Wednesday 29 January 2014
கோலிசோடா திருடிய கதையா..? – கொதித்து எழும் விஜய்மில்டன்
Wednesday 29 January 2014 by Unknown
ஒரு படம் நன்றாக ஓடுகிறது என்று தெரிந்தவுடன் எங்க இருந்த தான் வராங்களோ தெரியவில்லை. இது என் கதை என் கதை என்று சொல்லி சில குரூப் கோடம்பாக்கத்தில் கும்மி அடிக்க தொடங்கியுள்ளனர்.
இந்த காலத்தில் சினிமாவை வெறும் பணம் சம்பாதிக்கும் ஒரு தொழில் மட்டுமே என்ற நோக்கில் பெரிய பெரிய ஹீரோக்கள் பின்னாடி அலையும் சில பல தயாரிப்பாளர்கள் மத்தியில் விஜய்மில்டன் தனக்கும் தன் உ யிராய் நேசிக்கும் சினிமாக்கும் இந்திய அளவில் ஒரு நல்ல அடையாளத்தை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் இரவு பகலாக பாடுபட்டு எடுத்த கோலி சோடா படத்தை இது என்னுடைய கதை என்று சொல்லி சில விஷமிகள் சொந்தம் கொண்டாட ஆரம்பித்து உள்ளனர்.
அது மட்டும் இல்லாமல் கடந்த சில நாட்களாக பேஸ்புக்கில் இதை பற்றி ஒரு பட்டிமன்றமே நடந்து உள்ளது.
இதை கேள்விப்பட்ட விஜய் மில்டன் தன்னுடைய மறுப்பையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.
இது குறித்து விஜய் மில்டன் கூறுகையில், எதிர்தரப்பு சொல்வது உண்மை என்றால் என்னை பற்றி கோர்ட்டிலோ அல்லது இயக்குனர் சங்கத்திலோ புகார் கூறி இருக்கலாம். அதை விட்டு பொய்யான செய்தியை இணையதளம் முலம் பரப்பி மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள். ஏதுவாக இருந்தாலும் சரி நான் சந்திக்க தயார்,
படம் நன்றாக ஓடுகிறது என்று தெரிந்தவுடன் எங்க இருந்த தான் வரங்களோ தெரியவில்லை.
இந்த கதையோடு நான் கடந்த இரண்டு வருடகாலம் பயணித்து உள்ளேன். பல துயரங்களுக்கு இடையே இந்த படத்தை எடுத்து முடித்து ரிலீஸ் செய்து இருக்கிறேன். நான் ஒன்றை மட்டுமே கூறி கொள்கிறேன் தயவு செய்து விஷமிகள் சொல்லும் விஷயத்தை நம்பாதீர்கள்.
இது என் கதை இது என் அடையாளம்.
About : கல்லாப்பெட்டி
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “கோலிசோடா திருடிய கதையா..? – கொதித்து எழும் விஜய்மில்டன்”
Post a Comment