Thursday 30 January 2014
சூர்யா அளித்த சர்ப்பிரைஸ் பார்ட்டி..!
Thursday 30 January 2014 by Unknown
இயக்குனர் லிங்குசாமி தயாரித்து இயக்கிவரும் அஞ்சான் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மும்பையில் நடைபெற்றுவருகின்றன. சூர்யா - சமந்தா முதல் முறையாக இணைந்து இப்படத்தில் நடித்துவருகின்றனர். இப்படம் வருகிற ஆகஸ்டு 15 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சான் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரான, பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவனுக்கு இந்த ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக நேற்று சூர்யா, சந்தோஷ் சிவனுக்கு சர்ப்பிரைஸ் பார்ட்டி அளித்துள்ளார்.
அஞ்சான் திரைப்படக்குழுவினர் பெரும்பாலானோர் கலந்து கொண்ட இந்தப் பார்ட்டியில் மேலும் பல நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். அஞ்சான்
திரைப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துவரும் யு.டி.வி.மோசன் பிக்சர்ஸ் நிறுவனத்தைச் சார்ந்த தனஞ்செயன் கோவிந்த், தனுஷ், ஸ்ருதிஹாசன், பிரபுதேவா, ரித்தேஷ் தேஷ்முக், அனிருத், ராகினி ஆகியோரும் இந்தப் பார்ட்டியில் கலந்துகொண்டனர்.
About : கல்லாப்பெட்டி
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “சூர்யா அளித்த சர்ப்பிரைஸ் பார்ட்டி..!”
Post a Comment