Recent Articles

Sunday 27 October 2013

காங்கிரஸ் கட்சி சாராத முதல் இந்தியப்பிரதமர் மொரார்ஜி தேசாய்!

Sunday 27 October 2013 - 0 Comments




மொரார்ஜி ரன்சோதிஜி தேசாய் (பிறப்பு 29 பிப்ரவரி 1896) இந்திய விடுதலைப்போராட்ட வீரரும், இந்திய பிரதமரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார். 

இவரே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சாராத முதல் இந்தியப்பிரதமர் ஆவார். இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவையும் பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர் இவரே. 

மொரார்ஜி தேசாய் பம்பாய் மாகாணத்தை சேர்ந்த படெலி என்னும் ஊரில் பிறந்தார். இது தற்போது குஜராத்தில் உள்ளது. மும்பையை சேர்ந்த வில்சன் கல்லூரியில் படிப்பை முடிந்தவுடன் குஜராத்தில் குடிமுறை அரசுப்பணியில் (civil service) இணைந்தார். பின்பு அப்பணியை விட்டு விலகி ஆங்கில அரசுக்கு எதிராக நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார். விடுதலைப்போராட்ட காலத்தில் பல ஆண்டுகளை சிறையில் கழித்தார். இவர் சிறந்த கொள்கை பிடிப்புள்ளவராகவும் தலைமை பண்பு உள்ளவராகவும் இருந்ததால் விடுதலைப்போராட்ட வீரர்களிடமும் குஜராத் பகுதி காங்கிரஸ் கட்சியினர் இடையேயும் செல்வாக்கு பெற்ற தலைவராக விளங்கினார். 1934 மற்றும் 1937 ல் நடந்த பாம்பே மாகாண தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டு வருவாய் துறை அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

இவருக்கு முன்பு பிரதமராக இருந்தவர் :  இந்திரா காந்தி
இவருக்கு பின்பு பிரதமராக இருந்தவர் : சரண் சிங்
அரசியல் கட்சி : ஜனதா கட்சி
இறப்பு : 10 ஏப்ரல் 1995



தமிழக முதலமைச்சர்கள் பட்டியல்!

1920 முதல் தமிழக முதலமைச்சர்கள்

1. திரு.A. சுப்பராயலு – 17-12-1920 to 11-07-1921

2. திரு. பனகல் ராஜா – 11-07-1921 to 03-12-1926

3. டாக்டர். P. சுப்பராயன் – 04-12-1926 to 27-10-1930

4. திரு. P.முனுசாமி நாயுடு – 27-10-1930 to 04-11-1932 

5. திரு.ராமகிருஷ்ண ரங்கா ராவ் – 05-11-1932 to 04-04-1936

6. திரு. P . T . ராஜன் – 04-04-1936 to 24-08-1936

7. திரு.ராமகிருஷ்ண ரங்கா ராவ் – 24-08-1936 to 01-04-1937

8. திரு குர்ம வேங்கட ரெட்டி நாயுடு – 01-04-1937 to 14-07-1937

9. திரு.ராமகிருஷ்ண ரங்கா ராவ் – 14-07-1937 to 29-10-1939

10. திரு தன்குதுரி பிரகாசம் – 30-04-1946 to 23-03-1947

11. திரு O P ராமசாமி ரெட்டியார் – 23-03-1947 to 06-04-1949

12. திரு P S குமாரசுவாமி ராஜா – 06-04-1949 to 09-04-1952

13. திரு C ராஜகோபாலாச்சாரி – 10-04-1952 to 13-04-1954

14. திரு K காமராஜ் – 13-04-1954 to 02-10-1963

15. திரு M பக்தவத்சலம் – 02-10-1963 to 06-03-1967

16. டாக்டர். C.N. அண்ணாது ரை – 06-03-1967 to 03-02-1969

17. டாக்டர். கலைஞர் M கருணாநிதி – 10-02-1969 to 04-01-1971, 15-03-1971 to 31-01-1976

18.டாக்டர். M G ராமசந்திரன் – 30-06-1977 to 17-02-1980, 09-06-1980 to 15-11-1984, 10-02-1985 to 24-12-1987

19. திருமதி ஜானகி ராமசந்திரன் – 07-01-1988 to 30-01-1988

20. டாக்டர். கலைஞர் M கருணாநிதி – 27-01-1989 to 30-01-1991

21. டாக்டர்.செல்வி J ஜெயலலிதா – 24-06-1991 to 12-05-1996

22. டாக்டர். கலைஞர் M கருணாநிதி – 13-05-1996 to 13-05-2001

23. டாக்டர்.செல்வி J ஜெயலலிதா – 14-05-2001 to 21-09-2001

24. திரு O. பன்னீர்செல்வம் – 21-09-2001 to 01-03-2002

25. டாக்டர்.செல்வி J ஜெயலலிதா – 02-03-2002 to 12-05-2006

26. டாக்டர். கலைஞர் M கருணாநிதி – 13-05-2006 to 15-05-2011

27. டாக்டர்.செல்வி J ஜெயலலிதா 16-05-2011 முதல்


-----------------------------------------------------------------------------
அதிக முறை (5) பொறுப்பேற்ற முதல்வர் மு. கருணாநிதி.

