Recent Articles
Home » All posts
Sunday, 27 October 2013
Sunday, 27 October 2013
- 0 Comments
| வ.எண் | ஆண்டு | சிறப்புப்பெயர் |
| 1 | முதல் ஆண்டு | காகித விழா |
| 2 | இரண்டாம் ஆண்டு | பருத்தி விழா |
| 3 | மூன்றாம் ஆண்டு | தோல் விழா |
| 4 | நான்காம் ஆண்டு | மலர், பழ விழா |
| 5 | ஐந்தாம் ஆண்டு | மர விழா |
| 6 | ஆறாம் ஆண்டு | சர்க்கரை ,கற்கண்டு விழா |
| 7 | ஏழாம்ஆண்டு | கம்பளி, செம்பு விழா |
| 8 | எட்டாம் ஆண்டு | வெண்கல விழா |
| 9 | ஒன்பதாம் ஆண்டு | மண்கலச விழா |
| 10 | பத்தாம் ஆண்டு | தகரம் ,அலுமினியம் விழா |
| 11 | பதினோறாம் ஆண்டு | இரும்பு விழா |
| 12 | பனிரெண்டாம் ஆண்டு | லினன் விழா |
| 13 | பதிமூன்றாம் ஆண்டு | மின்னல் விழா |
| 14 | பதினான்காம் ஆண்டு | தந்த விழா |
| 15 | பதினைந்தாம் ஆண்டு | படிக விழா |
| 16 | இருபதாம் ஆண்டு | பீங்கான் விழா |
| 17 | இருபத்தைந்தாம் ஆண்டு | வெள்ளி விழா |
| 18 | ஐம்பதாம் ஆண்டு | பொன் விழா |
| 19 | அறுபதாம் ஆண்டு | வைர விழா |
| 20 | எழுபத்தைந்தாம் ஆண்டு | பவள விழா |
| 21 | நூறாம் ஆண்டு | நூற்றாண்டு விழா |
1. காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலையை ஜப்பானியர் எவ்வாறு கூறுவர்?
(A) ஓரிகாமி(B) சசுகியோ
(C) மசிகுயூ
(D) வசிகுஇ
Answer: (A) ஓரிகாமி
2. பல்லவ மன்னர்களின் சித்திரகார புலி என்ற அடைமொழியை பெற்றவர் யார்?
(A) மகேந்திரவர்மன்
(B) ராஜசிம்மன்
(C) நரசிம்மவர்மன்
(D) நந்திவர்மன்
Answer: (A) மகேந்திரவர்மன்
3. முட்டாள்களின் சங்கம் என குறிப்பிடப்பட்ட சங்கம் எது?
(A) ஐக்கிய நாடுகள் சங்கம்
(B) சர்வதேச சங்கம்
(C) ஐரோப்பிய ஒன்றியம்
(D) ஐக்கிய அரபுநாடுகள் கூட்டமைப்பு
Answer: (B) சர்வதேச சங்கம்
4. பழைய புத்தர் என அழைக்கப்பட்டவர் யார்?
(A) ஆன்சான் சூயி
(B) ஆன்ரூஸ் பெர்னான்டஸ்
(C) சன்யாட்சென்
(D) தவேகார் சூசி
Answer: (D) தவேகார் சூசி
5. முசோலி ஆசிரியராக இருந்த இத்தாலிய சமதர்ம பத்திரிக்கை எது?
(A) இத்தாலி
(B) மெயின்காப்
(C) அவந்தி
(D) மெயின்பார்ட்
Answer: (C) அவந்தி
6. 1911ம் ஆண்டு சீனாவில் புரட்சி ஏற்பட்டு யாருடைய தலைமையில் குடியரசு நாடானது?
(A) ஆன்சான் சூயி
(B) ஆன்ரூஸ் பெர்னான்டஸ்
(C) சன்யாட்சென்
(D) தவேகார் சூசி
Answer: (C) சன்யாட்சென்
7. எந்தத் துறைக்கு தங்கத் தாமரை விருது (Swarna Kamal) வழங்கப்படுகிறது ?
(A) இலக்கியம்
(B) சினிமா
(C) விளையாட்டு
(D) சமூகவியல்
Answer: (B) சினிமா
8. நூறு சதவிகிதம் படித்தவர்கள் உள்ள பகுதி என்று இந்தியாவிலேயே புகழ் பெற்ற முதல் நகரம் எது?
