Wednesday 8 January 2014
விரைவில் வருகிறது புரட்சித் தலைவரின் ஆயிரத்தில் ஒருவன்
Wednesday 8 January 2014 by Unknown
புரட்சித் தலைஹிவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இணைந்து நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் விரைவில் டிஜிட்டல் வடிவத்தில் மீண்டும்
வெளியாகவுள்ளது.
நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் நடித்த “கர்ணன்” திரைப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, புதிய திரைப்படங்களுக்கு சவாலாக இருந்ததுடன், வசூலையும் வாரிக்குவித்தது நினைவிருக்கலாம். இந்தப் புதிய ஐடியாவை அன்றைய மெஹாஹிட் படங்களை டிஜிட்டலுக்கு மாற்றுவதன் மூலம் தொடரலாம் என்று தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருப்பார்கள் போலும். அதனால் மக்கள் திலகத்தின் படம் விரைவில் வெளிவரவிருக்கிறது.
கடந்த 1965 ஆம் ஆண்டு பத்மினி பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, நம்பியார், நாகேஷ் மற்றும் பலர் நடித்து வெளியாகி வெள்ளிவிழா கண்ட திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். பி.ஆர்.பந்துலு இயக்கியிருந்த இப்படத்திற்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். இப்படத்தினை மீண்டும் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றி விரைவில் வெளியிடப்போகிறது திவ்யா பிலிம்ஸ் நிறுவனம்.
இப்படத்தின் ட்ரெய்லர் வருகிற ஜனவரி 10ல் வெளியாகவிருக்கும் வீரம் திரைப்படத்துடன் இணைந்து வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. விரைவில் அஜித் மற்றும் விஜய்க்குப் போட்டியாக எம்.ஜி.ஆரும் கலமிறங்கவுள்ளார்.
About : கல்லாப்பெட்டி
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “விரைவில் வருகிறது புரட்சித் தலைவரின் ஆயிரத்தில் ஒருவன்”
Post a Comment