Saturday 11 January 2014

மீண்டும் இணையும் ‘ஊதா கலரு ரிப்பன்’ ஜோடி..!



திரையுலகை பொறுத்தவரை ஏதாவது ஒரு ஜோடி முதன் முறையாக இணைந்து நடித்து அந்த படம் வெற்றி பெற்றால் சொல்லவே வேண்டாம்.

உடனே அந்த ஜோடிக்கு ராசியான ஜோடி என்று முத்திரை குத்திவிடுவார்கள். அதோடு நில்லாமல் மீண்டும் அந்த ஜோடியை வைத்து படம் எடுக்க இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் கங்கனம் கட்டிகொண்டு வருவார்கள். கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளிவந்து பட்டித் தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பிய படம் ”வருத்தப்படாத வாலிபர் சங்கம்”. இந்தப் படத்தை இயக்குநர் ராஜேஷிடம் அசோஸியேட்டாகப் பணியாற்றிய ”பொன்ராம்” இயக்கியிருந்தார்.

இந்த வெற்றியைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் – ஸ்ரீதிவ்யாவை ஜோடியாக்கி மீண்டும் ஒரு புதிய படத்தை எடுக்க இருக்கிறார்களாம். இந்த படத்தைத் தயாரிக்கப் போகிறவர் சிவகார்த்திகேயனின் அண்ணன் தனுஷ்தான். தனுஷ் ஏற்கனவே சிவகார்த்திகேயனை வைத்து ”எதிர்நீச்சல்” என்ற படத்தை தயாரித்து இருந்தார்.

முதலில் இந்த புதிய படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக தமன்னா, அமலா பால் ஆகியோரில் ஒருவரை நடிக்க வைக்கதான் பேச்சுவார்த்தை நடந்ததாம். ஆனால், சம்பள விஷயத்தில் இருவரும் ஒத்து வராததால் இறுதியில் ஸ்ரீதிவ்யாவையே மீண்டும் ஜோடியாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறதாம். எனவே, சிவகார்த்திகேயன் – ஸ்ரீதிவ்யா ஜோடியின் வெற்றி 2014ஆம் ஆண்டிலும் தொடருமா..? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags: ,

0 Responses to “மீண்டும் இணையும் ‘ஊதா கலரு ரிப்பன்’ ஜோடி..!”

Post a Comment

Subscribe

புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

© 2013 கல்லாப்பெட்டி. All rights reserved.