(A) கொச்சி
(B) திருவனந்தபுரம்
(C) கோட்டயம்
(D) கோழிக்கோடு
Answer: (C) கோட்டயம்
9. மக்கள் இலக்கியம் எனப்போற்றப்டுவது?
(A) சிலப்பதிகாரம்
(B) இராமாயணம்
(C) மணிமேகலை
(D) சித்தர்பாடல்கள்
Answer: (D) சித்தர்பாடல்கள்
10. துரோணாச்சாரியா விருது வழங்கப்படுவது
(A) டென்னிஸ் விளையாட்டு வீரருக்கு
(B) கிரிக்கெட் விளையாட்டு வீரருக்கு
(C) விளையாட்டு பயிற்சியாளருக்கு
(D) ஹாக்கி விளையாட்டு வீரருக்கு
Answer: C) விளையாட்டு பயிற்சியாளருக்கு
முதலில் சிலபஸை தெரிந்துக்கொள்ளுங்கள்.
சிலபஸை தெரியாமல் படிப்பது என்பது சேர வேண்டிய இடம் தெரியாமல் பயணம் செய்வது போன்றதாகும்.
அதனால் முதலில் சிலபஸை முழுமையாக படியுங்கள்.
டி.என்.பி.எஸ்.சி- யானது இத்தேர்வுக்கான சிலபஸை பொது அறிவு, பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் உள்ளடக்கியதாக வெளியிட் டுள்ளது.
பொது அறிவு சிலபஸில் இந்திய வரலாறு, இந்திய சுதந்திரப் போராட்டம், இந்திய பண்பாடு, தமிழக வரலாறு மற்றும் பண்பாடு, பொது புவியியல் மற்றும் இந்திய புவியியல், இந்திய அரசியலமைப்பு மற்றும் அரசியல், பொது அறிவியல் (இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்), இந்திய பொருளாதாரம் மற்றும் வணிகம், நடப்புகால நிகழ்வுகள், அறிவுக்கூர்மை, பொது அறிவு (இந்தியா, தமிழ்நாடு), அறவியல் என இவை அனைத்தும் பொது அறிவு பாடத்தில் உள்ளடங்கியிருக்கும்.
இவைகளிலிருந்து நூறு வினாக்கள் கேட்கப்படுகிறது..
பொதுத் தமிழில் பொருத்துக, தொடரும் தொடர்பு அறிதல், பிரித்தெழுதுக, பிழைத் திருத்தம் என இருபது பாடப் பிரிவுகளை உள்ளடக்கிய சிலபஸ் ஒன்றை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதில் ஒவ்வொரு பாடத்திலிருந்தும் ஏறக்குறைய ஐந்து வினாக்கள் வீதம் நூறு வினாக்கள் கேட்கப்படும். பொது அறிவு, பொதுத் தமிழ் பாடத்திலிருந்து 300 மதிப் பெண்களுக்கு இவ்வீதமாக வினாக்கள் கேட்கப்படுகிறது.
இந்தப் பாடப்பிரிவுகளை உள்ளடக்கிய நூல்களை மட்டும் வாங்கிப் படியுங்கள். படிக்கும் போது நீங்கள் தேர்வு எழுதபோவது பட்டப் படிப்பு தரத்திற்கானது என்பதை மறந்து விடாதீர்கள். ஏனெனில் தோல்வி அடையும் நிறையபேர் பத்தாம் வகுப்பு தரத்திற்கே படிப்பதால் தேர்வு மையத்தில் வினாத்தாளை கண்டவுடன் குழம்பிவிடு கின்றனர். அதே போல நிறைய பயிற்சி மையங் களிலும் மாணவர்களிடம் பயிற்சிக் கட்ட ணத்தை பெற்றுக்கொண்டு, பத்தாவது தரத்திற்கான பாடக்கையேடுகளை (Study Materials) வழங்குவதும், பயிற்சி தருவதும் தோல்விக்கான அடிப்படை காரணங்கள். அதனால் தேர்வுக்கு தயார் செய்யும் போது பட்டப்படிப்பு தரத்திற்கு படிக்க வேண்டும். தொடர்ந்து படியுங்கள் அதனை நீங்களே மாதிரி தேர்வு எழுதிப் பாருங்கள். கணிதம், பொதுத் தமிழில் வரும் குறிப்புகள் போன்றவை அனைத்தையும் பயிற்சி செய்து பாருங்கள். தொடர்ந்து நீங்கள் செய்யும் பயிற்சிதான் வெற்றிக்கு வழிவகுக்கும்.
