Recent Articles

Saturday, 16 November 2013

பயனுள்ள பொது அறிவு தகவல்கள்!

Saturday, 16 November 2013 - 0 Comments


மாணவர்களே உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள்...

* முதன் முதலாக தொழில்புரட்சி நடைபெற்ற நாடு - இங்கிலாந்து

* குளோரினிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து பொருள் - குளோரோஃபார்ம்

* மனிதனுடைய உடல் உறுப்புகளில் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருப்பது - மூளையில் உள்ள செல்கள்

* எச்.பி.ஜே. பைப்லைன் திட்டமானது எதை கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது - இயற்கை வாயு

* இத்தாலி நாட்டின் தேசிய மலர் - லில்லி

* மின் விளக்கை கண்டுபிடித்தவர் - ஹம்ப்ளி டேவி

* ஒரு மணி நேரத்தில் 74 கி.மீ வேகத்தில் ஓடுவது - நெருப்பு கோழி

* ஏறும்புகள் உள்ள வகைகள் - 14,000 (அவைகள் ஒரு போதும் உறங்குவதில்லை)

* நயாகரா நீர்வீழ்ச்சியை கண்டுபிடித்தவர் - லூயிஸ் ஹெனபின்

* ஆசியாவில் முதன் முதலாக தொழில் மயமான நாடு எது - ஜப்பான்

* சூரிய குடும்பத்தில் அதிக வெப்பமான கிரகம் - புதன்

* சுறா மீனின் வாழ் நாள் - 20 முதுல் 30 ஆண்டுகள்

* கொசுக்களில் 3500 வகை உள்ளது

Tuesday, 29 October 2013

உலக தமிழ் மாநாடுகள் நடைபெற்ற இடங்கள்!

Tuesday, 29 October 2013 - 0 Comments





முதல் உலக தமிழ் மாநாடு - கோலாலம்பூர் (1966)

இரண்டாவது உலக தமிழ் மாநாடு சென்னை (1968) முதலமைச்சர் அண்ணாதுரை நடத்தினார்

மூன்றாவது உலக தமிழ் மாநாடு - பாரிஸ் (1970) பேராசிரியர் ஜூன் பிலியோசா நடத்தினார்


நான்காவது உலக தமிழ் மாநாடு - யாழ்ப்பாணம் (1974) பேராசிரியர் சு.வித்தியானந்தன் நடத்தினார்

ஐந்தாவது உலக தமிழ் மாநாடு- மதுரை (1981) முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நடத்தினார்

ஆறாவது உலக தமிழ் மாநாடு - கோலாலம்பூர் (1987)

ஏழாவது உலக தமிழ் மாநாடு - மொரிசியஸ் (1989)

எட்டாவது மாநாட்டுடன் தஞ்சாவூர் (1995) முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா நடத்தினார்

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010ல் கோயம்புத்தூரில் நடைபெற்றது. இதனை முதலமைச்சர் மு.கருணாநிதி நடத்தினார்.

தமிழ்த் திரை உலகில் முதன்மைகள்!


முதன்முதலில் தேசிய விருது பெற்ற தமிழ் நடிகை லட்சுமி

முதல் ஆர்வோ கலர் படம் பட்டினப்பிரவேசம் (1977)

முதல் வண்ணப்படம் அலிபாபாவும் 40 திருடர்களும்

முதல் சினிமாஸ்கோப் திரைப்படம் ராஜ ராஜ சோழன் (1973)


முதன் முதலில் செவாலியர் விருது பெற்ற நடிகர் சிவாஜி கணேசன்

முதன் முதலில் ஆறு மொழிகளில் எடுக்கப்பட்ட திரைப்படம் மலைக்கள்ளன்

முதல் 3டி படம் மைடியர் குட்டிச்சாத்தான் (1984)

ஆடல் பாடல் இடம் பெறாத திரைப்படம் அந்த நாள்

நாடுகளின் பழைய பெயரும் புதிய பெயரும்!

   1.டச்சு கயானா  — சுரினாம்.

