ன பேதி செந்தூரம் ஆகியவைகளுக்கு நோய் திடமறிந்து அனுபானமாக வைத்து விடுவார்கள். பிணிகளும் விரைவில் மிச்சம் மீத இல்லாமல் உடலைவிட்டு அகன்றுவிடும். ஆனால் இந்த வழக்கம் வர வர மறைந்து போய்விட்டது.இஞ்சியே இல்லை என்றால் நமக்கு சாப்பாடு ருசிக்காது; பசிக்காது. பிரபல சமையல் நிபுணர்களுக்குத்தான் தெரியும் இஞ்சியின் மகிமை! ஊறுகாய் வியாபாரம் மந்தமாகிவிடும். இன்னொரு முக்கிய விஷயம். ஆங்கில மருத்துவர்கள் கூட இதனை சொந்தம் கொண்டாடி வருகின்றனர்! அதாவது இஞ்சி ரசாயன முறைப்படி சாறு பிழிந்து அதை மதுசாரத்துடன் கலந்து ஜிஞ்ஜர் பெரீஸ் என்ற மருந்தை தயாரித்து அதை மிக்சர்களில் கலந்து செரிப்புண்டாக்க கொடுக்கின்றனர்.
இந்த பிளாக் மார்க்கெட்டை!இஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டும் ஒரு அவுன்ஸ், தேன் அரை அவுன்ஸ் ஒன்றாகக் கலந்து கொண்டு ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கமும் வாந்தியும் வரும்போது அரைஅவுன்ஸ் வீதம் கொடுத்துவர நீங்கும். இந்த முறையில் வெள்ளை வெங்காயத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதில் மாதுளம் பழரசம் சேர்த்துக் கொடுத்துவர இருமல், இரைப்பு (ஆஸ்துமா) சாந்தியாகும்.இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோல் சிவிப்போட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போட்டு சுத்தமான தேனும் 150 கிராம் விட்டு நான்கு நாள் கழித்துத் தினம் காலையில் வெறும் வயிற்றில் ஒரிரண்டு துண்டுகள் தொடர்ந்து 1 மண்டலம் சாப்பிட வேண்டும்.
இப்படி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாகி, பித்தம் சாந்தப்பட்டுவிடும். ஆயுள் பெருகும். முகப்பொலிவும் அழகும் உண்டாகும். மனதிடம், நெஞ்சு உரம் பெறும். வேம்பு காயகல்பம் போன்று இதுவும் ஒரு காயகல்பமுறையே!இஞ்சி முறபாமலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்த தயாரிப்பது. இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு நோய் தொல்லை வரும்போது மிக்க பயன் தரும். இஞ்சி முறபா தின்பதற்கும் ருசியாக இருக்கும்.ஆஸ்துமா இருமலுக்குஇஞ்சி 15 கிராம், வெள்ளெருக்கன் பூ 5, மிளகு 10 இவைகளை நசுக்கி இரண்டு குவளை நீர்விட்டுக் காய்ச்சி ஒரு குவளையாக சுண்ட வைத்து வேளை ஒன்றுக்கு அரை குவளையாக குடித்துவர சுவாசகாசம், இரைப்பு, சுவாச இருமலுக்கும், சளி நுரையீரல் அடைத்து வெளியேறாமல் தொல்லை கொடுக்கும்போதும் இந்தக் கஷாயத்தை காலை மாலை நோய் தீரும் வரை கொடுக்கலாம். (இதில் பூ மூன்றும் மிளகு 10 மட்டும்தான்; எடைகணக்கல்ல)இஞ்சி கஷாயம் கால் டம்ளர் 20 கிராம் கற்கண்டு தூள் செய்து சேர்த்து அதனுடன் ஒரு எலுமிச்சம்பழம் ரசம் பிழிந்து அரைக்கால் படி பசும்பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வர பித்த ரோகங்கள், பித்த சம்பந்தப்பட்ட வாயு, பித்த சம்பந்தப்பட்ட கப நோய்கள் யாவும் விலகிப்போகும்.
அத்துடன் டயாபடீஸ் என்ற நீரிழிவு சர்க்கரை மூலம் கழிவதை தடுத்து நிறுத்தி, களைப்பு, அதிக பசி, தாகம், வறட்சி, அடிக்கடி சிறுநீர் போவதும் நிற்கும். எரிகுன்மம் ஆஸ்துமா, இளைப்பு, மயக்கம், இருமல் வாய்வு குடைச்சல், வலிகள் நீங்கும் சந்தேகமில்லை.இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் நேரிடும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர். இஞ்சியைப் பற்றிய ஆராய்ச்சியை இன்னும் 10 ஆண்டுகள் நடத்தலாம் என்று நம்பிக்கை தோன்றும்?
சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை
சுப்ரமணிக்கு மிஞ்சிய தெய்வமில்லை
என்பது பழமொழி அல்லவா?