இந்த வருடம் TNPSC குரூப் II தேர்வு முந்தைய வருடத்தைவிட மிகவும் கடினமாக இருக்கும். பல லட்சம் பேர் விண்ணப்பிக்கும் போது போட்டித் தேர்வின் தரத்தை மேம் படுத்த TNPSC சமீபக்காலங்களில் கடினமான கேள்விகளை தயாரித்து வருகிறது. சென்ற ஆண்டு குரூப் - II தேர்வில் வழக்கத்திற்கு மாறாக கடினமான கேள்விகள் கேட்கப் பட்டது. அதேபோல் இந்த குரூப் - II தேர்வு நிச்சயம் மிகமிக கடினமாகதான் இருக்கும். இத்தேர்வில் வெற்றிப் பெறுவதற்கு தேவையான 40 வினாக்கள் UPSC தரத்தில் கேட்பார்கள். இவற்றை சரியாக அணுகினால்தான் இத்தேர்வில் வெற்றிப் பெற்று பணியில் சேர முடியும்.
இந்த கடினமான போட்டித் தேர்வில் வெற்றிப் பெறுவதில் பயிற்சி மையங்களின் பணி மகத்தானது. ஆனால் இப்போது உங்கள் முன் இருக்கும் கேள்வி எந்த பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படிப்பது என்பதுதான். அதை கண்டுப்பிடிக்க ஒரு அளவுகோல் உள்ளது. அதன்படி எந்த பயிற்சி மையம்,
பொதுத் தமிழில் 100% மதிப்பெண்களை பெற்றுத்தருகிறதோ,எந்த பயிற்சி மையம் வழங்கும் பாடக்கையெடுகள் (Study Materials) முந்தைய வினாக்களுக்கான சரியான விடை களை உள்ளடக்கியதாக இருக்கிறதோ,
எங்கு தினமும் நடத்தப்படும் பாடங்களில் வகுப்பறையிலேயே 50% பாடங்கள் மனதில் பதிய வைத்து விடுகிறார்களோ, அதுவே தரமான சிறந்த பயிற்சி மையமாகும்.
அந்த பயிற்சி மையத்தில் சேருங்கள். வெற்றி பெறுங்கள். நிறையப் பயிற்சி மையங்களில் முறையாகவும் முழுமையாகவும் கற்று தருவ தில்லை. ஆனால் போலியாக நாளிதழ்களில் தங்கள் பயிற்சி மையத்திலிருந்து இவ்வளவு பேர் வெற்றிப் பெற்றார்கள் என ஆதாரமில்லாத விளம்பரத்தை கொடுத்து வருகிறார்கள். எடுத்துக்காட்டாக சில பயிற்சி நிறுவனங்கள் சென்ற வருடத்தில் குரூப் II -வில் 30 பேர் வெற்றிப் பெற்றார்கள் என விளம்பரம் செய்கின்றார்கள் எனில் உண்மையில் அந்த வருடத்தில் அவர்களால் பயிற்சி அளிக்கப் பட்டவர்கள் 300 பேர். ஆக 10% சதவிகிதம் மட்டுமே தேர்ச்சி பெறவைக்கும் எந்த ஒரு பயிற்சி நிறுவனமும் எப்படி ஒரு சிறந்த பயிற்சி நிறுவனமாக இருக்க முடியும். ஒரு சிறந்த பயிற்சி நிறுவனம் என்பது 70% சதவிகித மாணவர்களையாவது வெற்றிப்பெற வைக்க வேண்டும். அதனால் சரியான சிறந்த பயிற்சி நிறுவனங்களில் சேருங்கள். வார இறுதியில் (சனி, ஞாயிறு) மட்டும் பயிற்சி தரும் மையங்களில் சேராதீர்கள். நிச்சயம் அத்தகைய பயிற்சி மையங்களால் இத்தேர்விற்கான சிலபஸை உள்ளடக்கிய முழுமையான பயிற்சி வழங்க முடியாது. பணம் போனது போனது தான். அதனால் தினமும் பயிற்சி தரும் மையங்களில் சேர்ந்து படியுங்கள். வெற்றி பெறுங்கள். வாழ்த்துக்கள்.