மிக நீண்ட காலம் (தொடர்ந்து) பொறுப்பிலிருந்த முதல்வர் எம். ஜி. இராமச்சந்திரன் ஆவார். ஆண்ட காலம் 10 வருடம், 5 மாதம் 25 நாட்கள்

மிகக்குறுகிய காலம் (24 நாட்கள்), பொறுப்பிலிருந்தவர் ஜானகி இராமச்சந்திரன்


-----------------------------------------------------------------------------

இதுவரை பதவி வகித்த இந்திய ஜனாதிபதிகள்!

 



1. திரு. ராஜேந்திர பிரசாத் - 26.1.1950 முதல் 13.5.1962 வரை

2. திரு. S. ராதா கிருஷ்ணன் - 13.5.1962 முதல் 13.5.1967 வரை

3. திரு. ஜாகிர் உசேன் - 13.5.1967 முதல் 3.5.1969 வரை

திரு. V. V. கிரி - 3.5.1969 முதல் 20.7.1969 வரை (தற்காலிகம்)

திரு. முகம்மது இதாயதுல்லா - 20.7.1969 முதல் 24.8.1969 வரை (தற்காலிகம்)

4. திரு. V. V.கிரி - 24.8.1969 முதல் 24.8.1974 வரை

5. திரு. பக்ருதீன் அலி அகமது - 24.8.1974 முதல் 11.2.1977 வரை

திரு. B. D. ஜாட்டி - 11.2.1977 முதல் 25.7.7197 வரை (தற்காலிகம்)

6. திரு. நீலம் சஞ்ஞீவி ரெட்டி - 25.7.1977 முதல் 25.7.1982 வரை
7. திரு. கியானி ஜெயில் சிங் - 25.7.1982 முதல் 25.7.1987 வரை

8. திரு. R. வெங்கடராமன் - 25.7.1987 முதல் 25.7.1992 வரை

9. திரு. சங்கர் தயால் சர்மா - 25.7.1992 முதல் 25.7.1997 வரை

10. திரு. K. R. நாராயணன் - 25.7.1997 முதல் 25.7.2002 வரை

11. திரு. A. P. J. அப்துல் கலாம் - 25.7.2002 முதல் 25.7.2007 வரை

12. திருமதி. பிரதிபா பாட்டில் - 25.7.2007 முதல் 25.7.2012 வரை

13. திரு. பிரணாப் முகர்ஜி - 25.7.2012 முதல்

இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர்

1) டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் (Rajendra Prasad) 1950-1962
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். காங்கிரஸ் கட்சித் தலைவர்களுள் ஒருவர். 1950 முதல் 1962 வரை இந்திய குடியரசுத் தலைவராக இருந்தார்.


டாக்டர் . ராஜேந்திரபிரசாத் முதல் ஜனாதிபதி மற்றும் 2 முறை இந்த பதவியை
வகித்தவர் என்ற பெருமையையும் பெறுகிறார். 

2) டாக்டர் ராதாகிருஷ்ணன் - 1962-1967

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (செப்டம்பர் 5, 1888 - ஏப்ரல் 17, 1975) சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார்.
திருத்தணியில் பிறந்த ராதாகிருஷ்ணன், தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டவர். இவர், தன் இளமைக்காலத்தை திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். இவர் ஆசிரியராக பணியாற்றியதால் இவர் பிறந்த தினமான செப்டம்பர் 5, இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. 1954ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.


3) டாக்டர் ஜாகிர் ஹுசேன் - 1967-1969

சாகீர் உசேன் (ஜாகீர் உசேன்) இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1967இல் இருந்து 1969 இல் அவர் இறக்கும் வரை அப்பதவியை வகித்தார். 1962-1967 காலத்தில் இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார்.

உலகில் உள்ள நாடோடி இனமக்கள்!






Sessions of Indian Science Congress தேசிய அறிவியல் மாநாடுகள் நடைபெற்ற இடங்கள்

 91st     2004     Chandigarh
    
92nd     2005     Ahmedabad 
   
93rd     2006     Hyderabad
   
94th     2007     Annamalainagar
    
95th     2008     Visakhapatnam
    
96th     2009     Shillong     

97th     2010     Thiruvananthapuram.

