Saturday 1 February 2014

உதயநிதி தயாரிப்பில் சிவகார்த்திகேயன்..!



இந்த வருடத்தின் அதிர்ஷ்ட இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன். அவரின் அதிர்ஷ்டம் 2013 லேயே ஆரம்பித்துவிட்டது.

ஒரு கல் ஒரு கண்ணாடி வெற்றிக்குப் பிறகு ஒரு வருடம் இடைவெளிவிட்ட உதயநிதி தேர்வு செய்தது சுந்தரபாண்டியனை இயக்கி பிரபாகரனை. முதல் படம் வெளிவந்த உடனேயே ரெட் ஜெயண்ட் மாதிரியான நிறுனத்தில் இரண்டாவது படத்துக்கு அட்வான்ஸ் வாங்கிக் கொள்வது அபூர்வ நிகழ்வு.

பிப்ரவரி 14 இது கதிர்வேலன் காதல் ரிலீஸ். படம் எப்படி… தேறுமா இல்லையா என்பதெல்லாம் தெரியும் முன் அடுத்தப் படத்துக்கும் பிரபாகரனையே கமிட் செய்திருக்கிறார் உதயநிதி. இந்தமுறை அவர் நடிக்கவில்லை. பதிலாக தயாரிப்பு மட்டும். நடிப்பது சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயனை வைத்து படம் தயாரிக்க உதயநிதி விரும்பியதும், சிவகார்த்திகேயன் கண்டமேனிக்கு சம்பளம் கேட்டதால் அந்த திட்டம் கைவிடப்பட்டதாகவும் சில மாதங்கள் முன் பரபரப்பாகப் பேசப்பட்டதை இப்போது நினைவுகூரவும். கருத்து வேறுபாடு தீர்ந்ததால் ரெட் ஜெயண்டில் சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இது கதிர்வேலனின் காதலுக்குப் பிறகு இந்த புதிய படம் குறித்து முறைப்படி அறிவிக்க இருக்கிறார்கள்.

Tags:

0 Responses to “உதயநிதி தயாரிப்பில் சிவகார்த்திகேயன்..!”

Post a Comment

Subscribe

புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

© 2013 கல்லாப்பெட்டி. All rights reserved.