Recent Articles

Sunday, 27 October 2013

ஆண்டு விழாக்களும் அதன் சிறப்புப் பெயர்களும்!

Sunday, 27 October 2013 - 0 Comments

வ.எண்ஆண்டுசிறப்புப்பெயர்
1முதல் ஆண்டுகாகித விழா
2இரண்டாம் ஆண்டுபருத்தி விழா
3மூன்றாம் ஆண்டுதோல் விழா
4நான்காம் ஆண்டுமலர், பழ விழா
5ஐந்தாம் ஆண்டுமர விழா
6ஆறாம் ஆண்டுசர்க்கரை ,கற்கண்டு விழா

7ஏழாம்ஆண்டுகம்பளி, செம்பு விழா
8எட்டாம் ஆண்டுவெண்கல விழா
9ஒன்பதாம் ஆண்டுமண்கலச விழா
10பத்தாம் ஆண்டுதகரம் ,அலுமினியம் விழா
11பதினோறாம் ஆண்டுஇரும்பு விழா
12பனிரெண்டாம் ஆண்டுலினன் விழா
13பதிமூன்றாம் ஆண்டுமின்னல் விழா
14பதினான்காம் ஆண்டுதந்த விழா
15பதினைந்தாம் ஆண்டுபடிக விழா
16இருபதாம் ஆண்டுபீங்கான் விழா
17இருபத்தைந்தாம் ஆண்டுவெள்ளி விழா
18ஐம்பதாம் ஆண்டுபொன் விழா
19அறுபதாம் ஆண்டுவைர விழா
20எழுபத்தைந்தாம் ஆண்டுபவள விழா
21நூறாம் ஆண்டுநூற்றாண்டு விழா

TNPSC GK Question in tamil !

1. காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலையை ஜப்பானியர் எவ்வாறு கூறுவர்?
(A) ஓரிகாமி
(B) சசுகியோ
(C) மசிகுயூ
(D) வசிகுஇ
Answer: (A) ஓரிகாமி

2. பல்லவ மன்னர்களின் சித்திரகார புலி என்ற அடைமொழியை பெற்றவர் யார்?
(A) மகேந்திரவர்மன்
(B) ராஜசிம்மன்
(C) நரசிம்மவர்மன்
(D) நந்திவர்மன்
Answer: (A) மகேந்திரவர்மன்



3. முட்டாள்களின் சங்கம் என குறிப்பிடப்பட்ட சங்கம் எது?
(A) ஐக்கிய நாடுகள் சங்கம்
(B) சர்வதேச சங்கம்
(C) ஐரோப்பிய ஒன்றியம்
(D) ஐக்கிய அரபுநாடுகள் கூட்டமைப்பு
Answer: (B) சர்வதேச சங்கம்

4. பழைய புத்தர் என அழைக்கப்பட்டவர் யார்?
(A) ஆன்சான் சூயி
(B) ஆன்ரூஸ் பெர்னான்டஸ்
(C) சன்யாட்சென்
(D) தவேகார் சூசி
Answer: (D) தவேகார் சூசி

5. முசோலி ஆசிரியராக இருந்த இத்தாலிய சமதர்ம பத்திரிக்கை எது?
(A) இத்தாலி
(B) மெயின்காப்
(C) அவந்தி
(D) மெயின்பார்ட்
Answer: (C) அவந்தி

6. 1911ம் ஆண்டு சீனாவில் புரட்சி ஏற்பட்டு யாருடைய தலைமையில் குடியரசு நாடானது?
(A) ஆன்சான் சூயி
(B) ஆன்ரூஸ் பெர்னான்டஸ்
(C) சன்யாட்சென்
(D) தவேகார் சூசி
Answer: (C) சன்யாட்சென்

7. எந்தத் துறைக்கு தங்கத் தாமரை விருது (Swarna Kamal) வழங்கப்படுகிறது ?
(A) இலக்கியம்
(B) சினிமா
(C) விளையாட்டு
(D) சமூகவியல்
Answer: (B) சினிமா

