Wednesday 29 January 2014
சுதந்திர தினத்தில் வெளியாகிறது அஞ்சான்..!
Wednesday 29 January 2014 by Unknown
சூர்யா - சமந்தா இணைந்து நடித்துவரும் அஞ்சான் திரைப்படம் வருகிற ஆகஸ்டு 15, சுதந்திர தினத்தன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
யூ.டி.வி.மோசன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இணைந்து தயாரித்துவரும் புதிய திரைப்படம் அஞ்சான். இப்படத்தினை இயக்குனர் லிங்குசாமி இயக்கிவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் மிக வேகமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த நவம்பர் மாதத்தில் தொடங்கிய இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்புகள் ஜனவரி மாதத்தில் நிறைவடைந்தன. மீண்டும் இம்மாத இறுதியில் தொடங்கிய இரண்டாம் கட்டப்படப்பிடிப்புகள் மளமளவென நடைபெற்றுவருகின்றன.
மும்பை, மஹாராஷ்டிரா, கோவா போன்ற பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்றுவருகின்றன. சூர்யா இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துவருகிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துவருகிறார்.
படப்பிடிப்பு நடைபெறும் வேகத்தைப் பார்த்தால் இன்னும் ஓரிரு மாதங்களில் படப்பிடிப்புகள் நிறைவடைந்து, படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வருகிற ஆகஸ்டு 15, சுதந்திர தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
About : கல்லாப்பெட்டி
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “சுதந்திர தினத்தில் வெளியாகிறது அஞ்சான்..!”
Post a Comment