98th     2011     Chennai     

99th     2012     Bhubaneshwar  
  
100th   2013     Kolkata 

தமிழறிஞர்களுக்கு விருதுகள் (2013)

திருவள்ளூவர் விருது - டாக்டர் முருகேசன் ( சேயான்) ,

பெரியார் விருது - கோ. சமரசம்,

அண்ணா விருது - கே.ஆர்.பி., மணிமொழியன்,

காமராசர் விருது- சிங்காரவேலு,

மகாகவி பாரதியார் விருது- ராமமூர்த்தி,

பாவேந்தர் பாரதிதாசன் விருது - சோ. நா. கந்தசாமி,

திரு.வி.க., விருது - முனைவர் பிரேமா நந்தகுமார்,

கி.ஆ.பெ.விஸ்வநாதன் விருது - முனைவர் ராசகோபாலன்,

அம்பேத்கர் விருது - தா.பாண்டியன்

உலகில் உள்ள பாலைவனங்களும் அவை அமைந்துள்ள நாடுகளும்!



1. சஹாரா - வட ஆப்பிரிக்கா

2. அரேபியன் - மத்திய கிழக்கு

3. கோபி - சீனா
4. படகோனியன் - அர்ஜென்டினா

5. கிரேட் விக்டோரியா - ஆஸ்திரேலியா

6. கலாஹாரி - தென் ஆப்பிரிக்கா

7. கிரேட் பாசின் - அமெரிக்கா

8. தார் - இந்தியா, பாகிஸ்தான்

9. கிரேட் சாண்டி - ஆஸ்திரேலியா

10. காரா-கும் - மேற்கு ஆசியா

11. கொலராடோ - மேற்கு அமெரிக்கா

12. இப்சன் - ஆஸ்திரேலியா

13. சொனோரன் - அமெரிக்கா

14. இசில்-கும் -மேற்கு ஆசியா

15. தாக்ளா மக்கான் - சீனா

16. ஈரானியன் - ஈரான்

17. சிம்ப்சன் / ஸ்போனி - வட ஆப்பிரிக்கா

18. மோஹேவ் - அமெரிக்கா

19. அட்டகமா - சிலி

20. நமீப் - ஆப்பிரிக்கா

இந்திய தேசிய சின்னங்கள்!




தேசிய பறவை  -  மயில்


தேசிய நீர் வாழ் விலங்கு - டால்பின்
தேசிய மலர்  -  தாமரை
தேசிய விளையாட்டு  - ஹாக்கி
தேசிய மொழி - இந்தி
தேசிய கொடி - மூவர்ணக் கொடி
தேசியக் கொடியில் காவி நிறம் தியாகத்தை உணர்த்திகிறது.
பச்சை நிறம் செழுமையை உணர்த்துகிறது,
வெண்மை நிறம் தூய்மையை உணர்த்துகிறது.
தேசியக் கொடியின் நடுவில் உள்ள அசோக சக்கரம் தர்மத்தை உணர்த்துகிறது.
தேசியக் கொடியில் அசோக சக்கரத்தில் உள்ள ஆரங்கள் 24
தேசியக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் ஜீலை 22, 1947
மூவர்ணக் கொடியை இந்திய தேசிய காங்கிரஸ் முதன் முதலாக ஏற்றுக் கொண்ட  வருடம் 1931
தேசிய விலங்கு   -புலி
தேசிய சின்னம்  - உத்திரபிரதேசத்தில் உள்ள அசோகரின் சாரநாத் ஸ்தூபி.
சாரநாத் ஸ்தூபியில் உள்ள நான்கு மிருகங்கள் சிங்கம், யானை, குதிரை, காளை.
தேசியகீதம்  - ஜனகனமண

தேசிய கீதத்தை எழுதியவர் - ரவீந்திரநாத் தாகூர்.
தேசிய கீதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் - 24.1.1950.
முதன்முதலில் பாடப்பட்டது - 1911 டிசம்பர் 27ல் கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில்
தேசிய கீதம் இசைக்க ஆகும் நேரம் - 52 விநாடிகள்.
தேசியப் பாடல் - வந்தே மாதரம்.
தேசியப் பாடலை இயற்றியவர் - பக்கிம் சந்திர சட்டர்ஜி
முதன்முதலில் பாடப்பட்டது - 1896ல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில்
தேசிய நாட்காட்டி - சகா வருடத்தை அடிப்படையாகக் கொண்டது.
சக வருட நாட்காட்டி அங்கீகரிக்கப்பட்டது - 1957 அண்டு மார்ச் 22
தேசிய நாட்காட்டியின் முதல் மாதம் சித்திரை.
தேசிய மரம்-ஆலமரம்.
தேசிய நதி - கங்கை / கங்கா
தேசிய பாரம்பரிய விலங்கு - யானை
தேசிய நாணயத்தின் அடையாளம்