8. நூறு சதவிகிதம் படித்தவர்கள் உள்ள பகுதி என்று இந்தியாவிலேயே புகழ் பெற்ற முதல் நகரம் எது?
(A) கொச்சி
(B) திருவனந்தபுரம்
(C) கோட்டயம்
(D) கோழிக்கோடு
Answer: (C) கோட்டயம்

9. மக்கள் இலக்கியம் எனப்போற்றப்டுவது?
(A) சிலப்பதிகாரம்
(B) இராமாயணம்
(C) மணிமேகலை
(D) சித்தர்பாடல்கள்
Answer: (D) சித்தர்பாடல்கள்

10. துரோணாச்சாரியா விருது வழங்கப்படுவது
(A) டென்னிஸ் விளையாட்டு வீரருக்கு
(B) கிரிக்கெட் விளையாட்டு வீரருக்கு
(C) விளையாட்டு பயிற்சியாளருக்கு
(D) ஹாக்கி விளையாட்டு வீரருக்கு
Answer: C) விளையாட்டு பயிற்சியாளருக்கு

TNPSC EXAM - ல் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவது எப்படி ?

முதலில் சிலபஸை தெரிந்துக்கொள்ளுங்கள்.
 சிலபஸை தெரியாமல் படிப்பது என்பது சேர வேண்டிய இடம் தெரியாமல் பயணம் செய்வது போன்றதாகும்.
அதனால் முதலில் சிலபஸை முழுமையாக படியுங்கள்.
 டி.என்.பி.எஸ்.சி- யானது இத்தேர்வுக்கான சிலபஸை பொது அறிவு, பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் உள்ளடக்கியதாக வெளியிட் டுள்ளது.

 பொது அறிவு சிலபஸில் இந்திய வரலாறு, இந்திய சுதந்திரப் போராட்டம், இந்திய பண்பாடு, தமிழக வரலாறு மற்றும் பண்பாடு, பொது புவியியல் மற்றும் இந்திய புவியியல், இந்திய அரசியலமைப்பு மற்றும் அரசியல், பொது அறிவியல் (இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்), இந்திய பொருளாதாரம் மற்றும் வணிகம், நடப்புகால நிகழ்வுகள், அறிவுக்கூர்மை, பொது அறிவு (இந்தியா, தமிழ்நாடு), அறவியல் என இவை அனைத்தும் பொது அறிவு பாடத்தில் உள்ளடங்கியிருக்கும்.

இவைகளிலிருந்து நூறு வினாக்கள் கேட்கப்படுகிறது.. 

பொதுத் தமிழில் பொருத்துக, தொடரும் தொடர்பு அறிதல், பிரித்தெழுதுக, பிழைத் திருத்தம் என இருபது பாடப் பிரிவுகளை உள்ளடக்கிய சிலபஸ் ஒன்றை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதில் ஒவ்வொரு பாடத்திலிருந்தும் ஏறக்குறைய ஐந்து வினாக்கள் வீதம் நூறு வினாக்கள் கேட்கப்படும். பொது அறிவு, பொதுத் தமிழ் பாடத்திலிருந்து 300 மதிப் பெண்களுக்கு இவ்வீதமாக வினாக்கள் கேட்கப்படுகிறது.


இந்தப் பாடப்பிரிவுகளை உள்ளடக்கிய நூல்களை மட்டும் வாங்கிப் படியுங்கள். படிக்கும் போது நீங்கள் தேர்வு எழுதபோவது பட்டப் படிப்பு தரத்திற்கானது என்பதை மறந்து விடாதீர்கள். ஏனெனில் தோல்வி அடையும் நிறையபேர் பத்தாம் வகுப்பு தரத்திற்கே படிப்பதால் தேர்வு மையத்தில் வினாத்தாளை கண்டவுடன் குழம்பிவிடு கின்றனர். அதே போல நிறைய பயிற்சி மையங் களிலும் மாணவர்களிடம் பயிற்சிக் கட்ட ணத்தை பெற்றுக்கொண்டு, பத்தாவது தரத்திற்கான பாடக்கையேடுகளை (Study Materials) வழங்குவதும், பயிற்சி தருவதும் தோல்விக்கான அடிப்படை காரணங்கள். அதனால் தேர்வுக்கு தயார் செய்யும் போது பட்டப்படிப்பு தரத்திற்கு படிக்க வேண்டும். தொடர்ந்து படியுங்கள் அதனை நீங்களே மாதிரி தேர்வு எழுதிப் பாருங்கள். கணிதம், பொதுத் தமிழில் வரும் குறிப்புகள் போன்றவை அனைத்தையும் பயிற்சி செய்து பாருங்கள். தொடர்ந்து நீங்கள் செய்யும் பயிற்சிதான் வெற்றிக்கு வழிவகுக்கும்.