நமது வாழ்க்கையில் மஞ்சளுக்கு அடுத்தபடியாக ஸ்தானம் வகிக்கக்கூடியது சுக்கு. மஞ்சளைப் போலவே வடிவம் கொண்டது. இஞ்சி, கொத்துமல்லி, கறிவேப்பிலை இவை மூன்றும் சமையல் அறையின் இணைபிரியாத நண்பர்கள்.
இஞ்சி பொதுக் குணம்
இஞ்சிக்கு எரிப்புக் கொண்டாட்டம், எலுமிச்சம்பழத்துக்குப் புளிப்புக் கொண்டாட்டம் என்பது காவடி சிந்து பாடல். சிறப்பாக இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிப்பிக்கும். பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும். மற்றும் உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது.
உபயோக முறைகள்
இஞ்சியை சாதாரணமாக தமிழ்நாட்டு சமையலில் சேர்த்துக் கொள்வது மிகப் பழங்கால வழக்கத்தில் ஒன்று. இதனால் பித்தம், பித்த வாய்வு, பித்தம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் ஆகார குற்றங்களை உண்டாவதைத் தடுத்து உணவுகளை எளிதில் ஜ”ரணிக்க செய்து விடுகிறது.
இஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டும் ஒரு அவுன்ஸ், தேன் அரை அவுன்ஸ் ஒன்றாகக் கலந்து கொண்டு ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கமும் வாந்தியும் வரும்போது அரைஅவுன்ஸ் வீதம் கொடுத்துவர நீங்கும். இந்த முறையில் வெள்ளை வெங்காயத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதில் மாதுளம் பழரசம் சேர்த்துக் கொடுத்துவர இருமல், இரைப்பு (ஆஸ்துமா) சாந்தியாகும்.
இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோல் சிவிப்போட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போட்டு சுத்தமான தேனும் 150 கிராம் விட்டு நான்கு நாள் கழித்துத் தினம் காலையில் வெறும் வயிற்றில் ஒரிரண்டு துண்டுகள் தொடர்ந்து 1 மண்டலம் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாகி, பித்தம் சாந்தப்பட்டுவிடும். ஆயுள் பெருகும். முகப்பொலிவும் அழகும் உண்டாகும். மனதிடம், நெஞ்சு உரம் பெறும். வேம்பு காயகல்பம் போன்று இதுவும் ஒரு காயகல்பமுறையே!
இஞ்சி முறபா
மலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்த தயாரிப்பது. இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு நோய் தொல்லை வரும்போது மிக்க பயன் தரும். இஞ்சி முறபா தின்பதற்கும் ருசியாக இருக்கும்.
ஆஸ்துமா இருமலுக்கு
இஞ்சி 15 கிராம், வெள்ளெருக்கன் பூ 5, மிளகு 10 இவைகளை நசுக்கி இரண்டு குவளை நீர்விட்டுக் காய்ச்சி ஒரு குவளையாக சுண்ட வைத்து வேளை ஒன்றுக்கு அரை குவளையாக குடித்துவர சுவாசகாசம், இரைப்பு, சுவாச இருமலுக்கும், சளி நுரையீரல் அடைத்து வெளியேறாமல் தொல்லை கொடுக்கும்போதும் இந்தக் கஷாயத்தை காலை மாலை நோய் தீரும் வரை கொடுக்கலாம். (இதில் பூ மூன்றும் மிளகு 10 மட்டும்தான்; எடைகணக்கல்ல)
இஞ்சி கஷாயம் கால் டம்ளர் 20 கிராம் கற்கண்டு தூள் செய்து சேர்த்து அதனுடன் ஒரு எலுமிச்சம்பழம் ரசம் பிழிந்து அரைக்கால் படி பசும்பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வர பித்த ரோகங்கள், பித்த சம்பந்தப்பட்ட வாயு, பித்த சம்பந்தப்பட்ட கப நோய்கள் யாவும் விலகிப்போகும். அத்துடன் டயாபடீஸ் என்ற நீரிழிவு சர்க்கரை மூலம் கழிவதை தடுத்து நிறுத்தி, களைப்பு, அதிக பசி, தாகம், வறட்சி, அடிக்கடி சிறுநீர் போவதும் நிற்கும். எரிகுன்மம் ஆஸ்துமா, இளைப்பு, மயக்கம், இருமல் வாய்வு குடைச்சல், வலிகள் நீங்கும் சந்தேகமில்லை.
100 கிராம் எள்ளில் 1450 மிகி சுண்ணாம்பு உள்ளது. உடலுக்குத் தேவையான சுண்ணாம்பு அளிப்பதோடு மட்டுமல்லாமல் எள்ளில் மங்கானிஸ், தாமிரம் (copper) , மெக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்வரம் (Phosporus), வைட்டமின் பி1 (தியாமின்), துத்தநாகம் (zinc), வைட்டமின் இ, ஆரோக்கியமான புரதம் மற்றும் நார்ப்பொருளும் அதிகமாக இருக்கின்றன.