இந்திய வரலாறு | நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்

கௌடில்யர் - அர்த்த சாஸ்திரம்

விசாகதத்தர் - முத்ரா ராட்சஸம் - மௌரியர் கால வரலாறு

பதஞ்சலி முனிவர் - மகா பாஷீயம் - (சுங்கர் வரலாறு)


காளிதாசர் - சாகுந்தலம்,  மேகதூதம்,  மாளவிகாக்னிமித்ரம்,  குமார சம்பவம், விக்ரம ஊர்வசியம்- (குப்தர் கால வரலாறு)

பானப்பட்டர் - ஹர்ஷ சரிதம்.

கல்ஹணார் - இராஜ தரங்கிணி - (காஷ்மீர் வரலாறு)

பிரத்விராஜ விஜயா - சந்த் பர்தோலி - (சௌகான் வரலாறு)

மதுரா விஜயா - கங்கா தேவி

அமுக்த மால்யாதா - கிருஷ்ண தேவராயர்

பாண்டுரங்க மகாமாத்யா - தெனாலிராமன் - (விஜய நகரப் பேரரசு வரலாறு)

பாரவி - இராதார்ச்சுனியம்

சூத்திரகர் - மிருச்சகடிகம்

ஆரிய பட்டர் - சூரிய கித்தாந்தம்

வராகமிகிரர் - மிருகத்சம்கிதை

வாகபட்டர் - அஷ்டாங்க ஹிகுதயா

அமரசிம்மர் - அமரகோசம்

பாரவி - கிராதார்ஜீனியம்

தண்டின் - காவிய தரிசனம், தசகுமார சரிதம்

மகேந்திரவர்மர் - மத்தவிலாசபிரகடனம்

வியாசர் - மகாபாரதம்

திருத்தக்க தேவர் - சீவகசிந்தாமணி

வால்மீகி - இராமாயணம்

புகழேந்தி - நளவெண்பா

சேக்கிழார் - பெரிய புராணம்

செயங்கொண்டார் - கலிங்கத்துப் பரணி

ஒட்டக்கூத்தர் - சோழ உலா, பிள்ளைத் தமிழ்

அக்பர்நானா, அயனி அக்பரி - அபுல்பசல்

பிரியதர்சிகா, இரத்னாவளி - ஹர்சர்

ஆமுக்தமால்யா - கிருஷ்ணதேவராயர்

காமசூத்திரம் - வாத்சாயனார்

இரகுவம்சம், மேகதூதம் - காளிதாசர்

பஞ்சதந்திரம் - விஷ்ணுசர்மா

இராஜதரங்கனி - கல்ஹாணர்

ஷாநாமா - பிர்தௌசி

கீதகோவிந்தம் - ஜெயதேவர்

யுவான்சுவாங் - சியூக்கி

நூல் ஆசிரியர்

துசக்-இ-பாபரி -பாபர்

தாரிக்-தி-ரஷீத் -மிர்சா

ஹூமாயூன்நாமா -குல்பதான் பேகம்

தஸ்கிராட்உல் வாகியாட் -ஜௌஹார்

காரிக்-இ-ஷெர்ஷாஹி -அப்பாஸ்கான்

தாரிக்-ன்-ஷாஹி -அகமது யாத்கர்

அக்பர் நாமா -அபுல் பாசல்

அயினி அக்பரி -அபுல் பாசல்

தாரிக்-இ-அக்பர்ஷாஹி- முகமது ஆரிப்

தாரிக்-இ-ஜஹாங்கிரி -ஜஹாங்கீர்

இக்பால் நாமா -முகபத்கான்

பாதுஷா நாமா -அப்துல் அமீது

ஆலம்கீர் நாமா -மிர்சா முகமது காசிம்

முண்டகப் உல் ஓபாப் -காபீகான்

வரலாற்று நினைவுச் சின்னங்கள் | கட்டிடக்கலை!