Saturday, 26 October 2013
Saturday, 26 October 2013
- 0 Comments
இலக்கண நூல்கள்
|
நூலாசிரியர்கள்
|
| அகத்தியம் | அகத்தியர் |
| தொல்காப்பியம் | தொல்காப்பியர் |
| இறையனார் களவியல் | இறையனார் |
| புறப்பொருள் வெண்பாமாலை | யனாரிதனார் |
| யாப்பருங்கலம் | அமிர்தசாகரனார் |
| யாப்பருங்கல காரிகை | அமிர்தசாகரனார் |
| வீரசோழியம் | புத்தமித்திரர் |
| நேமிநாதம் | குணவீரபண்டிதர் |
| தண்டியலங்காரம் | தண்டி |
| நன்னூல் | பவணந்தி முனிவர் |
| அகப்பொருள் | நம்பியகப் பொருள் |
| நவநீதப் பாட்டியல் | நவநீதநாடான் |
| சிரம்பரப் பாட்டியல் | மஞ்சோதியர் |
| மாறனலங்காரம் | மஞ்சோதியர் |
| பிரயோக விவேகம் | சுப்ரமணிய தீட்சிதர் |
| மாறன் அகப்பொருள் | திருக்குருகைபெருமாள் கவிராயர் |
| இலக்கண விளக்கம் | வைத்தியநாத தேசிகர் |
| இலக்கண விளக்க சூறாவளி | சிவஞான முனிவர் |
| இலக்கண கொத்து | சாமிநாத தேசிகர் |
| தொன்னூல் விளக்கம் | வீரமாமுனிவர் |
| பிரபந்த தீபிகை | முத்து வேங்கட சுப்பையர் |
| முத்துவீரியம் | முத்துவீர உபாத்தியாயர் |
| சாமிநாதம் | சாமிகவியரசர் |
| அறுவகை இலக்கணம்-ஏழாம் இலக்கணம் | தண்டபாணி சுவாமிகள் |
| காக்கைபாடினியம் | காக்கை பாடினியார் |
| வச்சனந்தி மாலை | குணவீர பண்டிதர் |
| ஆண்டு | புத்தகத்தின் பெயர் | ஆசிரியர் | பிரிவு |
|---|---|---|---|
| 2012 | தோல் | டி. செல்வராஜ் | நாவல் |
| 2011 | காவல் கோட்டம் | சு. வெங்கடேசன் | நாவல் |
| 2010 | சூடிய பூ சூடற்க | நாஞ்சில் நாடன் | சிறுகதைகள் |
| 2009 | கையொப்பம் | புவியரசு | கவிதை |
| 2008 | மின்சாரப்பூ | மேலாண்மை பொன்னுசாமி | சிறுகதைகள் |
| 2007 | இலையுதிர்காலம் | நீல பத்மநாபன் | நாவல் |
| 2006 | ஆகாயத்திற்கு அடுத்த வீடு | மு. மேத்தா | கவிதை |
| 2005 | கல்மரம் | திலகவதி | நாவல் |
| 2004 | வணக்கம் வள்ளுவ | ஈரோடு தமிழன்பன் | கவிதை |
| 2003 | கள்ளிக்காட்டு இதிகாசம் | வைரமுத்து | நாவல் |
| 2002 | ஒரு கிராமத்து நதி | சிற்பி | கவிதை |
| 2001 | சுதந்திர தாகம் | சி.சு.செல்லப்பா | நாவல் |
| 2000 | விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள் | தி.க.சிவசங்கரன் | விமர்சனம் |
| 1999 | ஆலாபனை | அப்துல் ரகுமான் | கவிதை |
| 1998 | விசாரணைக் கமிஷன் | சா.கந்தசாமி | நாவல் |
| 1997 | சாய்வு நாற்காலி | தோப்பில் முகமது மீரான் | நாவல் |
| 1996 | அப்பாவின் சினேகிதர் | அசோகமித்திரன் | சிறுகதைகள் |
| 1995 | வானம் வசப்படும் | பிரபஞ்சன் | நாவல் |
| 1994 | புதிய தரிசனங்கள் | பொன்னீலன் | நாவல் |