  2.அப்பர் வோல்டா — புர்க்கினா பாஸோ

  3.அபிசீனியா — எத்தியோப்பியா

  4.கோல்டு கோஸ்ட் — கானா

  5.பசுட்டோலாந்து — லெசதொ 

  6.தென்மேற்கு ஆப்பிரிக்கா — நமீபியா

  7.வட ரொடீஷியா — ஜாம்பியா

  8.தென் ரொடீஷியா — ஜிம்பாப்வே

  9.டாங்கனீகாம,சன்ஸிபார் — தான்சானியா

  10.கோட்டே டி ஐவோயர் — ஐவரி கோஸ்ட்

  11.சாயிர் — காங்கோ

 12.சோவியத்யூனியன் — ரஷ்யா

 13.பர்மா — மியான்மர்

 14.கிழக்கு பாக்கிஸ்தான் — பங்க்களாதேஷ்

 15.சிலோன் — ஸ்ரீலங்கா

 16.கம்பூச்சியா — கம்போடியா

 17.பாரசீகம்,பெர்ஷியா — ஈரான்

 18.மெஸமடோமியா — ஈராக்

 19.சயாம் — தாய்லாந்து

 20.பார்மோஸ — தைவான்

 21.ஹாலந்து — நெதர்லாந்து

 22.மலாவாய் — நியூசிலாந்து

 23.மலகாஸி — மடகாஸ்கர்  

 24.பாலஸ்தீனம் — இஸ்ரேல்

 25.டச் ஈஸ்ட் இண்டீஸ் — இந்தோனேசியா

 26.சாண்ட்விச் தீவுகள் — ஹாவாய்

 27.அப்பர் பெரு — பொலிவியா

 28.பெக்குவானாலாந்து — போட்ஸ்வானா 


Monday, 28 October 2013

அறிவியல் மேதை சர்.சி.வி.ராமன்!

Monday, 28 October 2013 - 0 Comments


நவீன உலகின் பெரும்பாலான கூறுகள் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. நேற்று வரை தெரியாதிருந்ததை இன்று தெரிய வைப்பதுதான் விஞ்ஞானம். இயற்கையின் அடிப்படைகள் என்றும் மாறுவதில்லை. அந்த மாறாத அடிப்படைகளை நமக்கு விளக்குவதுதான் விஞ்ஞானம். விளக்குபவர்கள்தான் விஞ்ஞானிகள். ஒவ்வொரு தேசமும் பல விஞ்ஞானிகளை உலகுக்குத் தந்திருக்கின்றன. அவ்வாறு நமது இந்திய தேசம் உலகுக்குத் தந்தவர்களில் முதன்மையானவர் 'சர்' சி.வி. ராமன்.


1888 ஆம் ஆண்டு நவம்பர் 7ந்தேதி தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் பிறந்தார் சந்திரசேகர வெங்கட ராமன். அவரது தந்தைக்கு அறிவியலிலும், கணிதத்திலும் மிகுந்த ஆர்வம் இருந்தது. இளம்வயதிலேயே அறிவுக்கூர்மை மிகுந்தவராக இருந்தார் சி.வி. ராமன். 1904 ஆம் ஆண்டு அவருக்கு பதினாறு வயதானபோது அவர் சென்னையின் பிரசிடென்சி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். அந்த ஆண்டில் அவருக்கு மட்டுமே முதல் நிலை தேர்ச்சியும், தங்கப்பதக்கமும் கிடைத்தன. அதே கல்லூரியில் அவர் பல சாதனைகளை முறியடித்து பெளதிகத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். சி.வி. ராமனின் அறிவியல் திறமை இளம்வயதிலேயே வெளிப்பட்டது. அவருக்கு 18 வயதானேபோது அவருடைய முதல் ஆய்வு அறிக்கை லண்டனில் அறிவியல் சஞ்சிகையில் பிரசுரமானது. அப்போதே அறிவியல் உலகம் அவரை கவனிக்கத் தொடங்கியது.

பின்னர் ஒளி, ஒலி, காந்தசக்தி ஆகியவற்றில் பல ஆராய்ச்சிகளை செய்தார். அவருக்கு அதிக சம்பளத்தில் அரசாங்க வேலை கிடைத்தாலும் சிறிது காலத்தில் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். 1914 ஆம் ஆண்டு கல்கத்தாவில் ஒரு புதிய அறிவியல் கல்லூரி நிறுவபட்டபோது அதன் தலைமை ஆசியராக நியமிக்கப்பட்டார். 1921-ல் அவருக்கு முனைவர் பட்டம் கிடைத்தது. 1924-ல் லண்டன் ராயல் கழகம் அவருக்கு கெளரவ உறுப்பினர் தகுதியை வழங்கியது. அறிவியலில் அவர் ஆற்றிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் 1929 ஆம் ஆண்டில் இந்தியாவில் செயல்பட்ட பிரிட்டிஷ் அரசாங்கம் ராமனுக்கு 'சர்' பட்டம் வழங்கி கவுரவித்தது. சர் சி.வி. ராமன் பல்வேறு ஆராய்ச்சிகளில் எப்போதுமே ஈடுபட்டிருந்தார்.



சூரிய ஒளி தண்ணீரிலும், ஐஸ் கட்டியிலும், மற்றப்பொருட்களிலும் எவ்வாறு பயணிக்கிறது என்பதை ஆர்வத்துடன் ஆராய்ந்தார். ஒளி அவ்வாறு பல்வேறு பொருட்களில் பயணிக்கும்போது புதிய கோடுகள் உருவாவதை அவர் கணித்துக் கூறினார். அந்த முக்கியமான கண்டுபிடிப்புக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது. அந்தக் கோடுகள் "ராமன் கோடுகள்" என்றும், அந்த விளைவு "ராமன் விளைவு" என்றும் இன்றும் அழைக்கப்படுகிறது. அந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்தது 1928 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ந்தேதி. அந்த அரும் கண்டுபிடிப்புக்காக சர் சி.வி. ராமனுக்கு 1930 ஆம் ஆண்டு பெளதிகத்துக்கான 'நோபல் பரிசு' வழங்கப்பட்டது. நோபல் பரிசை வென்ற முதல் தமிழர் சர் சி.வி. ராமன் என்பதும் குறிப்பிடதக்கது. அவருக்கும், இந்தியாவுக்கும் பெருமை தேடித்தந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்த பிப்ரவரி 28-ம் தேதியை சிறப்பிக்கும் வகையில், தேசிய அறிவியல் தினமாக ஒவ்வொரு ஆண்டும் நமது அரசு கொண்டாடுகிறது.