பாடலிபுத்திரக் கோட்டை - மௌரிய வரலாறு

அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்கள் - குப்தர் கால வரலாறு

மாமல்லபுர சிற்பங்கள் - பல்லவர் வரலாறு

பேலூர் ஹளபீடு - ஹொய்சாளர், சாளுக்கியர் வரலாறு

குதுப்மினார், டெல்லி நரோக்கள் - டெல்லி சுல்தானியர் வரலாறு

ஆக்ரா, செங்கோட்டை, முத்து மசூதி, தாஜ்மகால் - முகலாய வரலாறு


 கட்டிடக்கலை :

1. குடைவரை கோயில்கள் (மகேந்திரப்பாணி)

எ.கா.: மாமல்லபுரம், மும்மூர்த்தி குகை, மகேந்திரவாடி, பல்லவபுரம்

2. ஒற்றைக்கல் கோயில்கள் (மாமல்லப்பாணி)

எ.கா. மகாபலிபுர பஞ்சபாண்டவர் ரதங்கள்

3. கட்டடக் கோயில்கள் (இராஜசிம்மப்பாணி)

எ.கா. மகாபலிபுர கடற்கரைக்கோயில், காஞ்சி கைலாயநாதர் கோயில்

4. மண்டபக் கோயில்கள்

எ.கா. திருவதிகை வீரட்டானேசுவர் கோயில், திருத்தணி கோயில்

5. பிறவகைக் கோயில்
எ.கா. காஞ்சி வைகுந்த பெருமாள் கோயில், கூரம் கேசவப் பெருமாள் கோயில்

காஞ்சி கைலாசநாதர் கோயில் - ராசசிம்மப் பல்லவன்

மாமல்லபுர கோயில் - முதலாம் நரசிம்மவர்மன்

காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயில் - இரண்டாம் நந்திவர்மன்

மதுரை மீனாட்சி அம்மன் - குலசேகர பாண்டியன்

தஞ்சை பிரகதீஷ்வரர் கோயில் - இராஜராஜ சோழன்

ஸ்ரீரங்கம் கோயில் பொன்வேய்ந்தவர் - சுந்தரபாண்டியன்

முற்கால நாணயங்கள் !

 


தினார் - குப்தர் தங்க நாணயங்கள்

கச்சா - இராம குப்தர்

டாங்கா ஜிட்டால் - டெல்லி சுல்தான்கள்

பகோடா - விஜய நகர நாணயம்

டாம் - அக்பர் நாணயம்

இந்திய வரலாறு | கல்வெட்டுகளும், பட்டயங்களும்


அசோகரின் பாறை கல்வெட்டுகள் - மௌரியர் வரலாறு

ஹதிகும்பா கல்வெட்டு - காரவேலர்

ஜீனாகத் கல்வெட்டு - ருத்ரதாமன்

மாண்டசோர் கல்வெட்டு - யகோதர்மன்

அலகாபாத் கல்வெட்டு - சமுத்திர குப்தர்

ஹய்ஹோல் கல்வெட்டு - இரண்டாம் புலிகேசி

உத்திரமேரூர் கல்வெட்டு - பராந்தக சோழன்

பாதபள்ளி செப்பேடு கல்வெட்டு - முதலாம் ஹரிகரன்

ஸ்ரீரங்கம் செப்பேடு கல்வெட்டு - இரண்டாம் தேவராயர்

உத்திரமேரூர் கல்வெட்டு - முதலாம் பராந்தகன்

உத்திரமேரூர் கல்வெட்டு - சோழர் கிராமசபை

ஹய்கோல் கல்வெட்டு - இரண்டாம் புலிகேசி

அலகாபாத் கல்வெட்டு - சமுத்திர குப்தர்

இந்தியாவிற்கு வருகை தந்த அயல் நாட்டவர்கள்!

 



மெகஸ்தனிஸ் - இண்டிகா - (மௌரியர் காலம்)

தாலமி - குறிப்புகள் - (இந்திய நிலவியல்)

பிளினி - குறிப்புகள்- (விலங்குகள், தாவரங்கள்)

பாகியான் - குறிப்புகள் - (குப்தர் காலம்)

யுவான்சுவாங் - சியூக்கி - (ஹர்ஷர், பல்லவர் காலம்)

அல்பரூனி - குறிப்புகள் - (கஜினி முகம்மது)

இபின் பதூதா - குறிப்புகள் - (முகமது பின் துக்ளக் காலம்)

LIST OF PARLIAMENT BY COUNTRY!



