Recent Articles

Saturday 16 November 2013

மருந்து பாட்டில்கள் ஏன் பிரவுன் நிறத்தில் செய்யப்படுகின்றன?

Saturday 16 November 2013 - 0 Comments


மருந்துகளுக்கும் சூரிய ஒளிக்கும் ஒத்துக்காது. ஹைட்ரஜன் பெராக்ஸைடு சூரிய ஒளி பட்டதும் கெட்டுப் போய் தண்ணீராக மாறிவிடும்.


சில்வர் நைட்ரேட் பற்றி உங்களுக்குத் தெரியும் அதன் மீது வெளிச்சமே படக்கூடாது.


விட்டமீன்கள், ஆண்டிபயாட்டிக் கெமிக்கல்கள் போன்றவை வெளிச்சத்தில் சீக்கிரம் செயலற்றுப் போய்விடுவதால் பொதுவாகவே எல்லா மருந்துகளுக்கும் கெமிக்கல்களுக்கும் பிரவுன் நிற பாட்டில்களையே பயன் படுத்துகிறார்கள். 

கண்ணீர் புகை எப்படி கண்ணீர் வரவழைக்கிறது?



கண்ணீர்ப் புகையின் கெமிக்கல் பெயர் குளோரோ செப்டோ ஃபீனோன். இந்த கெமிக்கல் ஈரம் பட்டதும் மெல்லிய அமிலமாகிறது. 

மென்மையான தொண்டை, நுரையீரல் போன்ற இடங்களில் படும்போது கண்ணீர் வருகின்றது.


தும்மல், இருமல், கண்ணெரிச்சல் முதலிய ஒன்றன் பின் ஒன்றாக வந்து தொந்தரவு ஏற்படும். 


இது எவ்வளவு பாதுகாப்பாக இருப்பினும், கண்ணீர் புகையை தாக்குப்பிடிக்க முடியாது.


மக்கள் கூட்டத்தைக் கலைக்க போலீசார் கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்துகிறார்கள்.


கண்ணீர்ப்புகை திரவ ரூபத்தில் கேனிஸ்டர்களில் நிரப்பி கூட்டத்தில் வீசுவார்கள்.


கிரனேட் லாஞ்ச்சர் என்ற துப்பாக்கியின் மூலம் வீசுவார்கள். கையால் வீசினால் அது கிட்டேயே விழுந்து அவர்களையே தாக்கும் என்பதால் வீசும் கருவியைப் பயன்படுத்துகிறார்கள். 

இந்திய விலங்கியல் வல்லுநர்கள் யார் என்று தெரியுமா?

எண்ணற்ற அறிவியல் அறிஞர்கள் விலங்குகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு உலகளாவிய புகழைப் பெற்றுள்ளனர். அவர்களில் சிலரும், அவர்கள் சாதித்த துறைகளையும் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா....படித்து தெரிந்து கொள்ளுங்கள்..

சலீம் அலி - பறவையியல் துறை


ஜி.சி பட்டாச்சார்யா - பூச்சியில் துறை


எம்.எஸ். மணி - பூச்சியியல் துறை


ஏ.சவுத்ரி - பாலூட்டியில் துறை


பி.பிஸ்வாஸ் - பறவையியல் துறை


சி.ஆர். நாராயணராவ் - ஊர்வனவியல் துறை


அசோக் கேப்டன் - ஊர்வனவியல் துறை


பி.ஜே. சவுத்ரி - சுரப்பியியல் துறை


எஸ்.ஜெய்ராஜ்புரி - புழுவியல் துறை


ஆர்.இ.விட்டேகர் - ஊர்வனவியல் துறை

அறிவுத் துளிகள்.......


மாணவர்களே உங்கள் அறிவுத் திறனை பெருக்கி கொள்ள உங்களுக்கான பொது அறிவு தகவல்கள்.

1. உடல் வெப்பநிலையைப் பராமரிக்க தேவைப்படும் ஊட்டச்சத்து எது?

2. உலோகமில்லாத கனிமங்களில் மூன்று?

3. மனித உடல் உறுப்புகளில் ரத்தம் பாயாத இடங்கள் யாவை?

4. மின்பகுளிகள் என்று எவற்றைக் கூறுவர்?

5. மின்சார டைனமோவைக் கண்டு பிடித்தவர் யார்?

6. வீட்டுக் கழிவுகள் எத்தனை வகைப்படும்?

7. புல் இயல் (Agrostology) என்பது என்ன?

8. புலனுறுப்புக்களிலிருந்து செய்திகளை மூளைக்கு தெரிவிக்கும் நரம்புகள் எவை?

9. வாயு மூலக்கூறுகள் ஓய்வு நிலையை அடையும் வெப்பநிலை என்பது என்ன?

10. பரம்பரைத் தன்மைக்குக் காரணமாக இருப்பவை எவை?

விடைகள்

1. கொழுப்பு 2. மைக்கா, ஜிப்சம், சுண்ணாம்புக்கல் 3. நகங்கள், மேல்தோல், ரோமங்கள் 4. அயனிச் சேர்மங்கள் 5. ஹிப்போலைட் பிக்ஸி 6. இரண்டு (கரிமக் கழிவுகள், கனிமக் கழிவுகள்) 7. புல், தாவரங்கள் பற்றிய அறிவியல் 8. உணர்ச்சி நரம்புகள் 9. தனிவெப்பநிலை 10. குரோமோசோம்கள்

பயனுள்ள பொது அறிவு தகவல்கள்!


மாணவர்களே உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள்...

* முதன் முதலாக தொழில்புரட்சி நடைபெற்ற நாடு - இங்கிலாந்து

* குளோரினிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து பொருள் - குளோரோஃபார்ம்

* மனிதனுடைய உடல் உறுப்புகளில் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருப்பது - மூளையில் உள்ள செல்கள்

* எச்.பி.ஜே. பைப்லைன் திட்டமானது எதை கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது - இயற்கை வாயு

* இத்தாலி நாட்டின் தேசிய மலர் - லில்லி

* மின் விளக்கை கண்டுபிடித்தவர் - ஹம்ப்ளி டேவி

* ஒரு மணி நேரத்தில் 74 கி.மீ வேகத்தில் ஓடுவது - நெருப்பு கோழி

* ஏறும்புகள் உள்ள வகைகள் - 14,000 (அவைகள் ஒரு போதும் உறங்குவதில்லை)

* நயாகரா நீர்வீழ்ச்சியை கண்டுபிடித்தவர் - லூயிஸ் ஹெனபின்

* ஆசியாவில் முதன் முதலாக தொழில் மயமான நாடு எது - ஜப்பான்

* சூரிய குடும்பத்தில் அதிக வெப்பமான கிரகம் - புதன்

* சுறா மீனின் வாழ் நாள் - 20 முதுல் 30 ஆண்டுகள்

* கொசுக்களில் 3500 வகை உள்ளது

Subscribe

புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

© 2013 கல்லாப்பெட்டி. All rights reserved.