Tuesday 7 January 2014

வங்கி வாடிக்கையாளராக இருந்தாலும் கூட இனிமேல்..?

ஏடிஎம் பாதுகாப்புக்காக மட்டும் மாதம் ரூ.4,000 கோடி செலவு..!


வங்கி வாடிக்கையாளராக இருந்தாலும் கூட இனிமேல் ஏடிஎம் மிஷினில் ஐந்து முறைகளுக்கு மேல் பண பரிவர்த்தனை மேற்கொண்டால் அவர்களிடம் கட்டணம் வசூலிக்க வங்கிகள் முடிவு செய்துள்ளன. இந்த முறை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்றாலும்  இந்த விவகாரம் ஆர்பிஐ, வங்கிகள் மற்றும் அரசாங்கத்தாரால் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

வங்கிகள் தங்களுக்கு ஏற்படும் நஷ்டங்களை தவிப்பதற்காகவே இந்த நடவடிக்கைகயை மேற்கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்திருக்கின்றன. இவர்களின் இந்த நடைமுறைக்கு ஆர்பிஐ துணைகவர்னர் ''வங்கிகள் வசூலிக்கும் கட்டணம் ஏற்றுக் கொள்ளதக்க வகையில் இருந்தால் வங்கிகளின் பொருளாதார நிலை கருதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும், அத்தகைய கட்டண வசூல் குறித்து ரிசர்வ் வங்கிக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை’’ எனவும் தெரிவித்திருந்தார். இன்று இந்தியன் பேங்க் அஸோஸியேஷனும் வங்கிகளின் முடிவுக்கு ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்துள்ளது.

அது மட்டுமல்லாமல் அவர்களின் அறிக்கையில், ''இந்தியா முழுவதும் ஒரு லட்சம் ஏடிஎம்கள் இருக்கின்றன ஒவ்வொரு ஏடிஎம் பாதுகாப்பிற்காக மட்டும் மாதம் 40,000 ரூபாயை வங்கிகள் செலவு செய்ய வேண்டி இருக்கிறது. இந்த செலவினம் மொத்தம் ரூ. 4,000 கோடியாக உள்ளது. இந்த செலவினங்களை கட்டுப்படுத்தவே வங்கிகள் இந்த நடவடிக்கையில் இறங்கி உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: , , ,

1 Responses to “வங்கி வாடிக்கையாளராக இருந்தாலும் கூட இனிமேல்..?”

ringtones said...
31 January 2014 at 20:43

நம்ம பணத்த எடுக்க நாம் எதுக்கு காசு குடுக்கணும்????????? சிந்திப்போம்


Post a Comment

Subscribe

புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

© 2013 கல்லாப்பெட்டி. All rights reserved.