Country
legislatures
Afghanistan
Shora
Andorra
General Council
Albania
People's Assembly
Azerbaijan
Melli Majlis
Argentina
National Congress
Australia
Federal Parliament
Austria
National Assembly
Bahrain
Consultative Council
Bangladesh
Jatiya Sansad
Bhutan
Tsogdu
Britain
Parliment (House of Common's and House of Lords)
Bulgaria
Narodno Subranie
Colombia
Congress
Canada
Parliament
China
National People's Assembly
Crotia
Sabor
Czech Republic
Chamber of Deputies and Senate
Denmark
Folketing
Finland
Eduskusta (Parliament)
Germany
Bundestag (Lower House) and Bundesrat (Upper House)
Greece
Chamber of Deputies
Iceland
Althing
India
Sansad(parliament)
Iran
Majlis
Israel
Knesset
Japan
Diet
Korea(North)
Supreme People's Assembly
Korea(South)
National Assembly
Lithuania
Seimas
Maldives
People's Majlis
Mongolia
Great People's Khural
Myanmar
Pyithu Hluttaw
Nepal
Rashtriya Panchayat
Netherlands
The Staten General
Norway
Storting
Oman
Monarchy
Pakistan
National Assembly & Senate
Poland
Sejm
Russia
Federal Assembly
Duma & Federal Council
Spain
Cortes
Sweden
Riksdag
Saudi Arabia
Majlis Al Shura
USA
Congress




ஆண்டு விழாக்களும் அதன் சிறப்புப் பெயர்களும்!

வ.எண்ஆண்டுசிறப்புப்பெயர்
1முதல் ஆண்டுகாகித விழா
2இரண்டாம் ஆண்டுபருத்தி விழா
3மூன்றாம் ஆண்டுதோல் விழா
4நான்காம் ஆண்டுமலர், பழ விழா
5ஐந்தாம் ஆண்டுமர விழா
6ஆறாம் ஆண்டுசர்க்கரை ,கற்கண்டு விழா

7ஏழாம்ஆண்டுகம்பளி, செம்பு விழா
8எட்டாம் ஆண்டுவெண்கல விழா
9ஒன்பதாம் ஆண்டுமண்கலச விழா
10பத்தாம் ஆண்டுதகரம் ,அலுமினியம் விழா
11பதினோறாம் ஆண்டுஇரும்பு விழா
12பனிரெண்டாம் ஆண்டுலினன் விழா
13பதிமூன்றாம் ஆண்டுமின்னல் விழா
14பதினான்காம் ஆண்டுதந்த விழா
15பதினைந்தாம் ஆண்டுபடிக விழா
16இருபதாம் ஆண்டுபீங்கான் விழா
17இருபத்தைந்தாம் ஆண்டுவெள்ளி விழா
18ஐம்பதாம் ஆண்டுபொன் விழா
19அறுபதாம் ஆண்டுவைர விழா
20எழுபத்தைந்தாம் ஆண்டுபவள விழா
21நூறாம் ஆண்டுநூற்றாண்டு விழா

TNPSC GK Question in tamil !

1. காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலையை ஜப்பானியர் எவ்வாறு கூறுவர்?
(A) ஓரிகாமி
(B) சசுகியோ
(C) மசிகுயூ
(D) வசிகுஇ
Answer: (A) ஓரிகாமி

2. பல்லவ மன்னர்களின் சித்திரகார புலி என்ற அடைமொழியை பெற்றவர் யார்?
(A) மகேந்திரவர்மன்
(B) ராஜசிம்மன்
(C) நரசிம்மவர்மன்
(D) நந்திவர்மன்
Answer: (A) மகேந்திரவர்மன்



3. முட்டாள்களின் சங்கம் என குறிப்பிடப்பட்ட சங்கம் எது?
(A) ஐக்கிய நாடுகள் சங்கம்
(B) சர்வதேச சங்கம்
(C) ஐரோப்பிய ஒன்றியம்
(D) ஐக்கிய அரபுநாடுகள் கூட்டமைப்பு
Answer: (B) சர்வதேச சங்கம்

4. பழைய புத்தர் என அழைக்கப்பட்டவர் யார்?
(A) ஆன்சான் சூயி
(B) ஆன்ரூஸ் பெர்னான்டஸ்
(C) சன்யாட்சென்
(D) தவேகார் சூசி
Answer: (D) தவேகார் சூசி

5. முசோலி ஆசிரியராக இருந்த இத்தாலிய சமதர்ம பத்திரிக்கை எது?
(A) இத்தாலி
(B) மெயின்காப்
(C) அவந்தி
(D) மெயின்பார்ட்
Answer: (C) அவந்தி

6. 1911ம் ஆண்டு சீனாவில் புரட்சி ஏற்பட்டு யாருடைய தலைமையில் குடியரசு நாடானது?
(A) ஆன்சான் சூயி
(B) ஆன்ரூஸ் பெர்னான்டஸ்
(C) சன்யாட்சென்
(D) தவேகார் சூசி
Answer: (C) சன்யாட்சென்