இந்த வருடம் TNPSC குரூப் II தேர்வு முந்தைய வருடத்தைவிட மிகவும் கடினமாக இருக்கும். பல லட்சம் பேர் விண்ணப்பிக்கும் போது போட்டித் தேர்வின் தரத்தை மேம் படுத்த TNPSC சமீபக்காலங்களில் கடினமான கேள்விகளை தயாரித்து வருகிறது. சென்ற ஆண்டு குரூப் - II தேர்வில் வழக்கத்திற்கு மாறாக கடினமான கேள்விகள் கேட்கப் பட்டது. அதேபோல் இந்த குரூப் - II தேர்வு நிச்சயம் மிகமிக கடினமாகதான் இருக்கும். இத்தேர்வில் வெற்றிப் பெறுவதற்கு தேவையான 40 வினாக்கள் UPSC தரத்தில் கேட்பார்கள். இவற்றை சரியாக அணுகினால்தான் இத்தேர்வில் வெற்றிப் பெற்று பணியில் சேர முடியும்.


இந்த கடினமான போட்டித் தேர்வில் வெற்றிப் பெறுவதில் பயிற்சி மையங்களின் பணி மகத்தானது. ஆனால் இப்போது உங்கள் முன் இருக்கும் கேள்வி எந்த பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படிப்பது என்பதுதான். அதை கண்டுப்பிடிக்க ஒரு அளவுகோல் உள்ளது. அதன்படி எந்த பயிற்சி மையம்,


பொதுத் தமிழில் 100% மதிப்பெண்களை பெற்றுத்தருகிறதோ,எந்த பயிற்சி மையம் வழங்கும் பாடக்கையெடுகள் (Study Materials) முந்தைய வினாக்களுக்கான சரியான விடை களை உள்ளடக்கியதாக இருக்கிறதோ,


எங்கு தினமும் நடத்தப்படும் பாடங்களில் வகுப்பறையிலேயே 50% பாடங்கள் மனதில் பதிய வைத்து விடுகிறார்களோ, அதுவே தரமான சிறந்த பயிற்சி மையமாகும்.


அந்த பயிற்சி மையத்தில் சேருங்கள். வெற்றி பெறுங்கள். நிறையப் பயிற்சி மையங்களில் முறையாகவும் முழுமையாகவும் கற்று தருவ தில்லை. ஆனால் போலியாக நாளிதழ்களில் தங்கள் பயிற்சி மையத்திலிருந்து இவ்வளவு பேர் வெற்றிப் பெற்றார்கள் என ஆதாரமில்லாத விளம்பரத்தை கொடுத்து வருகிறார்கள். எடுத்துக்காட்டாக சில பயிற்சி நிறுவனங்கள் சென்ற வருடத்தில் குரூப் II -வில் 30 பேர் வெற்றிப் பெற்றார்கள் என விளம்பரம் செய்கின்றார்கள் எனில் உண்மையில் அந்த வருடத்தில் அவர்களால் பயிற்சி அளிக்கப் பட்டவர்கள் 300 பேர். ஆக 10% சதவிகிதம் மட்டுமே தேர்ச்சி பெறவைக்கும் எந்த ஒரு பயிற்சி நிறுவனமும் எப்படி ஒரு சிறந்த பயிற்சி நிறுவனமாக இருக்க முடியும். ஒரு சிறந்த பயிற்சி நிறுவனம் என்பது 70% சதவிகித மாணவர்களையாவது வெற்றிப்பெற வைக்க வேண்டும். அதனால் சரியான சிறந்த பயிற்சி நிறுவனங்களில் சேருங்கள். வார இறுதியில் (சனி, ஞாயிறு) மட்டும் பயிற்சி தரும் மையங்களில் சேராதீர்கள். நிச்சயம் அத்தகைய பயிற்சி மையங்களால் இத்தேர்விற்கான சிலபஸை உள்ளடக்கிய முழுமையான பயிற்சி வழங்க முடியாது. பணம் போனது போனது தான். அதனால் தினமும் பயிற்சி தரும் மையங்களில் சேர்ந்து படியுங்கள். வெற்றி பெறுங்கள். வாழ்த்துக்கள்.