முன்னோர்கள் உணவுகளில் அதிகம் பயன்படுத்தி வந்தனர். ஆனால் படிப்படியாக அதன் உபயோகம் இப்பொழுது குறைந்து வருகிறது. அதனைச் சமைக்கும் முறையும் மறந்துபோய்விட்டது. எள்ளில் செசமின் மற்றும் செசமொலின் என்ற இரு சத்துக்கள் இருக்கின்றன. இந்த இரு சத்துக்களும் உயர் இரத்த அழுத்தத்தைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல் ஈரல் சேதத்தையும் தடுக்கின்றன. எள்ளில் உள்ள வைட்டமின் சி இருதயத்தையும் நரம்பு மண்டலத்தையும் வலுப்படுத்துகிறது.
எள்ளிலிருந்து தய¡ரிக்கப்படும் நல்லெண்ணெய் சுருக்கத்தைப் போக்கவும் இன்னும் சில சரும நோய்களுக்கும் உதவுகிறது. உடல் பலவீனமாக உள்ளவர்கள் எள்ளை உட்கொண்டால் உடல் உரம் பெறும்.
முன்னோர்கள் உணவுகளில் அதிகம் பயன்படுத்தி வந்தனர். ஆனால் படிப்படியாக அதன் உபயோகம் இப்பொழுது குறைந்து வருகிறது. அதனைச் சமைக்கும் முறையும் மறந்துபோய்விட்டது. எள்ளில் செசமின் மற்றும் செசமொலின் என்ற இரு சத்துக்கள் இருக்கின்றன. இந்த இரு சத்துக்களும் உயர் இரத்த அழுத்தத்தைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல் ஈரல் சேதத்தையும் தடுக்கின்றன. எள்ளில் உள்ள வைட்டமின் சி இருதயத்தையும் நரம்பு மண்டலத்தையும் வலுப்படுத்துகிறது.
எள்ளிலிருந்து தய¡ரிக்கப்படும் நல்லெண்ணெய் சுருக்கத்தைப் போக்கவும் இன்னும் சில சரும நோய்களுக்கும் உதவுகிறது. உடல் பலவீனமாக உள்ளவர்கள் எள்ளை உட்கொண்டால் உடல் உரம் பெறும்.
தீப்பட்ட இடத்தில் சாற்றைத் தடவ தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.
பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும், இரத்த சோகையை குணப்படுத்தும்.
பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமாணத்தக் கூட்டும்.
பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டு வர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.
பீட்ரூட்டை வேகவைத்த நீரில் வினிகரை கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.
பீட்ரூட் சாறை மூக்கால் உறிஞ்ச தலைவலி, பல்வலி நீங்கும்.
பீட்ரூட் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தீப்பட்ட காயத்தில் பூசிவர புண் ஆறும்.
பீட்ரூட்டைக் கஷாயமாக்கி உடலில் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் கழுவி வர அரிப்பு மாறும்.
பீட்ரூட்டில் 87.7% நீர்ச்சத்தும், 1.7% புரதச்சத்தும், 0.1% கொழுப்புச் சத்தும், 0.8% தாதூப்புக்களும், 0.9% நார்ச்சத்தும், 8.8% மாவுச்சத்தும் அடங்கியுள்ளன. மேலும் சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின் போன்ற உலோக சத்துகளும், வைட்டமின் சி, தயாமின், ரைபோபிளேவின் போன்றவையும் உள்ளன. பீட்ரூட் கீரையில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.
பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும், இரத்த சோகையை குணப்படுத்தும்.
பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமாணத்தக் கூட்டும்.
பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டு வர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.
பீட்ரூட்டை வேகவைத்த நீரில் வினிகரை கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.
பீட்ரூட் சாறை மூக்கால் உறிஞ்ச தலைவலி, பல்வலி நீங்கும்.
பீட்ரூட் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தீப்பட்ட காயத்தில் பூசிவர புண் ஆறும்.
பீட்ரூட்டைக் கஷாயமாக்கி உடலில் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் கழுவி வர அரிப்பு மாறும்.
பீட்ரூட்டில் 87.7% நீர்ச்சத்தும், 1.7% புரதச்சத்தும், 0.1% கொழுப்புச் சத்தும், 0.8% தாதூப்புக்களும், 0.9% நார்ச்சத்தும், 8.8% மாவுச்சத்தும் அடங்கியுள்ளன. மேலும் சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின் போன்ற உலோக சத்துகளும், வைட்டமின் சி, தயாமின், ரைபோபிளேவின் போன்றவையும் உள்ளன. பீட்ரூட் கீரையில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.
Subscribe to:
Posts (Atom)