7. எந்தத் துறைக்கு தங்கத் தாமரை விருது (Swarna Kamal) வழங்கப்படுகிறது ?
(A) இலக்கியம்
(B) சினிமா
(C) விளையாட்டு
(D) சமூகவியல்
Answer: (B) சினிமா

8. நூறு சதவிகிதம் படித்தவர்கள் உள்ள பகுதி என்று இந்தியாவிலேயே புகழ் பெற்ற முதல் நகரம் எது?
(A) கொச்சி
(B) திருவனந்தபுரம்
(C) கோட்டயம்
(D) கோழிக்கோடு
Answer: (C) கோட்டயம்

9. மக்கள் இலக்கியம் எனப்போற்றப்டுவது?
(A) சிலப்பதிகாரம்
(B) இராமாயணம்
(C) மணிமேகலை
(D) சித்தர்பாடல்கள்
Answer: (D) சித்தர்பாடல்கள்

10. துரோணாச்சாரியா விருது வழங்கப்படுவது
(A) டென்னிஸ் விளையாட்டு வீரருக்கு
(B) கிரிக்கெட் விளையாட்டு வீரருக்கு
(C) விளையாட்டு பயிற்சியாளருக்கு
(D) ஹாக்கி விளையாட்டு வீரருக்கு
Answer: C) விளையாட்டு பயிற்சியாளருக்கு

TNPSC EXAM - ல் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவது எப்படி ?

முதலில் சிலபஸை தெரிந்துக்கொள்ளுங்கள்.
 சிலபஸை தெரியாமல் படிப்பது என்பது சேர வேண்டிய இடம் தெரியாமல் பயணம் செய்வது போன்றதாகும்.
அதனால் முதலில் சிலபஸை முழுமையாக படியுங்கள்.
 டி.என்.பி.எஸ்.சி- யானது இத்தேர்வுக்கான சிலபஸை பொது அறிவு, பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் உள்ளடக்கியதாக வெளியிட் டுள்ளது.

 பொது அறிவு சிலபஸில் இந்திய வரலாறு, இந்திய சுதந்திரப் போராட்டம், இந்திய பண்பாடு, தமிழக வரலாறு மற்றும் பண்பாடு, பொது புவியியல் மற்றும் இந்திய புவியியல், இந்திய அரசியலமைப்பு மற்றும் அரசியல், பொது அறிவியல் (இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்), இந்திய பொருளாதாரம் மற்றும் வணிகம், நடப்புகால நிகழ்வுகள், அறிவுக்கூர்மை, பொது அறிவு (இந்தியா, தமிழ்நாடு), அறவியல் என இவை அனைத்தும் பொது அறிவு பாடத்தில் உள்ளடங்கியிருக்கும்.

இவைகளிலிருந்து நூறு வினாக்கள் கேட்கப்படுகிறது.. 

பொதுத் தமிழில் பொருத்துக, தொடரும் தொடர்பு அறிதல், பிரித்தெழுதுக, பிழைத் திருத்தம் என இருபது பாடப் பிரிவுகளை உள்ளடக்கிய சிலபஸ் ஒன்றை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதில் ஒவ்வொரு பாடத்திலிருந்தும் ஏறக்குறைய ஐந்து வினாக்கள் வீதம் நூறு வினாக்கள் கேட்கப்படும். பொது அறிவு, பொதுத் தமிழ் பாடத்திலிருந்து 300 மதிப் பெண்களுக்கு இவ்வீதமாக வினாக்கள் கேட்கப்படுகிறது.


இந்தப் பாடப்பிரிவுகளை உள்ளடக்கிய நூல்களை மட்டும் வாங்கிப் படியுங்கள். படிக்கும் போது நீங்கள் தேர்வு எழுதபோவது பட்டப் படிப்பு தரத்திற்கானது என்பதை மறந்து விடாதீர்கள். ஏனெனில் தோல்வி அடையும் நிறையபேர் பத்தாம் வகுப்பு தரத்திற்கே படிப்பதால் தேர்வு மையத்தில் வினாத்தாளை கண்டவுடன் குழம்பிவிடு கின்றனர். அதே போல நிறைய பயிற்சி மையங் களிலும் மாணவர்களிடம் பயிற்சிக் கட்ட ணத்தை பெற்றுக்கொண்டு, பத்தாவது தரத்திற்கான பாடக்கையேடுகளை (Study Materials) வழங்குவதும், பயிற்சி தருவதும் தோல்விக்கான அடிப்படை காரணங்கள். அதனால் தேர்வுக்கு தயார் செய்யும் போது பட்டப்படிப்பு தரத்திற்கு படிக்க வேண்டும். தொடர்ந்து படியுங்கள் அதனை நீங்களே மாதிரி தேர்வு எழுதிப் பாருங்கள். கணிதம், பொதுத் தமிழில் வரும் குறிப்புகள் போன்றவை அனைத்தையும் பயிற்சி செய்து பாருங்கள். தொடர்ந்து நீங்கள் செய்யும் பயிற்சிதான் வெற்றிக்கு வழிவகுக்கும்.