 

 

 

Saturday, 26 October 2013

புகழ்பெற்ற தமிழ் இலக்கண நூல்களும் நூலாசிரியர்களும்!

Saturday, 26 October 2013 - 0 Comments



இலக்கண நூல்கள்
நூலாசிரியர்கள்
அகத்தியம்அகத்தியர்
தொல்காப்பியம்தொல்காப்பியர்
இறையனார் களவியல்இறையனார்
புறப்பொருள் வெண்பாமாலையனாரிதனார்
யாப்பருங்கலம்அமிர்தசாகரனார்
யாப்பருங்கல காரிகைஅமிர்தசாகரனார்
வீரசோழியம்புத்தமித்திரர்
நேமிநாதம்குணவீரபண்டிதர்
தண்டியலங்காரம்தண்டி
நன்னூல்பவணந்தி முனிவர்
அகப்பொருள்நம்பியகப் பொருள்
நவநீதப் பாட்டியல்நவநீதநாடான்
சிரம்பரப் பாட்டியல்மஞ்சோதியர்
மாறனலங்காரம்மஞ்சோதியர்
பிரயோக விவேகம்சுப்ரமணிய தீட்சிதர்
மாறன் அகப்பொருள்திருக்குருகைபெருமாள் கவிராயர்
இலக்கண விளக்கம்வைத்தியநாத தேசிகர்
இலக்கண விளக்க சூறாவளிசிவஞான முனிவர்
இலக்கண கொத்துசாமிநாத தேசிகர்
தொன்னூல் விளக்கம்வீரமாமுனிவர்
பிரபந்த தீபிகைமுத்து வேங்கட சுப்பையர்
முத்துவீரியம்முத்துவீர உபாத்தியாயர்
சாமிநாதம்சாமிகவியரசர்
அறுவகை இலக்கணம்-ஏழாம் இலக்கணம்தண்டபாணி சுவாமிகள்
காக்கைபாடினியம்காக்கை பாடினியார்
வச்சனந்தி மாலைகுணவீர பண்டிதர்

சாகித்திய அகாடமி விருது பெற்ற தமிழ் நூல்கள்!