இந்தியாவில் அப்போது அறிவியல் ஆராய்ச்சிக்கு உகந்த சூழ்நிலை நிலவாததால் நமது தேசத்தில் எதுவும் பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ முடியாது என்பதுதான் விஞ்ஞானிகளின் அனுமானமாக இருந்தது. அந்த எண்ணத்தை தகர்த்ததால் சர் சி.வி.ராமனின் அறிவியல் பங்களிப்பு இந்தியாவுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கும் மிகப்பெரிய ஒன்றாக கருதப்படுகிறது. அதே கண்டுபிடிப்புக்காக லண்டன் ராயல் கழகம் சர் சி.வி. ராமனுக்கு 'ஹியூம்' பதக்கம் வழங்கி சிறப்பித்தது. இந்திய அரசாங்கம் அவருக்கு 1954-ல் “பாரத ரத்னா” விருது வழங்கியது. 1958 ஆம் ஆண்டு “லெனின் அமைதி” பரிசையும் வென்றார் சர் சி.வி. ராமன். 1943-ல் அவரது பெயரிலேயே ராமன் ஆராய்ச்சிக் கழகம் பெங்களூரில் நிறுவப்பட்டது. அந்தக்கழகத்தில் அவர் தன் வாழ்க்கை முழுவதும் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டார். இந்தியாவிற்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்த சர் சி.வி. ராமன் 1970 ஆம் ஆண்டு நவம்பர் 21ந்தேதி பெங்களூரில் காலமானார்.

“ராமன் விளைவு” என்ற அவரது அறிவியல் கண்டுபிடிப்பு உலகின் தொழிற்துறை வளர்ச்சியில் பெரும் பங்காற்றியிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர் என்ற தகுதியை ஒரு தமிழனால் பெற முடியும் என்பதை வாழ்ந்து காட்டியவர் சர் சி.வி. ராமன். பிறப்பிலேயே அவர் அறிவுக்கூர்மை உடையவராக இருந்தாலும், அவரிடம் விடாமுயற்சி, கடும் உழைப்பு, தன்னம்பிக்கை போன்ற நல்ல குணங்களும் இருந்தன. இவையெல்லாம் சேர்ந்ததால்தான் அவரால் பிரகாசிக்க முடிந்தது. அறிவியல் வரலாற்றில் இடம் பிடிக்க முடிந்தது. சர் சி.வி. ராமன் அளவுக்கு நமக்கு அறிவுக்கூர்மை இல்லாவிட்டாலும்கூட விடாமுயற்சியோடு தன்னம்பிக்கையுடன் கடும் உழைப்பையும் நம்பினால் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படாமல் போகாது.

முக்கிய வெளிநாட்டு தூதுவர்களும், பயணிகளும்!


மெகஸ்தனிஸ் :
கிரேக்க தூதுவர்
நாடு : கிரேக்கம்
காலம் : மெளரியர் ஆட்சிக்காலம்

தாலமி :
கிரக்க பயணி
நாடு : கிரேக்கம்
காலம் : 2ஆம் நூற்றாண்டு



பாஹியான் :
சீனப் பயணி
நாடு : சீனா
காலம் : சந்திரகுப்தர்

யுவான் சுவாங் :
சீனப் பயணி
நாடு : சீனா
காலம் : ஹர்ஷர்

இட்சிங் :
சீனப் பயணி
நாடு : சீனா
காலம் : ஹர்ஷர்

அல்பெருனி :
நாடு : மத்திய ஆசியா
காலம் : கஜினிமுகமது

வெனிஸ் பயணி
நாடு : வெனிஸ்

இபின்படூடா :
மொராக்கோ பயணி
காலம் : துக்ளக்

ult, m


உங்களுக்கு எத்தனை காந்தியை தெரியும்?




அமெரிக்க காந்தி - மார்டின் லூதர் கிங்


ஆப்பிரிக்க காந்தி - கென்னத் காண்டா


தென் ஆப்பிரிக்க காந்தி- நெல்சன் மண்டேலா

 
 
எல்லை காந்தி-கான் அப்துல் கபார்கான்


தென்னாட்டு காந்தி - அண்ணா

 
 
தமிழ்நாட்டு காந்தி- திரு.வி.க
 
 
கருப்பு காந்தி - காமராஜர்


காந்திய கவிஞர்-நாமக்கல் கவிஞர்

Subscribe

புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

© 2013 கல்லாப்பெட்டி. All rights reserved.