இந்த வருடம் TNPSC குரூப் II தேர்வு முந்தைய வருடத்தைவிட மிகவும் கடினமாக இருக்கும். பல லட்சம் பேர் விண்ணப்பிக்கும் போது போட்டித் தேர்வின் தரத்தை மேம் படுத்த TNPSC சமீபக்காலங்களில் கடினமான கேள்விகளை தயாரித்து வருகிறது. சென்ற ஆண்டு குரூப் - II தேர்வில் வழக்கத்திற்கு மாறாக கடினமான கேள்விகள் கேட்கப் பட்டது. அதேபோல் இந்த குரூப் - II தேர்வு நிச்சயம் மிகமிக கடினமாகதான் இருக்கும். இத்தேர்வில் வெற்றிப் பெறுவதற்கு தேவையான 40 வினாக்கள் UPSC தரத்தில் கேட்பார்கள். இவற்றை சரியாக அணுகினால்தான் இத்தேர்வில் வெற்றிப் பெற்று பணியில் சேர முடியும்.


இந்த கடினமான போட்டித் தேர்வில் வெற்றிப் பெறுவதில் பயிற்சி மையங்களின் பணி மகத்தானது. ஆனால் இப்போது உங்கள் முன் இருக்கும் கேள்வி எந்த பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படிப்பது என்பதுதான். அதை கண்டுப்பிடிக்க ஒரு அளவுகோல் உள்ளது. அதன்படி எந்த பயிற்சி மையம்,


பொதுத் தமிழில் 100% மதிப்பெண்களை பெற்றுத்தருகிறதோ,எந்த பயிற்சி மையம் வழங்கும் பாடக்கையெடுகள் (Study Materials) முந்தைய வினாக்களுக்கான சரியான விடை களை உள்ளடக்கியதாக இருக்கிறதோ,


எங்கு தினமும் நடத்தப்படும் பாடங்களில் வகுப்பறையிலேயே 50% பாடங்கள் மனதில் பதிய வைத்து விடுகிறார்களோ, அதுவே தரமான சிறந்த பயிற்சி மையமாகும்.


அந்த பயிற்சி மையத்தில் சேருங்கள். வெற்றி பெறுங்கள். நிறையப் பயிற்சி மையங்களில் முறையாகவும் முழுமையாகவும் கற்று தருவ தில்லை. ஆனால் போலியாக நாளிதழ்களில் தங்கள் பயிற்சி மையத்திலிருந்து இவ்வளவு பேர் வெற்றிப் பெற்றார்கள் என ஆதாரமில்லாத விளம்பரத்தை கொடுத்து வருகிறார்கள். எடுத்துக்காட்டாக சில பயிற்சி நிறுவனங்கள் சென்ற வருடத்தில் குரூப் II -வில் 30 பேர் வெற்றிப் பெற்றார்கள் என விளம்பரம் செய்கின்றார்கள் எனில் உண்மையில் அந்த வருடத்தில் அவர்களால் பயிற்சி அளிக்கப் பட்டவர்கள் 300 பேர். ஆக 10% சதவிகிதம் மட்டுமே தேர்ச்சி பெறவைக்கும் எந்த ஒரு பயிற்சி நிறுவனமும் எப்படி ஒரு சிறந்த பயிற்சி நிறுவனமாக இருக்க முடியும். ஒரு சிறந்த பயிற்சி நிறுவனம் என்பது 70% சதவிகித மாணவர்களையாவது வெற்றிப்பெற வைக்க வேண்டும். அதனால் சரியான சிறந்த பயிற்சி நிறுவனங்களில் சேருங்கள். வார இறுதியில் (சனி, ஞாயிறு) மட்டும் பயிற்சி தரும் மையங்களில் சேராதீர்கள். நிச்சயம் அத்தகைய பயிற்சி மையங்களால் இத்தேர்விற்கான சிலபஸை உள்ளடக்கிய முழுமையான பயிற்சி வழங்க முடியாது. பணம் போனது போனது தான். அதனால் தினமும் பயிற்சி தரும் மையங்களில் சேர்ந்து படியுங்கள். வெற்றி பெறுங்கள். வாழ்த்துக்கள்.

 

 

 

Subscribe

புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

© 2013 கல்லாப்பெட்டி. All rights reserved.