ஆண்டுபுத்தகத்தின் பெயர்ஆசிரியர்பிரிவு
2012தோல்டி. செல்வராஜ்நாவல்
2011காவல் கோட்டம்சு. வெங்கடேசன்நாவல்
2010சூடிய பூ சூடற்கநாஞ்சில் நாடன்சிறுகதைகள்
2009கையொப்பம்புவியரசுகவிதை
2008மின்சாரப்பூமேலாண்மை பொன்னுசாமிசிறுகதைகள்
2007இலையுதிர்காலம்நீல பத்மநாபன்நாவல்
2006ஆகாயத்திற்கு அடுத்த வீடுமு. மேத்தாகவிதை
2005கல்மரம்திலகவதிநாவல்
2004வணக்கம் வள்ளுவஈரோடு தமிழன்பன்கவிதை
2003கள்ளிக்காட்டு இதிகாசம்வைரமுத்துநாவல்
2002ஒரு கிராமத்து நதிசிற்பிகவிதை
2001சுதந்திர தாகம்சி.சு.செல்லப்பாநாவல்
2000விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள்தி.க.சிவசங்கரன்விமர்சனம்
1999ஆலாபனைஅப்துல் ரகுமான்கவிதை
1998விசாரணைக் கமிஷன்சா.கந்தசாமிநாவல்
1997சாய்வு நாற்காலிதோப்பில் முகமது மீரான்நாவல்
1996அப்பாவின் சினேகிதர்அசோகமித்திரன்சிறுகதைகள்
1995வானம் வசப்படும்பிரபஞ்சன்நாவல்
1994புதிய தரிசனங்கள்பொன்னீலன்நாவல்
1993காதுகள்எம். வி. வெங்கட்ராம்நாவல்
1992குற்றாலக்குறிஞ்சிகோவி. மணிசேகரன்நாவல்
1991கோபல்லபுரத்து மக்கள்கி. ராஜநாராயணன்நாவல்
1990வேரில் பழுத்த பலாசு. சமுத்திரம்நாவல்
1989சிந்தாநதிலா.ச.ராமாமிர்தம்சுயசரிதை
1988வாழும் வள்ளுவம்வா. செ. குழந்தைசாமிஇலக்கிய விமர்சனம்
1987முதலில் இரவு வரும்ஆதவன்சிறுகதைகள்
1986இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்க.நா.சுப்பிரமணியம்இலக்கிய விமர்சனம்
1985கம்பன்: புதிய பார்வைஅ. ச. ஞானசம்பந்தன்இலக்கிய விமர்சனம்
1984ஒரு கவிரியைப் போலலட்சுமி (திரிபுரசுந்தரி)நாவல்
1983பாரதி : காலமும் கருத்தும்தொ. மு. சி. இரகுநாதன்இலக்கிய விமர்சனம்
1982மணிக்கொடி காலம்பி. எஸ். இராமையாஇலக்கிய வரலாறு
1981புதிய உரைநடைமா. இராமலிங்கம்விமர்சனம்
1980சேரமான் காதலிகண்ணதாசன்நாவல்
1979சக்தி வைத்தியம்தி. ஜானகிராமன்சிறுகதைகள்
1978புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்வல்லிக்கண்ணன்விமர்சனம்
1977குருதிப்புனல்இந்திரா பார்த்தசாரதிநாவல்
1975தற்காலத் தமிழ் இலக்கியம்இரா. தண்டாயுதம்இலக்கிய விமர்சனம்
1974திருக்குறள் நீதி இலக்கியம்க. த. திருநாவுக்கரசுஇலக்கிய விமர்சனம்
1973வேருக்கு நீர்ராஜம் கிருஷ்ணன்நாவல்
1972சில நேரங்களில் சில மனிதர்கள்ஜெயகாந்தன்நாவல்
1971சமுதாய வீதிநா. பார்த்தசாரதிநாவல்
1970அன்பளிப்புகு. அழகிரிசாமிசிறுகதைகள்
1969பிசிராந்தையார்பாரதிதாசன்நாடகம்
1968வெள்ளைப்பறவைஅ. சீனிவாச இராகவன்கவிதை
1967வீரர் உலகம்கி. வா. ஜெகநாதன்இலக்கிய விமர்சனம்
1966வள்ளலார் கண்ட ஒருமைப்பாடும. பொ. சிவஞானம்சரிதை நூல்
1965ஸ்ரீ ராமானுஜர்பி.ஸ்ரீ. ஆச்சார்யாசரிதை நூல்
1963வேங்கையின் மைந்தன்அகிலன்நாவல்
1962அக்கரைச் சீமையிலேமீ.ப.சோமுபயண நூல்
1961அகல் விளக்குமு. வரதராசன்நாவல்
1958சக்கரவர்த்தித் திருமகன்கி. இராஜகோபாலாச்சாரியார்உரைநடை
1956அலைஓசைகல்கிநாவல்
1955தமிழ் இன்பம்ரா. பி. சேதுப்பிள்ளைகட்டுரை

Subscribe

புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

© 2013 கல்லாப்பெட்டி. All rights reserved.