| 1993 | காதுகள் | எம். வி. வெங்கட்ராம் | நாவல் |
| 1992 | குற்றாலக்குறிஞ்சி | கோவி. மணிசேகரன் | நாவல் |
| 1991 | கோபல்லபுரத்து மக்கள் | கி. ராஜநாராயணன் | நாவல் |
| 1990 | வேரில் பழுத்த பலா | சு. சமுத்திரம் | நாவல் |
| 1989 | சிந்தாநதி | லா.ச.ராமாமிர்தம் | சுயசரிதை |
| 1988 | வாழும் வள்ளுவம் | வா. செ. குழந்தைசாமி | இலக்கிய விமர்சனம் |
| 1987 | முதலில் இரவு வரும் | ஆதவன் | சிறுகதைகள் |
| 1986 | இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் | க.நா.சுப்பிரமணியம் | இலக்கிய விமர்சனம் |
| 1985 | கம்பன்: புதிய பார்வை | அ. ச. ஞானசம்பந்தன் | இலக்கிய விமர்சனம் |
| 1984 | ஒரு கவிரியைப் போல | லட்சுமி (திரிபுரசுந்தரி) | நாவல் |
| 1983 | பாரதி : காலமும் கருத்தும் | தொ. மு. சி. இரகுநாதன் | இலக்கிய விமர்சனம் |
| 1982 | மணிக்கொடி காலம் | பி. எஸ். இராமையா | இலக்கிய வரலாறு |
| 1981 | புதிய உரைநடை | மா. இராமலிங்கம் | விமர்சனம் |
| 1980 | சேரமான் காதலி | கண்ணதாசன் | நாவல் |
| 1979 | சக்தி வைத்தியம் | தி. ஜானகிராமன் | சிறுகதைகள் |
| 1978 | புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் | வல்லிக்கண்ணன் | விமர்சனம் |
| 1977 | குருதிப்புனல் | இந்திரா பார்த்தசாரதி | நாவல் |
| 1975 | தற்காலத் தமிழ் இலக்கியம் | இரா. தண்டாயுதம் | இலக்கிய விமர்சனம் |
| 1974 | திருக்குறள் நீதி இலக்கியம் | க. த. திருநாவுக்கரசு | இலக்கிய விமர்சனம் |
| 1973 | வேருக்கு நீர் | ராஜம் கிருஷ்ணன் | நாவல் |
| 1972 | சில நேரங்களில் சில மனிதர்கள் | ஜெயகாந்தன் | நாவல் |
| 1971 | சமுதாய வீதி | நா. பார்த்தசாரதி | நாவல் |
| 1970 | அன்பளிப்பு | கு. அழகிரிசாமி | சிறுகதைகள் |
| 1969 | பிசிராந்தையார் | பாரதிதாசன் | நாடகம் |
| 1968 | வெள்ளைப்பறவை | அ. சீனிவாச இராகவன் | கவிதை |
| 1967 | வீரர் உலகம் | கி. வா. ஜெகநாதன் | இலக்கிய விமர்சனம் |
| 1966 | வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு | ம. பொ. சிவஞானம் | சரிதை நூல் |
| 1965 | ஸ்ரீ ராமானுஜர் | பி.ஸ்ரீ. ஆச்சார்யா | சரிதை நூல் |
| 1963 | வேங்கையின் மைந்தன் | அகிலன் | நாவல் |
| 1962 | அக்கரைச் சீமையிலே | மீ.ப.சோமு | பயண நூல் |
| 1961 | அகல் விளக்கு | மு. வரதராசன் | நாவல் |
| 1958 | சக்கரவர்த்தித் திருமகன் | கி. இராஜகோபாலாச்சாரியார் | உரைநடை |
| 1956 | அலைஓசை | கல்கி | நாவல் |
| 1955 | தமிழ் இன்பம் | ரா. பி. சேதுப்பிள்ளை | கட்டுரை |
Subscribe to:
Posts (Atom)